உங்கள் வருகைக்கு நன்றி

இதை பெண் அடிமைத்தனம் என்று சொல்ல கூடாது.

செவ்வாய், 21 ஜனவரி, 2014


சமுதாயத்தைப் பொறுத்தவரை எந்த தவறையும் ஆண்கள் செய்யலாம். ஆனால் பெண்கள் செய்யக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள விதி. ஆனால் இதை பெண் அடிமைத்தனம் என்று சொல்ல கூடாது. சமுதாயத்தில் ஆண்கள் செய்யும் தவறுகளை விட பெண்கள் செய்யும் தவறுகள் தான் அதிக பிரச்சனைகளை உருவாக்குகிறது. 

உதாரணமாக, ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவதால் கர்ப்பமடைய நேரிடும். இதனால் அவள் பெற்றெடுக்கும் பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம். இதேப்போல, திருமணத்திற்குப் பிறகு ஆண் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்தாலும் சமுதாயத்தில் இரண்டாம் தாரம் என்று பெயர் வைத்து விடுவார்கள். 
ஆனால் இதே ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு கொண்டால், அது அந்த பெண்ணின் குடும்பத்தையே சீர்குலைத்து விடும். ஒரு ஆண் பிடித்த பெண்ணை பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு அவன் காதலிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டான் என்று சொல்வார்கள். 

ஆனால், ஒரு பெண் இதைச் செய்தால் அவள் ஓடிப் போய்விட்டாள் என்று கூறுவார்கள். இது போல ஒரு குடும்பத்தில் வாழும் பெண், தான் காதலிக்கும் ஆணை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவதால், அவள் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அந்த பெண்ணின் குடும்பத்தாரும் பல வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள். 

பெண் வீட்டை விட்டு ஓடுவதால் ஏற்படும் துக்கத்தை விட, அதனால் ஏற்படும் அவமானமே அவர்களை நிலைகுலையச் செய்துவிடும். உற்றார், உறவினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும், பெண் எங்கே என்று கேட்கும் கேள்விக்கு சொல்வதறியாது கலங்கும் பெற்றோரின் நிலை பரிதாபத்துக்குரியது. 

சிலர் இந்த அவமானத்தை தாங்க இயலாமல் தற்கொலை செய்து கொள்வதுமுண்டு. சிலர் ஊரை காலி செய்து கொண்டு சென்றுவிடுவதும், உண்டு. வீட்டை விட்டு செல்லும் பெண்ணிற்கு திருமணமாகாத சகோதரிகள் இருப்பின், அவர்களது வாழ்க்கை இன்னும் மோசமாகிறது. 

திருமணத்திற்காக வரன் தேடும் போது கேட்கும் முதல் கேள்வி அவர்களது குடும்பத்தைப் பற்றியதுதான். அதில் இப்படி ஒரு சிக்கல் இருப்பின், மாப்பிள்ளை வீட்டார் சற்று தயக்கம் காட்டத்தான் செய்வார்கள். அக்காள் இப்படி என்றால் தங்கை எப்படி இருப்பாளோ என்று வாய்விட்டு பேசுபவர்களும் உண்டு. 

சமுதாயத்தின் ஆணி வேரே பெண்தான். இதனால்தான் ஆணி வேர் எந்த வகையில் தவறு செய்ய நேர்ந்தாலும் அதனால் பாதிக்கப்படுவது முழு மரமும்தான் என்று பயந்துதான் பெண்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளையும் இந்த சமுதாயம் விதித்துள்ளது.

Read more...

இதன் மூலம் இனி பணமும் அனுப்பலாம்




கூகுள் இணையதளம் மூலம் கடிதங்கள், விழா நிகழ்ச்சி பத்திரிகைகள், ஆவணங்கள், போட்டோக்கள் ஆகியவற்றை அனுப்பி கொண்டிருந்த காலம் எல்லாம் பழசாகி விட்டது. இப்போது இந்த இணையதளம் மூலம் பணத்தையும் அனுப்பும் வசதி வந்து விட்டது. கூகுள் இணையதளம் சர்வதேச அளவில் புகழ்பெற்றதாக உள்ளது. இமெயிலுக்கு அதிகளவில் இடவசதி அளித்து புரட்சி ஏற்படுத்தியது இதுதான். பின்னர் அதிவேக செயல்பாடு மூலமும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இதனால், பெரும்பாலான மக்கள் கூகுள் மெயிலில் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில், இந்நிறுவனம் இப்போது பணம் அனுப்பும் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. சான்பிரான்சிஸ்கோவில் நடந்த ஐ.ஓ கருத்தரங்கில் இதுதொடர்பான விவரங்களை கூகுள் நிறுவனம் அறிவித்தது. முதல்கட்டமாக அமெரிக்காவில் இச்சேவை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், விரைவில் உலகம் முழுவதும் இச்சேவை அறிமுகம் செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பணம் அனுப்ப விரும்புபவர்கள், கூகுள் இணையதளத்துடன் நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கை இணைத்து கொள்ளலாம் அல்லது கிரெடிட், டெபிட் கார்டு மூலமும் பணத்தை அனுப்பலாம். இதற்கு சேவை கட்டணமாக 2.9 சதவீதம் வசூலிக்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறோமோ அவருக்கு இமெயில் கடிதம் எழுதி, அதை பேப்பர் கிளிப் குறியுடனும், டாலர் குறியுடனும் இணைக்க வேண்டும். பின்னர் எவ்வளவு தொகையை அனுப்ப விரும்புகிறோம் என்பதை குறிப்பிட்டு செண்ட் பட்டனை தட்டினால் அடுத்த முனைக்கு பணம் சென்று சேர்ந்து விடும். இந்த சேவையில் பணம் பெறுபவர்கள் கூகுள் மெயிலில் கணக்கு வைத்திருக்காவிட்டால், குறைந்தபட்சம் கூகுள் வாலட்டில் கணக்கு வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் பணத்தை பெற முடியும்.

Read more...

"பிராக்டிகல் அட்வைஸ் மழை'

செவ்வாய், 14 ஜனவரி, 2014

அநேகமாக நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒன்றிரண்டு "டர்னிங் பாயின்ட்'களாவது நிச்சயம் இருக்கும். தினமும் ஒரேமாதிரி பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கும். திடீரென்று ஒருநாள் யாராவது நமக்கு ஒரு நல்ல அறிவுரையைச் சொல்லியிருப்பார்கள். அதைப் பின்பற்றி நடந்தவுடன் நம்முடைய உலகமே தலைகீழாக மாறியிருக்கும். இல்லையாஇந்த விஷயம் நமக்கு மட்டுமில்லைபெரிய நட்சத்திரங்கள்பிரபலங்கள்வெற்றியாளர்கள், சாதனையாளர்கள் எல்லோருக்கும் பொருந்தும். அவர்களுடைய வெற்றிப் பயணத்தையும் ஒரு சின்ன அறிவுரை திசைமாற்றியிருக்கும். பிரபலங்கள் வழங்கிய இந்த "பிராக்டிகல் அட்வைஸ் மழை'யிலிருந்துஉங்களுக்காகச் சில துளிகள் இங்கே:

வாழ்க்கை என்பது சமையல் குறிப்பு அல்ல. இதற்குப் பிறகு இதைச் செய்யவேண்டும், இவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்றெல்லாம் யாரும் விதிமுறை போட்டுவைக்கவில்லை. நீங்கள் எந்தக் கட்டாயங்களையும் பின்பற்றவேண்டியதில்லை. ரிலாக்ஸ்ஒவ்வொரு கணத்தையும் ரசித்து அனுபவியுங்கள்வாழ்க்கையின்போக்கில் மிதந்து செல்லுங்கள்.
உங்களுக்கு ஒரு விஷயம் தேவை என்றால் அதை நேரடியாகக் கேட்கத் தயங்காதீர்கள். அப்படிக் கேட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசித்தால்கூச்சப்பட்டால் வேலை நடக்காது. நீங்கள் எதைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள்ஏன்இந்த விஷயத்தை நீங்களே கூர்மையாக ஆராய்ந்து பாருங்கள். அதனைத் தாண்டுங்கள். அதற்காக, "நான் பயமே இல்லாமல் வாழ்வேன்என்று ஆரம்பித்துவிடாதீர்கள். பயம் நல்லது. பல சமயங்களில் அதுதான் உங்களைச் சரியான பாதையில் நகர்த்திச்செல்கிறது.
பிரச்சனைகளைப் பார்த்துப் பயப்படாதீர்கள்அவை மாறுவேஷத்தில் வரும் வாய்ப்புகள்!
முயற்சி தவறிவிட்டதாசறுக்கிக் கீழே விழுந்துவிட்டீர்களாதப்பில்லைமறுபடி எழுந்து நிற்காவிட்டால்தான் தப்பு. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுஎன்று புலம்பாதீர்கள். எல்லோருக்கும் அப்படித்தான் நடக்கிறது. டென்ஷனை விட்டு முன்னே போகிற வழியைத் தேடுங்கள். எது சுலபமாக இருக்கிறதோ அதைச் செய்யாதீர்கள்எது சரியோ அதைச் செய்யுங்கள்.

Read more...

கொசுதானே என்று அலட்சியப் படுத்த வேண்டாம்

வியாழன், 9 ஜனவரி, 2014

நோய்களின் தலைவன் கொசுக்களைப் பற்றி அறிவோம்

 பல நோய்கள் பரவுவதற்குக் காரணமாக இருப்பது தண்ணீர். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது கொசுக்கள். மலேரியா முதல் டெங்கு வரை பல நோய்களைப் பரப்பும் வேலைகளை கொசுக்கள் செய்கின்றன.
இந்த கொசுக்களைப் பற்றி சில தகவல்களை இங்கே கூறுகிறோம்.
உலகத்தில் 2,500 வகையான கொசுக்கள் உள்ளன.
கொசு நீர் நிலைகளில்தான் முட்டையிடும். ஒரு சில கொசு அசுத்தமான நீரிலும்ஒரு சில கொசு சுத்தமான நீரிலும் முட்டையிடும்.
பெரும்பாலான கொசுக்கள் பகல் நேரத்தில் குளுமையான இடங்களில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு மாலையில் பறக்க ஆரம்பிக்கும்.
ஒரு சில வகை கொசுக்கள்தான் பகலில் பறந்து வந்து கடிக்கும்.
வீடுகளில் உள்ள கொசுக்கள் பொதுவாக அதிக தூரம் பறப்பதில்லை.
ஒரு சில பெரிய வகை கொசுக்கள் பல மைல்கள் பறந்து செல்லும் திறன் பெற்றுள்ளன.
கோடைக் காலத்தில் கோடை வெப்பத்தில் உயிர் வாழ முடியாது என்று அறியும் கொசுக்கள்குடிசை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் குட்டை போன்ற இடங்களுக்கு அருகே வாழ்கின்றன. கோடை முடியும் வரை அப்பகுதிகளில் இருக்கும் கொசுமழைக் காலம் துவங்கிய பிறகு அங்கிருந்து மற்ற இடங்களுக்குச் சென்று முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.
கொசுக்கள் நம்மைக் கடிக்கும் போது அதனை அடிப்பதால்அதன் ஊசிப் பகுதி நமது உடலில் தங்கிவிட வாய்ப்பு உள்ளது.
கொசுக்கள் மனிதன் இருப்பதை பல மைல் தூரத்தில் இருந்தே உணரும் திறன் பெற்றுள்ளன.
கொசுக்களை அழிக்க தற்போது பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets