உங்கள் வருகைக்கு நன்றி

100 பேரில் ஒருவரை தேர்வு செய்தால், அந்த ஒருவர், நீங்களாக இருக்க வேண்டும்.

புதன், 3 ஜூலை, 2013


தமிழகத்தில், ஆயிரக்கணக்கான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும், லட்சக்கணக்கான மாணவர்கள், பொறியியல் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர்.
ஒரு பொறியாளர் வேலைக்கு, 17 பேர் போட்டியிடுவதாக, சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பொறியியல் படிப்பை முடித்து வெளியில் வரும் மாணவர்கள், வேலைக்குரிய தகுதியை வளர்த்து கொள்வதில்லை. இதனால், முன்னணி நிறுவனங்களில் வேலை கிடைக்காத நிலை நிலவுகிறது. வேலை தேடுபவர்கள், கூடுதல் திறமைகளை வளர்த்து மட்டுமே, தனித்து நிற்க முடியும்.
ஒரு நிறுவனத்தில், 100 பேரில் ஒருவரை, வேலைக்கு தேர்வு செய்தால், அந்த ஒருவர், நீங்களாக இருக்க வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகத்தில், பாடத்தில் கூடுதல் அறிவு, தகவல் தொடர்பு திறன் வளர்த்தல் உள்ளிட்ட கூடுதல் திறமைகளை வளர்த்து கொண்டால், வேலைவாய்ப்புகளை எளிதில் பெற முடியும்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புடன், ஸ்மார்ட் போனில், அப்ளிக்கேஷன் டெவலப் செய்ய தெரிந்தால், கூடுதல் திறமைக்காக இத்துறையில் எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கலாம். அது போல, சிவில் இன்ஜினியரிங் படிப்புடன், "ஆட்டோ கேட்" படிப்பையும் முடித்தால், வேலை வாய்ப்புகளை பெறலாம்.
படிப்பு சார்ந்த தொழில் திறனை வளர்த்து கொண்டால் எளிதில் முன்னேறலாம். உபயோகப்படும் ஒரு பொருளை கஷ்டப்பட்டு தேடி, தேடி தேர்ந்தெடுப்பதை போல, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்லூரிகளை தேர்வு செய்வதிலும், கவனம் செலுத்த வேண்டும். 
கடந்த 1970ல், 10 சதவீதம் மாணவர்கள், சொந்த செலவில் வெளிநாட்டு சென்று கல்வி கற்றனர். தற்போது, 90 சதவீதம் மாணவர்கள் சொந்த செலவிலும், 10 சதவீதம் பேர் வங்கி கடனில், படிக்க செல்கின்றனர். வெளிநாட்டு சென்று கல்வி கற்கும் மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும், இரண்டு லட்சம் பேர், உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்றனர்.
சீனாவுக்கு அடுத்து, இந்தியர்கள் தான் அதிகமாக, வெளிநாடு சென்று படிக்கின்றனர். வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் மோசமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. வெளிநாட்டு சென்று படிக்கும் மாணவர்கள், பல்கலைக்கழகங்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் படித்தால் மட்டுமே, 100 சதவீத வேலை கிடைக்கும்.
வெளிநாட்டு பல்கலைக்கழகம் குறித்து, இணையதளங்களில் தரும் தகவல்களை நம்பி, வெளிநாடு செல்ல கூடாது. பல்கலைக்கழகம் குறித்து முழுவதும் விசாரித்து விட்டு செல்ல வேண்டும்.
ஐ.ஏ.எஸ்., தேர்வை, 5 லட்சம் பேர் எழுதி, 2 சதவீதம் பேர், மெயின் தேர்வுக்கு செல்கின்றனர். ஐ.ஐ.டி.,யில், 4.50 லட்சம் பேர் எழுதி, 2 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுகின்றனர். ஐ.ஐ.எம்.,ல் 2 லட்சம் பேர் எழுதி, 1.5 சதவீதம் மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர்.
ஜப்பானில், 4,000 பல்கலைக்கழகமும், அமெரிக்காவில் 3,700 பல்கலைகழகமும், சீனாவில் 2,500 பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஆனால், இந்தியாவில் 560 பல்கலைகளே உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தகுதியான பல்கலைக்கழகங்கள் இல்லை.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், இளங்கலை பட்டம் படிக்க, 15 லட்சம் வரையும், முதுகலை பட்டம் படிக்க, 40 லட்சம் ரூபாய் வரையும் செலவாகிறது. பிரான்ஸ், ஹங்கேரி பான்ற நாடுகளில், கல்விக் கட்டணங்கள் குறைவு. 

Read more...

மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்பினால் பணம் ஒரு விஷயமே இல்லை.


ம.பி., மாநில தலைநகர் போபாலில் கடந்த 1984ம் ஆண்டு யூனியர் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏராளமானோர் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகினர். அவ்வாறு இந்த கோர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 17 வயது மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர்,

யூனியன் கார்பைடு ஆலை அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் வசித்து வந்தது முகமது அலி குவாய்சர் குடும்பம். 17 வயதான குவாய்சர் ஒரு மாற்றுத்திறனாளி மாணவர். போபால் விஷவாயு சம்பவம் நடந்த போது அவரது முழு குடும்பமும் இதில் பாதிக்கப்பட்டது. குவாய்சரின் தாய் இந்த சம்பவத்தில் இறந்து போனார். மற்றவர்கள் சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளி என்ற காரணத்தால் குவாய்சர் முன்னுரிமை கொடுத்து மீட்கப்பட்டார். தனது தாய் இந்த சம்பவத்தில் இறந்துவிட்டார் என்பதையறிந்த குவாய்சர், தான் ஒரு டாக்டராகி தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என தீர்மானித்தார்.

எனினும் அவருக்கு டாக்டர் படிப்பு அவ்வளவு எளிதாக இருக்க வில்லை. இலவசமாக மருத்துவம் படிப்பதற்காக நடத்தப்படும் தேர்வில் இரண்டு முறை தோல்விடைந்த அவர், மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி கோட்டா இல்லாத நிலையில், பொதுப்பிரிவில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். பின்னர் எம்.பி.பி.எஸ்., முடித்த குவாய்சர் முதலில் ஒரு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தார். பின்னர் இங்கு பணிபுரிந்தால் தன்னால் விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இயலாது எனக்கருதி, அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு, விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் சம்பாவனா டிரஸ்ட் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார்.

நீங்கள் பணம் தான் வேண்டும் என விரும்பினால் அது உங்களுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்பினால் பணம் ஒரு விஷயமே இல்லை. அதனால் தான் பணம் அதிகம் வரும் அரசு டாக்டர் வேலையை விட்டு விட்டு விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இங்கு பணிபுரிகிறேன்" என்கிறார் முகமது அலி குவாய்சர்.

Read more...

ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்ட இளைஞர்!

"கூகுள்' நிறுவன வேலையை ராஜினாமா செய்து, ஏரிகளை சீரமைக்கும், 25 வயது, அருண் கிருஷ்ணமூர்த்தி:

சிறு வயதிலேயே ஏரி, பறவைகள் பிடிக்கும். சென்னை கீழ்கட்டளை ஏரியில் பறவை, மீன், ஆமை இருந்தன. பின் குப்பை கிடங்காக மாறியதால், ஏரியை சீரமைக்கும் எண்ணம் ஏற்பட்டது. நன்கு படித்து, "கூகுள்' கணினி நிறுவனத்தில் வேலை செய்தேன். வேலை பார்க்கும் போதே ஆந்திராவின், குருநாதன் செருவு ஏரி, 2009ல், சென்னையின், லட்சுமி புஷ்கரம் ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுவதும் தூர் வாரி, சுற்றிலும் வேலியிட்டு, நண்பர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியோடு சீரமைத்தேன். ஆர்வத்தால், "கூகுள்' நிறுவன வேலையை ராஜினாமா செய்து, முழு நேரமும் ஏரியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டேன். சுற்றுச் சூழல் பற்றிய நிகழ்ச்சிகளை நடத்தி, ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களை, என்னுடன் இணைத்தேன். 2011ல், இ.எப்.ஐ., எனும் சுற்றுச் சூழலுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை துவங்கி, 900 மாணவர்களோடு நிர்வகிக்கிறேன். தெருக் கூத்து நடத்தி, மக்களிடம் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். தமிழகம், ஆந்திரா, டில்லி என, மூன்று இடங்களில் செயல்படுகிறோம். யாரிடமும் பண உதவி பெறாமல், ஒரு தகவல் தொடர்பு நிறுவனம் நடத்தி, அதன் வருவாயில், அமைப்பை நடத்துகிறேன். டாக்குமென்ட்ரி படங்கள் எடுத்து, சர்வதேச போட்டிகளில் விருது வென்றிருக்கிறேன். ஏரிகளை சீரமைத்து, சுற்றுச் சூழலை பாதுகாத்ததற்காக, சர்வதேச இளைஞர் சங்கமும், சுவிட்சர்லாந்தின், "ரோலக்ஸ்' நிறுவனமும் விருது அளித்து பெருமைப்படுத்தின. விருதுக்கான பணத்திற்கு பதில், கீழ்கட்டளை ஏரியை மறுசீரமைக்கும் தொழில் நுட்ப உதவிகளை வழங்க கேட்டேன். நிறுவனம் அதற்கு சம்மதம் தெரிவித்தது. விரைவில் பணி துவங்கும். மொபைல்: 99402 03871

Read more...

நகம் கடிப்பது மனநிலை பாதிப்பு?


நம்மூரில் பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இங்கே அதை நாம் சாதாரணமாக பார்க்கிறோம். ஆனால், அதுவும் மனநல பாதிப்புதான் என்று அமெரிக்காவில் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மனநிலை பாதிப்புகளில், நகம் கடிப்பதை சேர்க்க பரிந்துரையும் செய்துள்ளனர். உலகம் முழுவதும் பல லட்சம் பேர் நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப் பின் வெளிப்பாடுதான். காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் சிலர் இதுபோல செய்கின்றனர்.
 
இதை மனநல பாதிப்பில் சேர்க்கலாம் என அமெரிக்க மனநல சங்கத்தை சேர்ந்த நிபுணர்கள்  கருத்து தெரிவித்துள்ளனர்.  எப்போதாவது நகம் கடிப்பவர்கள் கூட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறிவிட முடியாது. இந்த பழக்கத்தால் வலி ஏற்படும் அளவுக்கு ஒருவர் நடந்துகொண்டால் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கருதலாம் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக மனோ தத்துவவியல் வல்லுநர் கரோல் மேத்யூஸ் தெரிவித்தார்.நகம் கடிப்பதால் நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி சளி பிடித்தல், சுகவீனம் ஏற்படுகிறது.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets