உங்கள் வருகைக்கு நன்றி

கையில் மொபைல் போனுடனோ, லேப்டாப்புடனோதான் உங்கள் நேரம் கழிகிறதா?

வியாழன், 5 அக்டோபர், 2017

ம்முடைய வாழ்க்கையை 1990 -க்கு முன்பு, 1990-க்குப் பின்பு என்று இரண்டாகப் பிரிக்கலாம். 1990-க்கு முன்பு பிறந்தவர்கள் கிரிக்கெட் பேட்டுடனோ, டென்னிஸ் பேட்டுடனோ, வாலிபாலுடனோ தங்கள் பொழுதுகளைக் கழித்திருப்பார்கள். 1990-க்குப் பின் பிறந்தவர்களின் நிலை வேறு மாதிரி. பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியேறுவதே இல்லை.

கையில் மொபைல் போனுடனோ, லேப்டாப்புடனோதான் அவர்களின் நேரம் கழிகிறது. விளையாடுவதாக இருந்தால் கூட ஆன் - லைனில்தான் விளையாடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, மன ஆரோக்கியமும்தான். அதிக அளவு இணையத்தைப் பயன்படுத்துவதும், இணையம் இல்லாமல் இருக்கவே முடியாது என்பதும், மது, புகை போல ஒருவித அடிமைப்பழக்கம்தான் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். 
இணையதள அடிமைப் பழக்கத்தைப் பற்றி முதன்முதலில் 1995 - ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மனநலவியலாளர்  இவான் கோல்ட்பெர்க் (Ivan K. Goldberg) என்பவர் கண்டறிந்தார். அதற்கு முன்பாக வேதிப்பொருள் அல்லாத, இணையதள  அடிமைப் பழக்கத்தைப் பற்றி முதலில் பேசியவர் இவர்தான். யார் ஒருவர் ஒரு வாரத்துக்கு 38.5 மணி நேரத்துக்கும் அதிகமாக இணையதளத்தைப் பயன்படுத்துகிறாரோ அவர் மனதளவில் அடிமையாக இருப்பார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் நாளடைவில் வேலைக்காக இணையதளம் பயன்படுத்தும் நேரம் அதிகமாவிட்டதால் அப்படி கணக்கிடுவது இயலாத காரியமானது. அதனால் குறிப்பிட்ட அறிகுறிகளை வைத்துக் கணக்கிடப்பட்டது. அந்த அறிகுறிகளைப் பார்ப்பதற்கு முன்பாக  எந்தெந்த விஷயங்களுக்காக அடிமையாகிறார்கள் என்பதை முதலில்  தெரிந்து கொள்வோம்" என்கிறார் மனநல மருத்துவர் திவ்யா தனஞ்செயன்.

எந்தெந்த விஷயங்களுக்காக இணையதளத்துக்கு  அடிமையாகிறார்கள்?
தகவல்களை அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக (web search for information overload), 
கட்டுப்பாடில்லாமல் இணையதள விளையாட்டுக்களை கணினி அல்லது கைபேசியில் விளையாடுவதற்காக (net games addiction),
சூதாடுவதற்காக (online gambling),
விதவிதமான பொருள்கள் வாங்குவதற்காக (shopping),.
பேஸ்புக், ட்விட்டர், மூலம் கிடைத்த இணைய நண்பர்களுடன், உறவுகளுடன் சாட் செய்வதற்காக ((cyber relationship addiction),
பாலின்பத்துக்காக (cyber sex)
இந்தக் காரணங்களுக்காகத்தான்  அதிகளவில் இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள். இந்தப் பழக்கமானது நாளடைவில் இவர்களை அடிமைகளாக மாற்றிவிடும். அதற்குக் காரணம் போதைப்பழக்கத்துக்கு காரணியாய் விளங்கும், மூளையின் இன்ப மையத்தில் (pleasure centre) சுரக்கும் டோபமைன்(dopamine) செயல்பாடும், இன்பம் தரும் எந்தவொரு செயலையும் திரும்பத் திரும்ப செய்ய தூண்டும், செயல்முறைப் பழக்குதல் (operant conditioning) என்ற கோட்பாடும்தான். 

கீழ்கண்ட எட்டு அறிகுறிகளில் ஐந்து அறிகுறிகள்  இருக்குமாயின்  நீங்கள் இணையதளத்துக்கு அடிமையாகியிருக்கிறார்கள்  என்று பொருள். 
1. நாள் முழுவதும் இன்டெர்நெட் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்திருப்பது ((pre occupation).
2. மன திருப்திக்காக, நெட்டிலேயே அதிக நேரத்தை செலவழிப்பது (tolerance)
3.  நெட் உபயோகத்தை குறைக்கவோ, நிறுத்தவோ முயன்று மீண்டும் மீண்டும் தோற்றுப் போவது (loss of control)
4. நெட் உபயோகத்தை குறைக்கவோ நிறுத்தவோ முயன்றால் அமைதியின்மை, மூளை மந்தமாகுதல், மன அழுத்தம், எரிச்சல் போன்ற பாதிப்புகளை உணர்வது (withdrawal)
5.  உத்தேசித்த நேரத்தைவிட அதிக நேரத்தை நெட்டில் செலவிடுவது
6. முக்கிய உறவுகள், தொழில், கல்வி, வேலை வாய்ப்புகளை இழக்கும் அளவுக்கு /ஆபத்து ஏற்படும் அளவுக்கு இணையத்தை உபயோகிப்பது (dysfunction and harmful use)
7. இணையத்தின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டை மறைக்ககுடும்பத்தார் /சிகிச்சை அளிப்பவரிடம் பொய் கூறுவது (lying)
8. பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கவோ/ மன உளைச்சலிலிருந்து விடுபடவோ இணையத்தை உபயோகிப்பது (avoidance/escapism)
யார் யாரெல்லாம் எளிதில் பாதிக்கப்பட கூடியவர்கள் :
வெளிப்படையானவர்கள். இவர்கள் (extrovert) தங்களின் சமூக நிலையை உயர்த்திக்கொள்ள பயன்படுத்திக்கொள்வார்கள்.
கூச்ச சுபாவம் உள்ளவர்கள் (introvert). தன் தாழ்வு மனப்பான்மை, மன குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள பயன்படுத்திக்கொள்ளவார்கள்.
எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள், சுயக் கட்டுப்பாடு குறைவாக உள்ளவர்கள்.
பெற்றோர்/குடும்பத்தினரின் கவனிப்பு இல்லாதவர்கள்.
யதார்த்தத்தை தவிர்ப்பவர்கள்/தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாதவர்கள் (anonymity.)
தனிமை விரும்பிகள்.
மேற்கண்ட அனைவரும் எளிதாக இனையதளத்துக்கு அடிமையாகிவிடுவார்கள்.

அதனால் உண்டாகும் பாதிப்புகள் என்னென்ன ?
நேரத்தை கையாளுவதில் சிரமம் ஏற்படும்;
பொறுப்புக்கள் அனைத்தும்  அரைகுறையாக நிற்கும்
குடும்பத்துடன்/ஆக்கபூர்வமாக செலவுசெய்ய நேரம் இருக்காது.
ஓய்வு நேரத்தில் இணையம் உபயோகிப்பது கடந்து, இணையம் உபயோகிக்காத மீத நேரத்தில் உறங்குவது. இதனால் பல உடல்நலமனநல பாதிப்புகள் உண்டாகும்.
பொய் கூறுவது (குடும்பத்தாரிடமும், இணையத்தில் உள்ளவர்களிடம் தன் போலி அடையாளத்தை பற்றியும்)
மன அழுத்தம், பதற்றம், தாம்பத்திய உறவில் நாட்டமின்மை, தற்கொலை எண்ணங்கள், குடி மற்றும் பிற போதைக்கு அடிமையாதல்
உறவுகள், கல்வி, வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடுதல்
இதிலிருந்து நாம் எப்படி மீள்வது ? பிறரை எப்படி மீட்பது ?
எதிர்மறை நேரம் (practising opposite time) செலவிட பழக்குதல்; ஒருவர் இணையத்தில் செலவிடும் தினசரி முறையைக் கண்டுபிடித்து, அதை படிப்படியாக நீக்கி, அவரது அன்றாட செயல்பாட்டில் அவரது சிந்தனையை கவரும் வகையில் உள்ள மாற்று பழக்கங்களை கண்டறிந்து பழக்க வேண்டும்.
வெளிப்புற தூண்டுபொருள்கள் (External stoppers) கொண்டு நிறுத்த செய்வது. Eg:alarm clock.
இணைய அடிமைப் பழக்கத்தால் கைவிடப்பட்ட அவரது வாடிக்கையான பழக்கவழக்கங்களை (eg: walking, painting, outdoor games) பட்டியலிட வைத்து, அவருக்கு அதனை மீண்டும் தொடங்க வலியுறுத்துவது.
சிறு சிறு இலக்குகளை நிர்ணயித்தல். (Short term goals) வெகு நாள் பழக்கத்தை, ஒரே நாளில் விடுவது கடினம். Eg: நாள் முழுக்க இணையம் உபயோகிப்பவரை, தினமும் மாலை 2 மணி நேரம் மட்டும் உபயோகிக்க வைப்பது.
ஒருசில குறிப்பிட்ட  ஆப்கள் (apps) மட்டுமே மீண்டும் மீண்டும் உபயோகிக்க காரணமாய் இருப்பின், அவற்றை மட்டும் தவிர்த்து (block), பயன் தரும் மற்ற வலைத்தளங்களை பயன்படுத்துவது.
நினைவூட்டல் அட்டைகள் (reminder cards); இதனால் உண்டாகும் நன்மை தீமைகளை, தன் கைப்பட ஒரு அட்டையில் எழுதி வைத்துக்கொண்டு, அதை அடிக்கடி படித்து நினைவூட்டி கொள்வது.
கவனிப்பு அல்லது மேற்பார்வை இல்லாதவர்களை ஆதரவு மற்றும் சுயஉதவி குழுக்களில் (support & self-help groups) சேர்ப்பது.
மன நலப் பிரச்சனைகளுக்கு தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது” என்கிறார் திவ்யா. 
நன்றி
விகடன்

Read more...

பொதுமக்களுக்கு உதவ இணையதளம் !

செவ்வாய், 3 அக்டோபர், 2017

இன்சூரன்ஸ், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் தொலைந்தால், புகார் செய்யும் இணைய தள சேவை.   லைசென்ஸ் போன்ற முக்கியமான அடையாள அட்டையை தொலைந்தாலோ, காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தான் ஆக வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டவர்களால், இன்சூரன்ஸ் பணத்தையோ, புது அடையாள அட்டையோ வாங்க முடியும். அப்படியே புகார் கொடுத்தாலும், ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும் அலைய வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு வாகன விபத்து வழக்கிற்கு, போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தால், வழக்கு பதிவு செய்வர். இதற்கே ஒருநாள் ஆகிவிடும். பின், மோட்டார் வாகன வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் தகவல் அளித்து, விபத்து நடந்த இடம், வழக்கை விசாரிக்கும் அதிகாரியின் கடிதம், சிகிச்சை பெற்ற மருத்துவமனை உள்ளிட்ட, 12 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக தீர்ப்பு வந்ததும், அதை இன்சூரன்ஸ் கம்பெனியில் கொடுத்து, வாங்க வேண்டும். இதற்குள் பல மாதங்கள் ஆகிவிடும். அதேபோல் தான், லைசென்ஸ் தொலைந்தாலும், அலைந்து திரிந்து வாங்க வேண்டும்.  பொதுமக்களுக்கு உதவ, www.tnpolice.gov.in என்ற இணைய தளத்தை உருவாக்கி உள்ளார்கள்.     செப்., 1ம் தேதி 2017 முதல், இந்த இணையதளம் செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டோர், தங்கள் பெயர், முகவரி, புகார் போன்ற விபரங்களை கொடுத்துவிட்டால் தானாக பதிவாகிவிடும். பின்னர் போலீசார் அனைத்தையும் கவனித்து கொள்வர். பாஸ்போர்ட், ஆதார், லைசென்ஸ் போன்ற அடையாள அட்டையை தொலைத்தவர்களுக்கு உடனடியாக, 'லாஸ்ட் டாக்குமென்ட் ரிப்போர்ட்' கிடைத்துவிடும். விபத்து ஏற்பட்டால் மட்டும், ஒரே முறை போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுத்தால் போதுமானது. பின் உங்கள் போன் நம்பரை கொடுக்க வேண்டும். கோர்ட்டிலும், பிற இடங்களில் ஒப்படைக்க வேண்டிய அனைத்து ஆவணங்களையும் போலீஸ் சேகரித்து விடும்.
அதை சரியான நேரத்தில், அந்த இணையதளத்திலும் காவல் துறையால் பதிவு செய்யப்படும். ஆவணங்களை பெற விரும்பினால், அந்த இணையதளத்தில் நம் தொலைப்பேசி எண்ணை பதிவு செய்தால், ஓ.டி.பி., வரும். அதைப் பயன்படுத்தி நாமும் அதை பார்க்கலாம். நெட் பேங்க் வசதியை பயன்படுத்தி, பயனீட்டாளர்கள் ஓர் ஆவணத்திற்கு, 10 ரூபாயும், இன்சூரன்ஸ் கம்பெனிகள், 100 ரூபாயும் கட்டி இணையத்தில் இருந்து, பிரின்ட் எடுத்து கொள்ளலாம். அதன்பின் ஆவணங்கள் சம்பந்தப்பட்ட, 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் வீண் அலைச்சல் தவிர்க்கப்படுவதோடு, நேரமும் மிச்சப்படும். இந்த நடைமுறையை புரிந்து கொள்ள முடியாதவர்கள், அருகில் உள்ள காவல் நிலையம் சென்று அங்குள்ளவர்களிடம் சொல்லி பதிவு செய்யலாம். இதுதவிர, போன் மற்றும், 'இ - மெயில்' முகவரி இரண்டும் இல்லாதவர்கள், தங்களுக்கு தெரிந்தவர்களின் முகவரியை தரலாம்.

Read more...

பெற்றோரே நீங்கள்தான் துணை

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

குழந்தைகளின்பிரச்னைகளை தீர்ப்பது பெற்றோரின் கடமை!
ஆண்ட்ராய்டு மற்றும் கணினி போதையிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க,  
 பெருமைக்காக, குழந்தைகள் கையில் விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு மொபைல் போனைத் தரும்போது, பாதுகாப்பு குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாததால், அவர்களின் உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது.
பிள்ளைகளின் பிடிவாதம், அந்தஸ்து, கல்விக்காக கணினி மற்றும் மொபைல் போனை வாங்கித் தரும் முன், சில முன்னெச்சரிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும். டெக்னாலஜி வாயிலாக, நன்மையும் உண்டு, தீமையும் உண்டு என்பதை, பெற்றோர் முதலில் அறிந்து கொள்ளவேண்டும்
எதற்கெடுத்தாலும் மனம் சுருங்கும் பிள்ளைகளிடம், நேர்மறை வலுவூட்டல் முறையை உபயோகிக்க வேண்டும்.அதாவது, 'இதையெல்லாம் பார்க்காதே, செய்யாதே' என்று கண்டிப்பதற்குப் பதில், 'இதைச் செய், பரிசாக இதைத் தருகிறேன்' என, நேர்மறையாகச் செயல்பட வேண்டும்.
வளர்ந்து நிற்கும் டெக்னாலஜியை, நம் தேவைக்கு வெறும் கருவியாக மட்டும் உபயோகித்தாலே, இம்மாதிரியான பிரச்னைகளுக்குத் தீர்வு வரும். 'ப்ளூ வேல்' என்ற, இந்த விபரீத வலைதள விளையாட்டு கூட, தனக்கு அடிமையானவர்களை மட்டுமே துரத்த முடியும்.
உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும், இந்த ஆபத்துகளை உருவாக்கியவரின் கட்டளையைக் கேட்டு நடக்கும் பிள்ளைகள், நம் பேச்சையும் கேட்பர் என்னும் நம்பிக்கை பெற்றோருக்கு வரவேண்டும்.
அதற்கு அவர்களுடன் அதிக நேரத்தை செலவிட முன்வர வேண்டும். 'போய் விளையாடு' என, தனிமையைத் தருவதற்கு பதில், 'வா விளையாடலாம்' என அழைத்தால், மகிழாத குழந்தைகள் இல்லை.ஓடி விளையாடும் பழக்கத்தை ஊக்குவித்தும்,  விளையாட்டு எழுத்து போன்ற தனித் திறமைகளை கண்டுபிடித்து ஆதர வளித்தும், மனம் விட்டுப் பேசியும், அவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது பெற்றோரின் முக்கியக் கடமை.

'எது வசதி' என்பதை விட, 'எது சரி' என்பதைப் பிள்ளைகளுக்குப் புரிய வையுங்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தால் உடனடி கவனம் வைத்து, தகுந்த ஆலோசனைகள் மூலம் அவர்களை மீட்டெடுங்கள். அன்பும், ஆதரவுமற்ற குழந்தைகளே, பெரும்பாலும் த்ரில்லுக்காகவும், தங்கள் மீதான கவனிப்பை அதிகப்படுத்துவதற்காகவும் தற்கொலை போன்ற விபரீத விளையாட்டுகளில் ஈடுபடுகின்றன. இதை தடுக்க, நவீனடெக்னாலஜி துணையுடன், பெற்றோரின் துணையும் அவசியம்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets