உங்கள் வருகைக்கு நன்றி

மழை இல்லா காலத்திலும், பண்ணைக் குட்டைகள்

வியாழன், 14 பிப்ரவரி, 2013


மழை இல்லா காலத்திலும், பண்ணைக் குட்டைகள் மூலம், முழுமையாக விவசாயம் செய்யும், மைக்கேல்: 

ராமநாதபுரம், கடலாடியிலுள்ள சவேரியார்பட்டினம் தான், சொந்த ஊர். கிராமம் முழுவதும் விவசாயத்தையும், மழையையும் நம்பியே, வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பருவ மழை சரியாக பெய்யாமல், பயிர்கள் கருகி, எங்களின் வாழ்க்கை பலமுறை கேள்விக்குறியாக மாறியுள்ளது. கடந்த, 2000ம் ஆண்டு, "தானம்' என்ற தன்னார்வ அறக்கட்டளை அமைப்பு, பருவமழை பொய்த்து, எங்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகாமல் இருக்க, "பண்ணைக் குட்டைகள்' பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, நபார்டு வங்கி மூலம் பண உதவி செய்து, பண்ணைக் குட்டைகள் அமைக்க வழிகாட்டினர். பண்ணைக் குட்டைகள் என்பது, இரண்டாம் தர நீர்த்தேக்கம். மழைக் காலங்களில், மழை நீரை வயல்வெளியில் அதிகம் சேமிக்க முடியாது. ஆனால், நம் தேவைக்கேற்ப, குட்டை போன்ற அமைப்பை ஏற்படுத்தி, மழை நீர் வயல்களில் தேங்கி, பயிரை நாசப்படுத்தாமல், தானாகவே குட்டைகளில் வழிந்து, நீர் வீணாகாமல் சேமிக்கப்படும். தற்போது, நீர் தேங்கும் கால்வாய் மற்றும் கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்படுவதால், இத்திட்டம் நல்ல பயனளிக்கும். இரண்டரை ஏக்கர் நிலத்தில், 1,000 முதல், 1,500 க.மீ., நீர் தேங்க, 30 மீ., நீளம், 30 மீ., அகலம், 1.5 மீ., ஆழம் கொண்டதாக, மிக தாழ்வான பகுதியில் அமைத்தேன். தேவைக்கேற்ப, ஆழத்தை அதிகரிக்கலாம். இதை அமைக்க, ஒரு கன மீட்டருக்கு, 35 ரூபாய் முதல், 38 ரூபாய் வரை செலவாகும்.
பண்ணைக் குட்டைகள் வந்த பிறகு, நீரை காசு கொடுத்து வாங்குவதில்லை. பயிர்கள் கருகும் நிலையில்லை. ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை நிகர வருமானம் கிடைக்கிறது. மழை நன்றாகப் பெய்யும் காலங்களில், பயிர்களுக்கு நீர் தேவைப்படாது. எனவே, அக்காலங்களில், பண்ணைக் குட்டையில் மீன்களை வளர்த்தும் லாபம் ஈட்டலாம். தற்போது எங்கள் கிராமத்திலேயே, 360 பண்ணைக் குட்டைகள் உள்ளன. தொடர்புக்கு: 0452-2601673.

Read more...

வாரத்தில் ஆறு நாள்களும் வேலை செய்துவிட்டு,


வேலைவேலையென பொருள் தேடியே பொழுதுகள் கழியும் ஒவ்வொரு வாரமும்ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்பதுதான் எல்லோரது எண்ணமும்..!
அன்று முழுவதும் ஓய்வாகப் பொழுதைப் போக்கலாம்நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்..! உறவினர்களைச்   சந்திக்கலாம்..!
ஆனால்வாரத்தில் ஆறு நாள்களும் வேலை செய்துவிட்டுஞாயிற்றுக்கிழமையும் வேலை செய்யும் தொழில் முனைவோர்களான பெண்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?
 விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ளது எம். சண்முகசுந்தரபுரம் என்ற சின்னஞ்சிறிய கிராமம்.
இங்குள்ள அன்னை சத்யா மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த அனைத்துப் பெண் உறுப்பினர்களுமே பட்டாசு ஆலைத் தொழிலாளிகள்தான்.
இவர்கள்வாரத்தில் ஆறு நாள்களும் பட்டாசு ஆலைகளில் வேலை செய்துவிட்டுஞாயிற்றுக்கிழமைகளிலும் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துவிட்டுமசாலாப் பொடி தயாரித்தல்அப்பளம் தயாரித்தல் என சுயதொழில்களில் ஈடுபட்டுமாவட்ட அளவிலான சிறந்த மகளிர் குழு விருதினை மத்திய அமைச்சரிடம் பெற்றுள்ளது வியப்புக்குரிய செய்திதானே..!
அந்தக் குழுவினரைச் சந்திக்க அவர்களது ஊருக்குச் சென்றபோதுகிராமிய மணத்தோடு வரவேற்றனர்..!
அந்த மகளிர் குழுவின் ஊக்குநர் ஜி. காளியம்மாள்பிரதிநிதிகள் பி.வீரம்மாள்ஜி.முருகாயி ஆகியோரிடம் அவர்களது தொழில்செயல்பாடு குறித்து கேள்விகளை எழுப்பியபோது ஆர்வத்துடன் பதில் அளித்தனர்.
 எப்போது சுய உதவிக் குழுவினைத் தொடங்கினீர்கள்..?
கடந்த 2002-ம் ஆண்டிலேயே, 15 உறுப்பினர்களோடு எங்கள் மகளிர் குழு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சந்தா பணம் வசூலிப்பது என மற்ற மகளிர் குழுக்களைப் போலத்தான் இயங்கிவந்தோம்.
 தொழில் செய்யும் ஆர்வம் எப்போது ஏற்பட்டது?
குழுவாகச் சேர்ந்து ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என நினைத்தோம். ஆனால்அனைவரும் பட்டாசு ஆலையில் வேலை பார்ப்பதால்அதற்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற எண்ணமும் இருந்தது.
கிராமப் பகுதியாக இருப்பதால் கறவை மாடுகளை வாங்கலாம் என முடிவு செய்தோம்.
2005-ல் ஒரு நபருக்கு ரூ. 12 ஆயிரம் வீதம்வங்கியில் கடன்பெற்று 15 பேரும் ஆளுக்கு ஒரு கறவை மாட்டை வாங்கினோம்.
 தினசரி பட்டாசு ஆலையில் வேலை பார்த்துக் கொண்டேமாடுகளையும் பராமரித்து வந்தோம். சிரமமாக இருந்தாலும்ஒவ்வொருவருக்கும்மாதந்தோறும் தலா ரூ. 1500 வரை கிடைத்தது. ஆனால்வறட்சிக் காலத்தில் மாடுகளுக்கு போதிய புல் தீவனம் கிடைப்பதில் பிரச்னை வந்தது. இதனால்
 2007-ல் மாடுகளை விற்று விட்டோம்.
 மசாலாப் பொடி வியாபாரத்தில் நுழைந்தது எப்படி?
மாடுகளை விற்றவுடன்பணி ஓய்வுநாளில் ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என எண்ணினோம். அப்போதுமசாலாப் பொடி தயாரித்து விற்றால் என்ன எனத் தோன்றியது. அன்றாட சமையலுக்கு மசாலாப் பொடி இன்றியமையாதது என்பதால், 2007-லேயே மசாலாப் பொடி மற்றும் அப்பளம் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினோம்.
 இவற்றைத் தயாரிக்க போதிய நேரம் கிடைக்கிறதா?
 வாரத்தில் ஆறு நாள்கள் பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் சென்று விடுவோம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமைஸ்ரீவில்லிபுத்தூர் சென்று மசாலாப் பொடியை மில்லில் அரைத்து வருவோம். அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவற்றைப் பாக்கெட்டுகளாகப் போடுவோம். பின்னர் கிராமத்தில் தேவையானவர்களுக்கும்பட்டாசு ஆலையில் பணிபுரியும் சக தொழிலாளர்களுக்கும்ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கடைக்கும் மசாலாப் பொடியை விற்று வருகிறோம்.
அதேபோலஒரு வாரம் அப்பளம் தயாரித்துமசாலாப் பொடியுடன் சேர்த்து விற்பனை செய்கிறோம். எங்களது தயாரிப்புகள் தரமாக இருப்பதால்அனைவரும் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தருகின்றனர்.
 

Read more...

ஓமம் ஒரு சிறந்த மருந்து !


ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இது ரொட்டி மற்றும் கேக் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகிறது. மதுபான வகைகளை மணமூட்டப் கையாளப்படுகிறது. இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது.

ஓமத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்

ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்றவை அடங்கியுள்ளன. ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன. ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும்.

மருத்துவ குணம் கொண்ட ஒமம்

இலைகளின் சாறு பூச்சிகளுக்கு எதிரான சக்தி கொண்டது. வேர்கள் ஜீரணச் சக்தி மற்றும் சிறுநீர்க் கழிப்பினைத் தூண்டும் திறன்படைத்தது. கனிகளில் இருந்து கார்வீன் மற்றும் கார்வால் ஆகிய பொருட்கள் எடுக்கப்படுகிறது. கனிகளில் இருந்து வடிக்கப்படும் நீர் வயிற்றுப் போக்கினைக் கட்டுப்படுத்துகிறது. ஜீரணத்தையும் வயிற்று உப்புசத்தையும் குணப்படுத்துகிறது. குழந்தைகளின் குடல்வலி, வயிற்றுக் கோளாறுகளுக்கு தக்க மருந்தாகும். சுவாசக் குழாய் தொடர்பான நோய்கள், குடிப்பழக்கத்திற்கான அடிமைத்தனம், மனநோய், போன்றவற்றுக்கு மருந்தாக உதவுகிறது.

வயிற்றுப் பொருமல் நீங்க

சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.

இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள். இந்த ஓமத் திரவம் ஓமத்தை காய்ச்சி எடுக்கப்படுவது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு மந்தம் தொடர்பான நோயை போக்கும் தன்மை கொண்டது.

பொதுவாக மந்தமானது சிறு குழந்தை களுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

ஓமத்திரவகம்

ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

உடல் பலம் பெற

உடல் சோர்வை போக்குவதில் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .

பசியைத் தூண்ட

நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.

ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். சுவாசக்கோளறுகள், இருமல் போன்ற நோய்களை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும். மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் போன்றவற்றையும் ஓமம் குணப்படுத்துகிறது.

Read more...

மொத்தமாகச் சேர்ந்து பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் குளிர்பானங்கள்,,,

புதன், 13 பிப்ரவரி, 2013


""முப்பது வருடங்களுக்கு முன்பு இப்போது உள்ளதைப் போல அதிகமான குளிர்பானங்கள் இல்லை. சமீப ஆண்டுகளாகப் பல வெளிநாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்கள் வந்துவிட்டன. அதற்காக நிறைய விளம்பரங்களையும் செய்கிறார்கள். அதனால் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்பவர்கள் உணவகங்களில் சாப்பிடும்போது தண்ணீருக்குப் பதிலாக குளிர்பானங்களை அருந்துகிறார்கள்.

இது மிகவும் தீங்கானது. 
தாகம் எடுக்கும்போது தண்ணீர் அருந்துவதுதான் சரியானது. உடல் நலனுக்கு உகந்தது.
குளிர்பானங்களை உணவுடன் சேர்த்து அருந்துவதால், நம் உடலில் சேரும் கலோரியின் அளவு அதிகமாகும். அதிகப்படியான கொழுப்பு உடலில் தங்கும். சுறுசுறுப்பு குறையும்.
குளிர்பானங்களில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்கள் உடலுக்குத் தீங்கை ஏற்படுத்தும். குளிர்பானங்களில் கலருக்காக தார்ப்பொருள்களைச் சேர்க்கிறார்கள். குளிர்பானங்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்க வினிகர் போன்ற பொருட்களையும்அமிலங்களையும் சேர்க்கிறார்கள். இனிப்புக்காக சாக்கரினைக் கலக்கிறார்கள்.
இவை குறைந்த அளவு உடலில் சேர்ந்தால் கூட, பல உடல் நலக் குறைபாடுகள் ஏற்படும். நாள்தோறும் குளிர்பானங்களை அருந்தினால், சிறிது சிறிதாக உடலுக்குள் சென்று, மொத்தமாகச் சேர்ந்து பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
இதனால் சிறுநீரகங்கள், கல்லீரல் பாதிக்கப்படும். குளிர்பானங்களில் உள்ள ரசாயனப் பொருட்களால் ஒவ்வாமை வரலாம். தலைவலி வரலாம். தும்மல் வரும். உடல் பருமனாகும். ஊட்டச் சத்துப் பற்றாக்குறை, உயிர்ச்சத்து பற்றாக்குறை போன்றவை ஏற்படும். புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புண்டு.
இவ்வளவு கேடு செய்யும் செயற்கையான குளிர்பானங்களை எதற்காக அருந்த வேண்டும்? நாம் நிறையத் தண்ணீர் குடித்தால் நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் இளக வழி ஏற்படும். மலச்சிக்கல் வராது. உடலில் நீர் வற்றிய நிலை ஏற்படாது. தண்ணீர் குடிப்பதால் எந்தத் தீங்கும், பக்கவிளைவுகளும் இல்லை.
முன்பெல்லாம் சர்பத் குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது. வீட்டில் கூட சர்பத் அருந்துவார்கள். இப்போது அந்தப் பழக்கம் குறைந்துவிட்டது.
கோடைக்காலங்களில் நாம் குளிர்பானங்களுக்குப் பதிலாக, நீர்ச்சத்துள்ள தர்ப்பூசணி, ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம், பப்பாளி, வெள்ளரி போன்றவற்றைச் சாப்பிடலாம். சாறு பிழிந்து குடிக்கலாம். வீட்டில் பழச்சாறு செய்து அருந்தும்போது செயற்கையான கலர்களைச் சேர்க்கக் கூடாது. வாசனைக்கான பொருட்களையும் சேர்க்கக் கூடாது.
கரும்புச்சாறு குடிக்கலாம். இளநீர் குடிக்கலாம். இவற்றால் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை. உடலுக்கு மிகவும் நல்லது.
தற்போது இந்தியாவில் ஓர் ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டுக் கொய்யாப் பழத்தை தினமும் 50 கிராம் சாப்பிட்டால், சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். நாட்டுக் கொய்யாவைச் சாப்பிட்டால், நமது உணவில் இருந்து இரும்புச் சத்து அதிகமாக உடலுக்குள் ஈர்க்கப்படுகிறது. இதனால் ரத்த சோகை ஏற்படாது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இயற்கையான இவ்வளவு நல்ல பொருட்கள் இருக்க, எதற்குச் செயற்கையான குளிர்பானங்கள்? குளிர்பானங்களை அருந்துவது ஒரு நாகரிகமாகக் கருதப்படலாம். அந்த நாகரிகத்துக்கு நாம் கொடுக்கும் விலை, மோசமான பல உடல் நலக் குறைபாடுகள்தாம்'' என்றார்  
                                                                            டாக்டர் இளங்கோ. (தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை மற்றும் தடுப்பு மருந்துத்துறையின் இயக்குநராக)
 

Read more...

எந்தச் சூழலிலும் பிறரைக் காப்பாற்றத் துணியுங்கள்.




அந்த நடுத்தர வயது மனிதர் அன்று அதிக வெளிச்சமில்லாத புதிய பாதையில் போய்க் கொண்டிருந்தார். சாலையின் இரண்டு பக்கங்களிலும் புதர்கள் மண்டிக்கிடந்தன. தெரியாத்தனமாக இந்தப் பாதையில் வந்து விட்டோமே, இருட்டாக இருக்கிறதே என்று பயந்தார். திரும்பிப் போகவும் முடியவில்லை. தொடர்ந்து நடக்கவும் பயமாக இருந்தது.
திடீரென்று ஒரு புதர் அருகே யாரோ யாரையோ மிரட்டுவது போல சப்தம் கேட்டது.
ஏன் தான் இந்தப் பாதையில் வந்தோமோ? என்று நொந்து கொண்டார். வேகமாக ஓடிப்போய் போலீசுக்கு ஃபோன் செய்யலாம் என்று நினைத்தார். அதே நேரம் பாதிக்கப்பட்ட நபரைக் காப்பாற்றப் போய் தனக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்றும் பயப்பட்டார்.
ஆனால் கேட்டது ஒரு பெண்ணின் கூக்குரல். எவனோ ஒருவன் பலாத்காரம் செய்கிறான் என்பது நொடிப் பொழுதில் புரிந்துவிட்டது. அந்த மனிதர் மேற்கொண்டு எதுவும் யோசிக்கவில்லை. தனக்கு என்ன நேர்ந்தாலும் சரி, அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவோம் என்று துணிந்து புதர்வெளிக்குள் பாய்ந்து அந்த மனிதனைப் புரட்டிப் புரட்டி எடுத்தார். அவருக்கு எங்கிருந்து அப்படி பலம் வந்தது என்று தெரியவில்லை. அவனும் அந்தப் பாதையில் யாரையும் எதிர்பார்க்கவில்லை. அந்த அதிர்ச்சியில் அவன் அடிதாங்க முடியாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனான்.
பிறகு புதர் அருகே மூச்சுவாங்க நின்ற அந்த மனிதர், ""பெண்ணே, வெளியே வா. இனி உனக்கு ஆபத்து இல்லை. முரடன் ஓடிப்போய் விட்டான்'' என்று அழைத்தார். சில நொடிகளில் ஒரு பெண்ணின் குரல் கேட்டது: ""அப்பா நீங்களா?''
எந்தச் சூழலிலும் பிறரைக் காப்பாற்றத் துணியுங்கள். பாதிக்கப்பட்டவர் உங்கள் உறவினராகவும் இருக்கலாம். அது உங்களுக்கு அப்போது தெரியாமல் இருந்திருக்கலாம்.

Read more...

முகபாவனை தான், உடல் மொழியில், முக்கியப் பங்கு

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013


கல்வியில், அதிக மதிப்பெண்களில் வெற்றி பெற்றாலும், "கம்யூனிகேஷன் ஸ்கில்' எனப்படும், பிறருடனான தகவல் பரிமாற்றத்தில், நல்ல திறமை இருப்பது அவசியம். ஏனெனில், நாம் பேசுவதற்கு முன்னரே, நமது தோற்றம், நம்மை பற்றி பிறரிடம் பேசிவிடுகிறது. "பாடி லாங்குவேஜ்' எனப்படும் உடல் மொழியிலும், கவனம் செலுத்துவது அவசியம். பிறர் நம்மை பற்றி அறியாமலேயே, நம்மை பற்றி முடிவெடுப்பதற்கு, உடல் மொழி தான், முக்கியக் காரணம். நாம் கலந்து கொள்ளும் கூட்டம் மற்றும் அதன் தேவைகளை பொறுத்து, நமது உடையும், அலங்காரமும், இருப்பது அவசியம். ஏனெனில், நாம் அறிந்த செய்திகளை, பிறருக்கு தெரிவிப்பதை விட, உடல் மொழி விரைவாக செயல்படுகிறது. முகபாவனை தான், உடல் மொழியில், முக்கியப் பங்கு வகிக்கிறது.

நம்முடைய பதற்றம், தவிப்பு இவற்றை, நம் கண்களே, அடுத்தவருக்கு எடுத்துக் காட்டிவிடும். அதற்காக, நாடக பாணியிலான முகபாவம் தேவையற்றது. இருக்கும் சூழலையும், அதில் நம் பங்கையும், நன்கு உள்வாங்கியிருந்தாலே போதுமானது. 

குழந்தைகளிடம் பேசும் போது, குழந்தையாக, எளிமையான வார்த்தைகளை, பேச வேண்டும். யார் முன்பாகப் பேச வேண்டும், எது தொடர்பாகப் பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்கிற, முன் தயாரிப்போடு, தன்னம்பிக்கையும் அவசியம். நாம் சொல்ல வரும் கருத்துக்களை, ஒரு சீரான வரிசையாகத் தெரிவித்தால், மற்றவர்களுக்கு எளிதில் புரியும். மற்றவர்களை கூர்ந்து கவனித்தாலே, அவர்கள் வெளிப்படுத்தும் திறன், உடல் மொழியில் பிறரை கவரும் அம்சங்களையும், எதிர்மறையான குறைபாடுகளையும் குறித்து வைத்து, நம்மிடமிருந்து நீக்கி, தெளிவு பெறலாம்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets