உங்கள் வருகைக்கு நன்றி

குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானது

புதன், 8 நவம்பர், 2017

குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானது, அந்தக் குழந்தையுடன் நன்கு உரையாடல் நிகழ்த்துவது. பேசப் பேசத்தான் அந்தக் குழந்தையுடன் நெருக்கமான ஸ்நேகம் பெற்றோர்க்குக் கிடைக்கும். அந்த உரையாடல்களே பிள்ளையின் மனதை நன்கு புரிந்துகொள்ள உதவும். மேலும், அதன் தேவை என்னவென்பதையும் உணர்த்தும். சில விஷயங்களைப் பெற்றோரிடம் கூற, குழந்தை தயங்கிக்கொண்டிருக்கலாம். அந்தத் தயக்கத்தை உடைக்க வேண்டியது குழந்தை வளர்ப்பில் அவசியம்.

பெற்றோர், தங்கள் பிள்ளை பள்ளிக்குச் செல்லும்போது பல ஆலோசனைகளைச் சொல்லி அனுப்புவார்கள். ஆனால், பள்ளி விட்டு வந்த குழந்தையிடம், 'ஏதாவது பொருளைத் தொலைத்துவிட்டாயா... மதியம் சாப்பிட்டியா...' போன்ற வழக்கமான சில கேள்விகளைத் தவிர வேறெதும் கேட்பதில்லை. அது சரியானதல்ல. குழந்தை சொல்லத் தயங்கும் அல்லது சொல்ல நினைக்கும் விஷயங்களைப் பெற்றோர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த உரையாடலைத் தொடங்க இந்த 5 கேள்விகள் உதவும்.

சிறுநீரை அடக்கிக்கொண்டிருந்தாயா?: இது முக்கியமான கேள்வி. சிறுநீர் கழிக்க எனப் பள்ளியில் இடைவேளை விடுவார்கள். ஆனால், அந்த நேரத்தில் உங்கள் குழந்தைக்குச் சிறுநீரை வெளியேற்றும் உணர்வு வந்திருக்காது. மேலும், அந்த நேரத்தில் ஏதேனும் விளையாடிக்கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. 'பெல்' அடித்ததும் வகுப்பில் உட்கார்ந்த, சில நிமிடங்களில் சிறுநீர் வெளியேற்ற வேண்டிய சூழல் வந்திருக்கலாம். ஆனால் ஆசிரியரிடம் கேட்க பயந்துகொண்டு இரண்டு பாடப் பிரிவுகள் முடியும்வரை காத்திருந்திருக்கலாம். இப்படிச் செய்வது உடல் நலத்துக்குக் கேடு என்பதோடு, அந்த நேரத்தில் நடத்தப்படும் பாடத்தையும் புரிந்துகொள்ள முடியாது. எனவே, இந்தக் கேள்வியைக் கேட்க மறக்காதீர்கள்.
உன் உணர்வுகளை யாராவது அவமதித்தார்களா?: 
குழந்தைகள் மெல்லிய மனம் கொண்டவர்கள். அவர்களின் உணர்வுகளுக்கு அவசியம் மதிப்பளிக்க வேண்டும். அவர்கள் செய்யாத தவறுக்கு ஆசிரியர் திட்டியிருக்கலாம். அவர்களின் நிறம், எடை, உயரம் ஆகியவற்றை வைத்து சக மாணவர்கள் கேலி செய்திருக்கலாம். எனவே இந்தக் கேள்வியை எழுப்பி, அப்படியேதும் நடந்திருப்பின் அதைச் சரி செய்ய முயலுங்கள்.
யார் உணர்வையாவது நீ காயப்படுத்தினாயா?: 
முந்தையக் கேள்வியைப் போலவே இதுவும் அவசியம். அப்படி யாரையேனும் கேலி செய்திருந்தால், தன் உணர்வுகளைப் போலவே அடுத்தவர் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். அட்வைஸாக அல்லாமல் அன்பாகக் கற்றுக்கொடுங்கள்.   
யாருக்காவது நன்றியோ, ஸாரியோ சொன்னியா? 
பள்ளியில் ஆசிரியர் அல்லது சக மாணவர்களிடமிருந்து ஏதேனும் உதவி பெற்றிருந்தால் அதற்கு நன்றி கூறியிருக்க வேண்டும். அதேபோல தன்னால் யாருக்கேனும் சிறு கஷ்டமாயிருந்தாலும் அதற்கு ஸாரி சொல்லிருக்கவும் வேண்டும். இந்தப் பண்பு நல்ல நட்பை உங்கள் குழந்தைக்குப் பெற்றுத்தரும். ஆசிரியர்களிடம் நல்ல மதிப்பையும் பெற்றுத்தரும்.
பள்ளி விதிகளை மீறினாயா? 
பள்ளியின் விதிகளைப் பின்பற்றுவது ஒவ்வொரு மாணவரின் கடமை. அதை உங்கள் குழந்தை இன்றைக்குச் செய்தார்களா... தவிர்க்க முடியாத சூழலில் விதிகளை மீறினார்களா... எனக் கேளுங்கள். சில விதிகள் குழந்தைக்குக் கடுமையாக இருக்கலாம். அதை அவர்கள் உங்களிடம் சொன்னால், பள்ளியின் நிர்வாகிகளுடன் அதுகுறித்துப் பேசுங்கள்.  

Read more...

கட்டுக்குள் இல்லாத நீரிழிவு?

பொருளாதார வளர்ச்சி,  நம் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றி விட்டது. தினசரி வாழ்க்கையில், நாம் அதிகம் சிரமப்பட தேவை இல்லா வகையில், எல்லா வேலைகளும் எளிதாகி விட்டன; இதனால், உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து விட்டது. துரித உணவு கள், மென் பானங்கள், செயற்கை உணவுகள், அதிக அளவில் அரிசி, சர்க்கரை சாப்பிடுவது, எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள், என, இவையெல்லாம், 'ஒபிசிட்டி' எனப்படும், உடல் பருமனை ஏற்படுத்தி, முடிவில், நீரிழிவு கோளாறை ஏற்படுத்துகின்றன.
வயதானவர்களுக்கு மட்டுமே வந்த நீரிழிவு பிரச்னை, நடுத்தர வயதினருக்கு வந்தது. தற்போது, இளம் வயதினர்கள் மற்றும் டீன் - ஏஜ் பருவத்தில் இருப்பவர்கள் என்று பாதிக்கப்பட்டு, தற்போது, குழந்தைகளையும் அது பாதிக்கிறது. 
நீரிழிவு கோளாறு வந்தால், அது சிக்கலான உடல் பிரச்னையாக மாறுவதற்கு, 20 ஆண்டுகள் ஆகும். இளம் வயதிலேயே இந்தப் பிரச்னை வரும்போது, நடுத்தர வயதை நெருங்கும்போது, நீரிழிவு பல சிக்கலான உடல் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இதனால், அவரின் சுய முன்னேற்றத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்.
உங்கள் வயது, தினமும் உடற்பயிற்சி செய்பவரா, உங்கள் பெற்றோருக்கு நீரிழிவு உள்ளதா, என்ற எளிமையான கேள்விகளுக்கு கிடைக்கும் பதில், நீரிழிவு நோயாளியா, இல்லையா என்பதை சொல்லி விடும். ஆண்களுக்கு, இடுப்பின் சுற்றளவு, 90 செ.மீ,க்கு குறைவாகவும், பெண்களுக்கு, 80 செ.மீ.,க்கு கீழேயும் இருந்தால், நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு, 50 சதவீதத்திற்கும் குறைவு.

அதிக தாகம், களைப்பு, ஆறாத புண், பாதங்கள் மரத்து போதல், எரிச்சல், கால்களில் காயம் மற்றும் கட்டி போன்றவை நீரிழிவு வருவதற் கான அறிகுறிகள்.புகை பிடிப்பதோ, மது அருந்துவதோ கூடாது. முடிந்த அளவு அரிசி உணவைத் தவிர்ப்பது அல்லது குறைவாக சாப்பிடுதல் நல்ல பலனை தரும். ஒரே இடத்தில், அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது தவறான பழக்கம். 

செயற்கை குளிர் பானங்களை தவிர்ப்பது; குறைந்தது, தினமும், 350 கிராம் பழங்கள் சாப்பிடுவது; தினமும் நடைப்பயிற்சி, போதிய துாக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை பின்பற்றினால், நீரிழிவு வருவதை தடுக்கலாம்!

Read more...

வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி

வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி!!!
# அதன் முக்கியத்துவம்!!!
வாரிசுகள் யார் என்பதை தனியாக வேறு தெரிந்து கொள்ள வேண்டுமா?
இதில் என்ன குழப்பம் என்கிறீர்களா? ஆனால் யாரெல்லாம் வாரிசாக முடியாது அல்லது வாரிசு என்பதற்கான சட்ட அனுமதிகள் ஏன் வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டால் வாரிசு சான்றிதழின் அவசியம் புரிந்து விடும்.
# வாரிசுச்சான்றிதழ் முக்கியத்துவம்!!!
அரசுப் பணியிலிருந்து ஒருவர் இறந்துவிடுகிறார்.
முன்னுரிமை அடிப்படையில் அந்த வேலைக்கு அவரது மகனோ/ மகளோ வாரிசு என்கிற அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கி அல்லது நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தவர் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார்.
இப்போது அந்த சொத்தை வாரிசுகள் பெற வேண்டும்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இவருக்கு இவர்தான் வாரிசு என்கிற வாய்மொழி உறுதியின் மூலமோ அல்லது வழக்கமான குடும்ப ஆவணங்களின் மூலமோ மட்டும் உறுதிபடுத்த முடியாது.
சட்டபூர்வமான வாரிசு சான்றிதழ் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தேவைப் படுகிறது.
நேரடியாக இன்னாருக்கு இவர்தான் வாரிசு என்று குடும்ப ஆவணங்கள் சொன்னாலும், சில சிக்கலான நிலைமைகளில் சொத்துகளை / உரிமையை அனுபவிப்பதற்கு இந்த சான்றிதழ் தேவைப்படுகிறது.
இந்த வாரிசு சான்றிதழ் வட்டாட்சியர் மூலமாக வாங்க வேண்டும்.
வாரிசு சான்றிதழ் கோருபவருக்கு உள்ள உறவு நிலை, குடும்ப உறுப்பினர்கள், சட்ட சிக்கல்கள் போன்றவற்றை ஆராய்ந்து இந்த சான்றிதழை அவர் வழங்குவார்.
ஆனால் வாரிசுச் சான்றிதழ் வாங்குவதற்கு நீதிமன்றம் வரை செல்வதற்கான காரணங்களும் உள்ளன.
எந்தெந்த சூழ்நிலைகளில் நீதிமன்றம் மூலம் வாரிசு சான்றிதழ் தேவையாக இருக்கிறது
ஒரு ஆண் இறந்துவிட்டார் அல்லது காணாமல் போனவர் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் என்றால் அவர் மூலமான சொத்துக்கள் மற்றும் பண பலன்களை பெறுவதற்கு சட்டபூர்வமான சான்றிதழ் தேவை.
தங்களது சொத்துகள் குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு தெரிந்துகொள்ளும் வாரிசுகள் அதன் மீதான உரிமை பெறுவதற்கு வாரிசு சான்றிதழ் தேவை
# யாரெல்லாம் வாரிசுகள்!
ஒரு ஆண் இறந்துவிட்டால் அவரது அப்பா, அம்மா, மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் வாரிசுகளாக கருதப்படுவார்கள்.
இறந்தவரின் இரண்டாவது மனைவி மூலம் குழந்தைகள் இருப்பின் அந்த குழந்தைகளும் வாரிசாக கருதப்படுவர். இந்த வகையில் நேரடி வாரிசுகள் இல்லாதவர்களுக்கு அவர்களது நெருங்கிய ரத்த உறவுமுறை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் வாரிசு உரிமை கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.
இறந்தவரின் பெயரிலுள்ள முதலீடுகள், வங்கி சேமிப்பு, மற்றும் பண பலன்களை வங்கி அல்லது சம்பந்தபட்ட நிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவு பெறாத வாரிசுகளுக்கு அவற்றை உரிமை மாற்ற தயங்குவார்கள்.
ஒருவருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கும்பட் சத்தில் இவர்களில் யாரேனும் ஒருவரிடம் கொடுக்க முடியாது.
அல்லது பிற்காலத்தில் வேறு நபர்கள் உரிமை கோரி வந்தால் என்ன செய்வது என்கிற சந்தேகமும் நிறுவனங்களுக்கு ஏற்படும்.
இதனால் சம்பந்தப்பட்ட வாரிசுகள் நீதிமன்றத்தை அணுகி சட்டபூர்வ உரிமை வாங்கி வருவது இறங்குரிமை சான்றிதழ் எனப்படுகிறது .
இதனைப் பெறுவதற்கு 20 ரூபாய் பத்திரத்தாளில் இறந்தவருடைய வாரிசுகள்
அனைவரும் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவரிடம் பண
பலன்களை அல்லது வேலையை கொடுப்பதற்கு தங்களுக்கு எந்தவித
ஆட்சேபணையும் இல்லை என்று உறுதி செய்து கையொப்பம் இட்டு
சம்பந்தப்பட்ட வட்டாட்சி அலுவலர் அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இறந்தவரின் வாரிசுகள் நேரடியாக வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து வாரிசு சான்றிதழ் வாங்கலாம்.
இதற்கு சட்டபூர்வமான குடும்ப ஆவணங்களே சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படும்.
ஆனால் குறிப்பிட்ட நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந்து அவர்களுக்குள் வாரிசு குழப்பங்கள் ஏற்பட்டால் வட்டாட்சியர் விண்ணப்பத்தை நிராகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
அதுபோல காலம் கடந்து வாரிசு சான்றிதழ் கேட்கிறபோதும், சொத்துக்கான உரிமையாளர் இறந்த தேதி தெரியாமல் இருந்தாலும் வட்டாட்சியர் வாரிசு சான்று விண்ணப்பித்தை நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இதுபோன்ற நிலைமைகளில் நீதிமன்ற உத்தரவு பெற்று வருபவருக்கு வாரிசு சான்றிதழை வட்டாட்சியர் வழங்குவார்.
குறிப்பிட்ட சொத்தின் உரிமையாளருக்கு பல வாரிசுகள் இருந்து அவர்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும் போது ஒரே உத்தரவின் மூலமும் நீதிமன்றம் வாரிசுகளை அறிவிக்கச் செய்யும்.
குறிப்பாக முன்னுரிமை அடிப்படையில் குடும்பத்தின் மூத்த நபர் வாரிசாக அறிவிக்கப்படுவார்.
போலியான ஆவணங்கள் மூலம் வாரிசு சான்றிதழ் பெறப்பட்டிருப்பின் அந்த சொத்துக்களின் உண்மையான வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றதை அணுகி அந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்யவும் முடியும்.
--- வழக்கறிஞர் பாண்டியன்
தமிழக அறப்போர் இயக்கம்


Read more...

குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வதே நல்லது.

குழந்தைகள் தங்கள் சூழலைப் பொறுத்தே, தங்களை வடிவமைத்து கொள்கின்றனர். எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கே, தாங்கள் செய்வது சரியா, இல்லையா என்பதை
பிரித்தறியத் தெரியும். குழந்தைகள் சுட்டித்தனமாகப் பேசுவதை, தொலைக்காட்சிகளில் ரசிக்கப்படுவதைப் போல காட்டுவதால், அதைப் பார்க்கும் மற்ற குழந்தைகளும், பெற்றோரும் அது தான் சரியானது எனவும், அப்படி இருந்தால் தான், தங்களைக் கொண்டாடுவர் எனவும், பொய்யான கற்பிதங்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.
குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்தைப் பொறுத்து அவர்களை, 'ஹைப்பர் ஆக்டிவ், ஓவர் ஆக்டிவ்' என சொல்லலாம். அதிக வேலைகளில் ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கும் ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகள், எதையும் முழுமையாக செய்யாமல் கவனச் சிதறல்கள் கொண்டவர்களாக இருப்பர்.
குழந்தைகளின் உலகம், வீடு, பள்ளி, சமூகம், சூழலின் அடிப்படையில் தான், மாறுபடுகிறது. குழந்தைகள் தாங்கள் செய்யும் செயல் சரியா, தவறா என, தெரியாமல் பெற்றோர், ஆசிரியர் காட்டும் வழிகாட்டுதலின் படியே தங்களை வடிவமைத்துக் கொள்கின்றனர்.
குழந்தைகள் வயதுக்கு மீறி செய்யும்போது, பெற்றோர் அதைக் கவனிக்காமல் இருந்தாலோ, ஊக்கப்படுத்தினாலோ குழந்தைகள் அதை சரியென எடுத்துக் கொள்கின்றனர். ஐந்து முதல் எட்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, தாம் செய்யும் தவறுகளால் ஏற்படும் அவமானம் குறித்துப்
புரிவதில்லை. அதனால், தனக்கு கிடைக்கும் சுதந்திரம், சூழல் பொறுத்தே அக்குழந்தைகள், தங்கள் செயல்களை செய்ய ஆரம்பிக்கின்றனர்.
ஓவர் ஆக்டிவ் குழந்தைகள் ஒரே விஷயத்திலோ, பல விஷயங்களிலோ கவனம் செலுத்துவர். ஆனால், ஒரு வேலையில் ஈடுபடும்போது அதை முழுமையாக உள்வாங்காமல், அடுத்த வேலையில் ஈடுபட மாட்டார்கள்.
இத்தகைய குழந்தைகள் பன்முகத் திறமைசாலிகளாக இருந்தாலோ, ஒரே துறையில் திறமைசாலிகளாக இருந்தாலோ அதில் முழுமையான, தேர்ந்த அறிவைப்
பெற்றிருப்பர். ஆக, குழந்தைகள் எந்த வகையை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அதுபற்றி கவலை கொள்ள தேவையில்லை. குழந்தைகளை, குழந்தை
களாக இருக்க விடுவதே சரி. குழந்தைகளை கண்டிக்க ஆரம்பித்தால், அவர்கள் தங்கள் செயலை, பெற்றோருக்கு தெரியாமல் செய்ய ஆரம்பித்து விடுவர். அதைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்ய மாட்டார்கள். எனவே, குழந்தைகள் ஏற்கும்படி, புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துச்
சொல்வதே நல்லது.


Read more...

குளிர்கால நோய்களை வரவிடாமல் செய்ய.

புதன், 1 நவம்பர், 2017

குளிர்கால நோய்களை வரவிடாமல் தடுக்கும் சமையல் பொருட்கள் மழை, குளிர் காலத்தில், ஜலதோஷம், காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் சுத்தமில்லாத தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் உள்ளிட்டவை அதிகம் வரும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும், வெப்பமும் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.

குளிர்காலங்களில் மசாலா காரத்தை குறைத்து, மிளகு காரத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறி சூப்பில் சிறிதளவு இஞ்சி, பூண்டு மற்றும் மிளகுத்துாளை சேர்த்துக் கொடுத்தால், குழந்தைகள், பெரியவர்களுக்கு இன்பெக்க்ஷன் வராது; சளியும் வராது; காய்ச்சலும் வராமல் தடுக்க முடியும். இது, குளிர்காலங்களில் வருகிற உடம்பு வலியையும் போக்கும்.

இஞ்சி, மிளகு, திப்பிலி, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து தொடர்ந்து குடித்தால், குளிர்காலத்தில் எந்த பிரச்னையும் நம்மை அண்டாது. மேலும், கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிப்பது நல்லது. கொதிக்க வைத்த தண்ணீரில், 10 மிளகை போட்டு, ஒரு நாள் இரவு முழுக்க அப்படியே வைத்தால், தண்ணீரில் இருக்கிற அசுத்தம், கிருமிகளை மிளகு உறிஞ்சி விடும். இந்த தண்ணீரை குடித்தாலே, பாதி பிரச்னைகள் வராது. இந்த தண்ணீரை தினமும் செய்து பயன்படுத்துவது  நல்லது.  முதல் நாள் இரவு, ஒரு டம்ளர் தண்ணீரில், 10 துளசி இலைகளை போட்டு, மறுநாள் காலையில் குடித்தால், டைபாய்டு, மலேரியா கூட, உங்களை நெருங்காது. சீரகத் தண்ணீரை குடித்தாலே, குளிர்காலத்தில் வருகிற பல பிரச்னைகளுக்கு, 'குட் பை' சொல்லலாம். இஞ்சி அல்லது சுக்கை தண்ணீரில் போட்டு, பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து சாப்பிட்டால், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சளி பிடிக்காது. சளி பிடித்தவர்களுக்கும் இதுதான் நிவாரணம். தவிர, குளிர் காலங்களில் ஜீரண சக்தி மெதுவாகத்தான் இருக்கும். சிலர்,  இந்த, 'சீசனில்' தண்ணீர் அதிகம் குடிக்க மாட்டார்கள். இதனால் மலச்சிக்கல் வரும். இவர்களுக்கும் இஞ்சி தான் சிறந்த தீர்வு.
வெதுவெதுப்பான தண்ணீரில், வீட்டில் அரைத்த மஞ்சள் துாளை ஒரு சிட்டிகை சேர்த்து தினமும் குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதோடு, உடம்பிலிருந்து விஷத்தையும் எடுக்கும். தவிர, மூட்டு வலி, துாக்கமின்மை, சூரிய வெளிச்சம் உடம்பில் படாததால் வருகிற சோம்பல், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளையும் தீர்க்கும்.
வெந்தயம் குளிர்ச்சி தான் என்றாலும், ஒரு தேக்கரண்டி வெந்தயப் பொடியை சுடுநீரில் கலந்து, தேன் சேர்த்து குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி, உடலில் அதிகரிக்கும். தவிர, மலேரியா காய்ச்சலை எதிர்க்கிற நோய் தடுப்பு சக்தி, வெந்தயத்தில் இருக்கிறது.


Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets