உங்கள் வருகைக்கு நன்றி

'டயாபர்' அணிவிப்பதால் ஏற்படும் தீமைகள்.

புதன், 28 ஜூன், 2017


'
டயாபர்' அணிவிப்பதால் ஏற்படும் தீமைகள். பெண் குழந்தைகளுக்கு டயாபர் அணிவிக்கும்போது, அது பிறப்புறுப்பைத் தொட்டுக் கொண்டே இருக்கும். இதனால், அந்த இடத்தில் தோலில் அழற்சி - 'டெர்மெடைட்டிஸ்' ஏற்படும். சிறுநீரில் உள்ள யூரியா போன்ற வேறு உப்புகள், குழந்தையின் தோலில் தடிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, பூஞ்சைத் தொற்று - 'டேண்டிடா' ஏற்படுத்தும்.
காற்றோட்டம் இல்லாத ஈரமான இடங்களில் பூஞ்சைத் தொற்று எளிதில் ஏற்படும். பிறப்புறுப்பின் உள்ளே கிருமிகள் சென்று, யூரினரி இன்பெக் ஷனை ஏற்படுத்தக் கூடும். பெண் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு அதிகம்.
அதேபோல், ஆண் குழந்தைகளுக்கு டயாபர் அணிவிக்கும்போது, அது விரை பையில் பட்டு, அதிகச் சூட்டை உண்டாக்கும். இந்தச் சூடு அவர்களுக்கு நல்லதல்ல. இதனால், அணுக்கள் பாதிக்கப்படும்; விந்தணு உற்பத்தியாவது குறைகிறது. இந்தப் பாதிப்பு குழந்தையாக இருக்கும்போது தெரியாது; வளர்ந்து பெரியவர்களான பின் தான் தெரியவரும்.
ஜெல் டெக்னாலஜி உள்ள டயாபரில் உள்ள ரசாயனப் பொருட்கள், குழந்தையின் மென்மையான தோலுடன் வினைபுரிந்து, அதிகமான அழற்சியை ஏற்படுத்தும். மேலும், தளர்வான டயாபர்களே சிறந்தவை. பிளாஸ்டிக் இழைகள் கலந்த, இறுக்கி பிடிக்கும் டயாபர், அரிப்பு, வறட்சி மற்றும் தோல் சிவந்து போதல், புண் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, இதை தவிர்ப்பது நல்லது.
இரவு நேரங்களில் டயாபர் அணிவிக்கும்போது, குழந்தைகள் சிறுநீர், மலம் கழித்தால் அம்மாவுக்கு தெரியாது. ஆனால், குழந்தை அசவுகரியமாக உணரும். கழிவில் உள்ள பாக்டீரியாக்களால் அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு, சிறிது நேரத்திலேயே அந்தக் குழந்தை அழ ஆரம்பிக்கும்.

வெளியூர் மற்றும் விசேஷங்களுக்கு செல்லும்போது, டயாபர் அணிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இச்சூழ்நிலைகளில், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, கண்டிப்பாக டயாபரை மாற்ற வேண்டும். அத்துடன், டயாபரைக் கழற்றியவுடனேயே அடுத்ததை அணிவிக்கக் கூடாது. அரை மணி நேரம் காற்றுப் பட விட்டு, பின்னர் போடவும். சிறுநீரோ, மலமோ குழந்தை போகவில்லை என்பதற்காக, பயன்படுத்தியதையே திரும்பப் போடக் கூடாது.
ஒன்றரை வயது தாண்டிய குழந்தைகளுக்கு, டயாபரைத் தவிர்த்து, 'டாய்லெட் டிரெயினிங்' கொடுக்க வேண்டும். தொடர்ந்து டயாபர் போடும் குழந்தைகளுக்கு, இந்தப் பயிற்சி அளிப்பது தாமதமாகும்.
டயாபர் போடும்போது, சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால், தடிப்பு ஏற்படுவது குறையும் என்பது தவறு. சிறுநீரில் உள்ள யூரியா மற்றும் மற்ற உப்புக்கள், எண்ணெயுடன் வினைபுரிந்து மேலும் பாதிப்பை அதிகரிக்கும்.
டயாபருக்கு மேல் பேன்டீசையும் அணிவிப்பது முற்றிலும் தவறு. இதனால் காற்றோட்டம் சுத்தமாகக் கிடைக்காது. தொடர்ந்து இவ்வாறு அணிவிக்கும்போது, குழந்தைகளின் இரண்டு தொடைகளும் விலகி, அவர்கள் நடையில் மாற்றம் ஏற்படும்.
http://c13.zedo.com/OzoDB/0/0/0/blank.gif


Read more...

ஆதார் கார்டு செயல்படாமல் போகும்?

சனி, 24 ஜூன், 2017

இந்தியாவில் இப்போது ஆதார் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக அனைவரும் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறலாம். ஆம், இன்று அரசு மானியங்கள் முதல் நிதி பரிவர்த்தனைகள் என அனைத்திற்கும் ஆதார் கட்டாயம் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.
சரி, உங்களிடம் ஆதார் கார்டு இருந்தாலும் அது செல்லாத கார்டாக மாற வாய்ப்புள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே எதனால் உங்கள் ஆதார் கார்டு செல்லா கார்டாக மாறும்?, எப்படி அதனை மீண்டும் முறையாக இயங்க வைப்பது? என்று இங்குப் பார்ப்போம்.
எப்போது உங்கள் ஆதார் கார்டு செயல்படாமல் போகும்?
உங்கள் ஆதார் கார்டை தொடர்ந்து மூன்று வருடங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் அதாவது வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு, குடும்ப அட்டை உள்ளிட்டவையில் இணைக்கப்படாமல் இருந்தால் அல்லது பிஎப் உள்ளிட்ட கணக்குகளில் இணைக்காமல் இருந்தால் ஆதார் கார்டு செயல்படாது.
ஆதார் கார்டு செயல்படுகின்றதா என்பதை எப்படிச் சரிபார்ப்பது?
முதலில் ஆதார் இணையதளத்தில் உள்நுழைய வேண்டும். அதில் ஆதார் சேவைகள்(Aadhaar services) டேபின் கீழ் உள்ள ஆதார் எண்ணைச் சரிபார்க்கவும்(Verify Aadhaar Numbe) என்ற தெரிவை தேர்வு செய்ய வேண்டும்.
ஆதார் இணையதளம் செல்ல இங்குக் கிளிக் செய்க. www.uidai.gov.in
செயல்படுகின்றதா என்று சரிபார்த்தல்
ஆதார் எண்ணைச் சரிபார்க்கும் பக்கத்தில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சாவை உள்ளிட்டுச் சரிபார்க்கும் என்ற பொத்தானை அலுத்த வேண்டும். அப்படிச் செய்யும் போது ஆதார் எண் செயல்படும் போது பச்சை நிற டிக் மார்க்கும் இதுவே இயங்கவில்லை என்றால் சிவப்பு நிற கிராஸ் மார்க்கும் வரும்.
ஆதார் கார்டு செயல்படவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் ஆதார் கார்டு செயல்படவில்லை என்றால் அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் சரியான ஆவணங்களுடன் செல்ல வேண்டும். உங்களுக்கு அருகில் எங்கு ஆதார் மையம் உள்ளது என்று கண்டறிய இங்குக் கிளிக் செய்க. www.uidai.gov.in
இங்கு என்ன செய்வார்கள்?
ஆதார் கார்டினை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்த பிறகு உங்கள் பையோமெட்ரிக் தரவுகளை உள்ளிட வேண்டும்.
கட்டணம் எவ்வளவு?
ஆதார் கார்டின் விவரங்களைப் புதுப்பித்துச் செயல்படுத்த 25 ரூபாய்க் கட்டணமாக வசுலிக்கப்படும். அது மட்டும் இல்லாமல் ஆதார் விவரங்களைப் புதுப்பித்துச் செயல்படுத்த விரும்பும் போது சரியான் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
கண்டிப்பாக ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டுமா?
ஆம், முன்பே நாம் அளித்த பையோமெட்ரிக் விவரங்களும், இப்போது புதிதாக நீங்கள் அளிக்கும் பையோமெட்ரிக் விவரங்களுடன் பொருந்துவதை வேண்டும். அப்படியானால் நீங்கள் கண்டிப்பாக ஆதார் உள்ளிட்டு மையத்திற்குச் செல்ல வேண்டும்.

நன்றி : குட்ரிட்டர்ன்ஸ்

Read more...

குழந்தைகளுடனான நம் நட்பை, மேலும் அதிகரிக்க,,,

வியாழன், 1 ஜூன், 2017

பள்ளி செல்லும் குழந்தைகளை, புதிதாக பள்ளி செல்லும் குழந்தை, உயர்நிலைப் பள்ளி செல்பவர், மேல்நிலைப் பள்ளி செல்பவர் என, மூன்று வகைகளாக பிரிக்கலாம். புதிதாக பள்ளி செல்லும் குழந்தைகளை தயார்படுத்துவது தான், பெற்றோருக்கு மிகவும் சவாலான விஷயம். பள்ளியில் அட்மிஷன் கிடைத்தவுடன், அந்த பள்ளியை பற்றிய பாசிடிவ் விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்வது நல்லது.அங்கு சென்றால் புதிய நண்பர், ஆசிரியர் கிடைப்பர்; அன்பாக இருப்பர்; புதிதாக நிறைய விஷயங்களை கற்கலாம் எனக் கூறலாம். தவிர, பள்ளிக்கூடம் குறித்து குழந்தைகள், என்ன மனநிலையில் உள்ளனர் என்பதை, கேட்டு அறிந்து கொள்ளலாம்.
பள்ளி திறப்பதற்கு முன், குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வருவது நல்லது.குறைந்தது, 10 மணி நேரமாவது இரவில் உறங்க செய்வது, காலையில் கொஞ்சம் முன்பாகவே எழுந்து பல் தேய்ப்பது, குளிப்பது, சாப்பிடுவது, அன்றாட கடமைகளை செய்ய பழக்க வேண்டும். காலை வேளைகளில் குழந்தைகளிடம் கனிவாக பேசுவது நல்லது. அதனால், நமக்கும், அவர்களுக்கும் அன்றைய நாள் இனிதாக அமையும்.
மேலும், புதிய சீருடை, ஷூ முதலியவற்றை முன்பாகவே வாங்கி வைப்பது, புத்தகம், நோட்டுகளுக்கு அட்டை போட்டு வைப்பது, சைக்கிளில் செல்வதாக இருந்தால், 
அதை சர்வீஸ் செய்து வைப்பது என, முன்கூட்டியே தயார்படுத்தி வைக்கலாம்.உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தற்போது நிறைய புராஜெக்ட் செய்ய சொல்கின்றனர். அதை திறம்பட அவர்கள் செய்ய உதவலாம். விடுமுறையில் அவர்கள் சென்று வந்த இடங்கள் பற்றிய கட்டுரைகள் எழுத சொல்வதால், அவர்களது நினைவாற்றலை அதிகப்படுத்தலாம்; அது, அவர்களுக்கு மேலும் உற்சாகமூட்டும்.
பெற்றோராகிய நாம், பள்ளி சென்ற போது செய்த குறும்புகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம், குழந்தைகளுடனான நம் நட்பை, மேலும் 
அதிகரிக்க செய்யலாம்.
மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, மேற்படிப்பு குறித்த விபரங்கள், நம் பண்பாடு, கலாசாரம், பணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றியமையாதது.
இந்த வயதினரை பள்ளிக்கு அனுப்ப, எந்தவித முன் தயாரிப்பும் தேவையில்லை. இருப்பினும், அவர்களுக்கு தைரியம், தன்னம்பிக்கையை கொடுக்க வேண்டியது அவசியம். 

மேலும், இந்த இரண்டு ஆண்டு, அவர்கள் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்வதுடன், கூடா நட்பில் சிக்கி கொள்ளாமல் நல்வழி நடத்துவதும் பெற்றோரின் கடமை ஆகும்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets