உங்கள் வருகைக்கு நன்றி

ஒரு பொருளை பயன்படுத்தும் போது, அதனால், எந்த மாதிரியான பாதிப்புகள் வரும்

வெள்ளி, 8 நவம்பர், 2013

நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது, ஒரு பொருளை பயன்படுத்தும் போது, அதனால், எந்த மாதிரியான பாதிப்புகள் வரும் என்பது பற்றிதான். நம் தோலுக்கு ஹேர் டை ஒப்புக் கொள்ளாவிட்டால், சிறிய கொப்புளங்கள் வரலாம். சிலருக்கு, முகத்தின் இரு பக்கங்களிலும் கறுக்கும், முகம் முழுக்க கறுப்பதும் உண்டு. தோல் தடித்து அரிப்பு வரும். சில நேரங்களில் ஒவ்வாமை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஹேர் டையில் பி.பி.டி., எனும் வேதிப் பொருள் உள்ளது. இது சூரிய ஒளியை அதிகமாக உறிஞ்சி, தலைமுடிக்கு நல்ல கறுப்பு நிறத்தைத் தரக் கூடியது. நாம் பயன்படுத்தும் ஹேர் டையில் இந்த பி.பி.டி.,யின் அளவு 2.5 என்ற அளவிற்கு குறைவாக இருக்க வேண்டும். அதுதான் நல்ல ஹேர் டை. அதேபோல் அமோனியா இல்லாத ஹேர் டையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அமோனியா அமிலத்தன்மை உடையது. அமிலத்தின் குணம் எந்த பொருளின் மீது பட்டாலும் அதை அரித்துவிடும். ஹேர் டையை குறைந்தது, ஒரு மாத இடைவெளியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்ட பின், சீப்பால் சீவக் கூடாது. கறுப்பு நிறம் வெயிலை ஈர்க்கும் என்பதால் டை போட்டு விட்டு, வெளியில் போவது தவிர்க்கப்பட வேண்டும். இப்போது பல நிறங்களில், ஹேர் கலரிங் வருகிறது.

Read more...

யார் கிண்டல் செய்தாலும், நான் அதை பொருட்படுத்தாமல் இருந்ததால்,

தன்னம்பிக்கை இழக்காத மாற்றுத் திறனாளி சங்கரலிங்கம்: சிவகாசி அருகில் உள்ள கிராமத்தில் ஓர் ஏழ்மை குடும்பத்தில் நான்காவது மகனாக பிறந்தேன்.நான் பிறந்த எட்டாவது மாதத்தில் நடந்தேன். ஆனால்என் மூன்றாவது வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டேன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதுகுடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்தி விட்டுசில வருடங்கள் என் தந்தை வைத்திருந்த பெட்டிக் கடையில் அவருக்கு உதவியாக இருந்தேன். என் 19ம் வயதில்வறுமை காரணமாக நாங்கள் குடும்பத்துடன்சிவகாசிக்கு வந்தோம். சில காலம் டீ கடையிலும்தீப்பெட்டித் தொழிற்சாலையிலும் பணிபுரிந்தேன்.ஆனால்அதில் எனக்கு திருப்தி இல்லை. சுயதொழில் செய்ய விரும்பிய நான்பிளாட்பாரத்தில் காய்கறி கடை நடத்தினேன். எனக்காகதினமும் காய்கறி வாங்கும் என் தாய் படும் கஷ்டத்தைப் பார்த்துஅந்த தொழிலையும் விட்டு விட்டேன்.என் அண்ணன் வைத்திருந்த ஆட்டோவை கஷ்டப்பட்டு ஓட்டிப் பழகினேன். அதுவே பிற்காலத்தில் எனக்கு கைகொடுத்தது. ஒரே இடத்தில் எனக்கு வேலை செய்ய பிடிக்காததால்சொந்தமாக ஆட்டோ வாங்க கடன் கேட்டேன். சில சிரமங்களுக்கு பின்நண்பர்கள் உதவியால் கடன் கிடைத்தது. இரவுபகல் பாராது கடுமையாக உழைத்ததற்கு பயனாகஇரண்டு ஆட்டோவுக்கு உரிமையாளர் ஆகி உள்ளேன். யார் கிண்டல் செய்தாலும்நான் அதை பொருட்படுத்தாமல்தன்னம்பிக்கையுடன் உழைத்ததற்குக் கிடைத்த பரிசு தான் ஆட்டோ!

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets