உங்கள் வருகைக்கு நன்றி

சிறுதானிய தொழில்கள்

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

பெங்களூரில் சிறுதானிய பிசினசில் கலக்கும் தோழிகளில் ஒருவரான லதா: சென்னையை சேர்ந்தவள் நான். சி.ஏ., முடித்து, கணவரின் பணி காரணமாக பெங்களூரில் குடியேறினோம். சேலம் மாவட்டம் மோகனுாருக்குப் போனோம். அங்கே, சத்தான சிறுதானியங்கள் மலிவாகக் கிடைப்பதைப் பார்த்தேன். அப்போதுதான், நாங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து, ஒரு பிசினஸ் ஐடியாவை யோசித்தோம். சிறுதானியங்களை விவசாயிகளிடமிருந்து வாங்கி, பெங்களூரில் விற்க முடிவெடுத்தோம். இப்போது, தினமும், 300 லிட்டர் மாவு விற்கும் அளவுக்கு, எங்கள் தொழில் வளர்ந்துள்ளது. எங்களின் இணையதளம், 'டெய்லி நிஞ்சா' மூலமும், 'மொபைல் ஆப்' மூலமாகவும், மாவுகளைப் பெறலாம். இப்போது பெங்களூரு நகரில் உள்ள பிரபலமான ஆர்கானிக் கடைகள், பெரிய கேட்டரிங் நிறுவனங்கள் என, பலரும் எங்களிடம் மாவு வகைகள் வாங்குகின்றனர். அடுத்ததாக, முழுக்க முழுக்கப் பெண்களை மட்டுமே வேலைக்கு அமர்த்தி, தமிழகத்திலும் களம் இறங்க உள்ளோம். செல்வலட்சுமி: விவசாயியான என் அப்பா மூலமாக, சிறுதானியங்களை வாங்கி, முதல் கட்டமாக, எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்போர், குடும்ப நண்பர், உறவினர்களுக்கு விற்பனை செய்தோம். ஆனால், சிறுதானியங்களை எப்படி சமைப்பது என தெரியவில்லை. 'இட்லி, தோசைக்கான மாவாக கிடைத்தால் நன்றாக இருக்குமே' என, இளம் அம்மாக்களும், பணிபுரியும் பெண்களும் கேட்க, வீட்டில் இருந்த கிரைண்டரில் நாங்களே தானியங்களை மாவாக அரைத்து விற்க ஆரம்பித்தோம். நிறைய பேர் வாங்கினர். அவர்களிடம் கருத்து கேட்டு, மாவை மெருகேற்றி, வாடிக்கையாளர்களின் திருப்திக்கேற்ப விற்பனை செய்யும் வித்தையைக் கற்றோம்.சில மாதங்களிலேயே மாவு அரைக்கத் தனி யூனிட் துவங்கி, பெரிய கிரைண்டர்களை வாங்கி தொழிலை விரிவுபடுத்தினோம். 
ஆரம்ப நாட்களில் வேலையாட்கள் சரியாக அமையாத சூழலில், மாவு அரைத்து, பொங்கிப் புளிக்க வைத்து, பாக்கெட்டுகளில் நிரப்பி, காலை, 4:00 மணிக்கெல்லாம் வாடிக்கையாளர்களின் வீடுகளில் டெலிவரி செய்வது வரை படித்து விட்டோம்.

Read more...

பள்ளிக்கு போகாமலே, 'பாஸ்' ஆகும், மாற்று முறை

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

இன்றைய கல்வி முறை, மனப்பாடத்தை மட்டுமே ஊக்குவிக்கும் முறையாக மாறி விட்டது. பல பள்ளிகளில் பாடங்களைச் சரிவர நடத்தாமலே, கேள்வி-- பதில்களை மனப்பாடம் செய்து, மதிப்பெண் பெற வைக்கின்றனர். விளையாட்டு, வேடிக்கை எதுவும், இன்றைய குழந்தைகளின் வாழ்வில் இல்லை. குழந்தைகளை மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக மாற்ற, முயற்சிக்காதீர்கள்    மத்திய அரசின் மனிதவள துறையின் கீழ் இயங்கும், தன்னாட்சி பெற்ற நிறுவனமான, தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம். இங்கு, ஆரம்ப, அடிப்படை கல்வி, 8ம் வகுப்புக்கு சமமானது. உயர்நிலை, மேல்நிலை கல்வியை, வீட்டில் இருந்தவாறே படிக்கலாம். இதில், நமக்கு பிடித்த பாடங்களை தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது. 10ம் வகுப்பிலேயே ஆங்கிலம், தமிழ், ஹிந்தி முதலான, 17 மொழிகளில் விருப்பப்பட்ட ஒன்று அல்லது இரண்டு மொழிகளை தேர்வு  செய்யலாம். கணிதம், அறிவியல், பொருளியல், வணிகவியல், ஓவியம், கணக்குப் பதிவியல் போன்ற, 11 பாடங்களில், 3 - 5 வரை தேர்ந்தெடுத்து படிக்கலாம். மேல்நிலையில் ஒன்பது மொழிகளும், 33 பாடத் துறைகளும் உள்ளன. உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பில், நம் விருப்பத்திற்கும், ஆர்வத்திற்கும் ஏற்ற வகையில், 5 - 7 பாடங்களில் தேர்வு எழுதலாம்.  இந்த முறை படிப்பால் நேரம், தாங்கள் விரும்பியவற்றை கற்கும் வசதியும், சுதந்திரமும் இருக்கிறது. இந்திய மெடிக்கல் கவுன்சில், ஐ.ஐ.டி., முதலான பொறியியல் கல்லுாரிகளுக்கான குழுமம், அனைத்துப் பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றிலும் அங்கீகாரம் பெற்ற அமைப்பு இது. எனவே, இங்கு, 10ம் வகுப்பு முடித்தவர்கள், எந்த மாநிலத்தில் உள்ள பள்ளியிலும், பிளஸ் 1 சேர முடியும். மேல்நிலைப் படிப்பை முடித்தவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த விருப்ப பாடத்திற்கேற்ப, மருத்துவமோ, பொறியியலோ, வணிகவியல் சார்ந்த படிப்புகளையோ தொடர முடியும். இந்தாண்டு, சென்னையில் இருந்து, ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர், தேசிய திறந்தநிலை பள்ளி மாணவர் தான். தங்கள் பிள்ளைகளுக்கு சமூகத்தில் பழக வாய்ப்பு தர வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.   குழந்தைகளை வீட்டில் இருந்தே படிக்க வைக்கலாம். பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று, தனிமையில் இருக்க நேரும் குழந்தைகளுக்கு, இந்த முறை கொஞ்சம் கடினம் தான். இல்லையெனில், இதற்காக தனி வகுப்புகள் ஏற்பாடு செய்ய நேரிடும்.  

Read more...

நீங்கள் சோம்பல் பட்டால் அவ்வளவுதான் குழந்தைகள்.

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

குழந்தைகள் எவ்வளவு சாப்பிட்டாலும், அம்மாக்களுக்கு மனது நிறைவதேயில்லை. 'நிறைய சாப்பிட்டால் தான் குழந்தை நன்றாக வளரும்' என நினைத்து கொண்டிருக்கின்றனர். அதனாலேயே, கிட்டத்தட்ட எல்லா அம்மாக்களுமே, குழந்தைகளுக்கு சாப்பாட்டை திணிக்கவே செய்கின்றனர். ஆனால், இப்படித் திணிப்பது குழந்தைகளுக்கு சாப்பாட்டின் மேல், வெறுப்பை ஏற்படுத்தி விடும்.எனவே, ருசியாக சமைத்து கொடுக்கலாம்; பீட்ரூட், கேரட், ஆரஞ்ச் என, இயற்கையான நிறம் சேர்த்து, கலர் கலராக சமைத்து கொடுக்கலாம். திராட்சை கண்கள், பாதாமில் மூக்கு என்று, இட்லியில் டெகரேட் செய்து, அவர்களை சாப்பிட துாண்டலாம். காலையில் குழந்தை சாப்பிடவில்லை என்றால், லஞ்ச் சரியாக சாப்பிட்டு விடும்;  இது இயல்பானது. குழந்தைகளுக்கு ஒரு கிண்ணத்தில் பருப்பும், நெய்யும், காயும் கலந்து தருவது வழக்கமாக உள்ளது. அதே கிண்ணத்திலேயே மிச்சமிருக்கும் சாதத்தில், தயிரும் கலந்து தருவதும் நடக்கிறது. இப்படி காய்கறி, தயிர், குழம்பு என எல்லாவற்றையும் ஒரே கிண்ணத்தில், உங்களுக்கு கலந்து கொடுத்தால் சாப்பிடுவீர்களாஅதேபோல,  ஒரே மாதிரியான உணவுகளை திரும்பத் திரும்ப கொடுத்து, உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விட வேண்டாம். காக்கா, நாய் என்று பிள்ளைகளுக்கு காட்டி, பாட்டிகள், சாப்பாட்டை வாயில் திணித்து விட்டனர். இந்த கால அம்மாக்கள், 'டிவி' மற்றும் மொபைல்போனை குழந்தைகள் கையில் கொடுத்து, தன்னை மறந்து அதை பார்க்கிற சமயத்தில், உணவை திணித்து விடுகின்றனர். இந்த இரண்டுமே குழந்தைகளை ஏமாற்றி, உணவை வாயில் திணிக்கிற, 'டெக்னிக்' தான். அதற்கு பதிலாக, சாப்பிடும் நேரங்களை குழந்தைகளுக்கு ஒரு கொண்டாட்டமாக மாற்றிக் கொடுக்கலாம். ஓடியாடும்படி, பாட்டு பாடும்படி அல்லது விளையாட்டு காட்டி, கதை சொல்லி என்று சாப்பிடும் நேரத்தை, 'எஞ்ஜாய்' பண்ண வைக்கலாம்.அன்றைக்கு பள்ளியில் என்ன நடந்தது என்று கேட்டபடியே, குழந்தைக்கு சாதம் ஊட்டலாம். விஷயங்களை சொல்லும் சுவாரஸ்யத்தில், குழந்தை சாப்பாட்டை சமர்த்தாக சாப்பிடும்.குழந்தைகளின் முன் நீங்கள், 'டிவி' பார்த்தபடி சாப்பிடக் கூடாது; குழந்தையும் அதையே பின்பற்றும், சரியாகவும் சாப்பிடாது. ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு உணவு பிடிக்கும். சிலருக்கு இட்லி, சிலருக்கு எப்போதும் தோசை அல்லது சப்பாத்தி. எனவே, குழந்தைகளுக்கு பிடித்ததை, செய்து கொடுக்கலாம்.இன்றைக்கு எல்லா குழந்தைகளுக்குமே நுாடுல்ஸ் பிடிக் கிறது. அதனால், இதை மொத்தமாக தவிர்க்க முடியாது. அதற்கு பதிலாக, மாலை நேர சிற்றுண்டியாக மாற்றி கொஞ்சமாக கொடுக்கலாம்.
குழந்தைகளை நன்றாக சாப்பிட வைக்க வேண்டுமென்றால், குழந்தைகளின் ஒன்றரை வயதில் இருந்தே, அவர்களை தானாக அள்ளிச் சாப்பிட பழக்குவதே, முதல் தீர்வு.
குழந்தைகள் சிந்தியபடி தான் சாப்பிடுவர். சிந்தியதை சுத்தப்படுத்த, நீங்கள் சோம்பல் பட்டால், அவர்களை சாப்பிட பழக்க வைக்க முடியாது.



Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets