உங்கள் வருகைக்கு நன்றி

விதிவிலக்காக நிற்கிறார் டாக்டர் வித்யா.

செவ்வாய், 16 ஏப்ரல், 2013


பெரும்பாலான மருத்துவர்களும் வசூல் ராஜாக்களாக, ராணிக்களாக மாறிக் கொண்டிருக்கிற காலமிது. மருத்துவத்தை சேவையாகப் பார்த்தமனோபாவம்  மாறி, இன்று அது மாபெரும் பிசினஸ்! 

தேவையற்ற பரிசோதனைகள், அனாவசிய மருந்துகள், அவசியமே இல்லாத கன்சல்ட்டேஷன் என மக்களின் பணத்தைப் பறிப்பதிலேயே பல  மருத்துவர்களும் குறியாக இருக்க, சென்னை முகப்பேர் டாக்டர் வித்யா, விதிவிலக்காக நிற்கிறார். பல் மருத்துவரான வித்யாவின் வித்தியாசமான  அணுகுமுறை வியக்க வைக்கிறது. வயதான மற்றும் உடல்நலமில்லாதவர்களின் பல் மருத்துவத்துக்காக அவர்களது இருப்பிடத்துக்கே போய் சிகிச்சை  செய்து வருகிறார் வித்யா!

Mobile Clinic!

மருந்து, மாத்திரைகள், உபகரணங்கள் அடங்கிய சின்னப் பெட்டி, வெள்ளை கோட், கழுத்தைச் சுற்றிய ஸ்டெத்தஸ்கோப் என வித்யாவின் தோற்றம்பழைய கருப்பு-வெள்ளை சினிமாக்களில் வரும் மருத்துவ முகங்களை ஞாபகப்படுத்துகின்றன. டாக்டருக்கான எந்த அலட்டலும் இல்லாமல், தனது டூ  வீலரிலோ, தேவைப்பட்டால் மட்டுமே காரிலோ, சிகிச்சைக்காக சென்னையை வலம் வருகிறார் வித்யா.

‘‘நர்ஸா இருந்த எங்கம்மா கலிங்கராணிதான் எனக்கு முதல் இன்ஸ்பிரேஷன். மருத்துவத்தை சேவையா பார்க்கக் கத்துக் கொடுத்தவங்க அவங்கதான்.  விருப்பப்பட்டுதான் பல் மருத்துவம் படிச்சேன். என்னைப் பொறுத்தவரை அது ஒரு கலை. ரொம்ப ரொம்ப கவனமா, அக்கறையா, அன்போட அணுக  வேண்டிய ஒரு துறை. பல் மருத்துவம்கிறது இன்னிக்கு மிகப்பெரிய பிசினஸா வளர்ந்திட்டிருக்கு. 

ஆஸ்பத்திரியோட பிரமாண்டம், அங்கே உபயோகிக்கப்படற பெரிய பெரிய மெஷின், வைத்திய செலவுன்னு எல்லாமே மக்களை பயமுறுத்துது.  அதுக்குப் பயந்து, பல் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தறவங்களும், சுய மருத்துவம் செய்துக்கிறவங்களும்தான் நிறைய பேர்...  பணம்  பிரச்னையில்லைங்கிற நம்பிக்கையைக் கொடுக்கத்தான், ரொம்ப ரொம்ப குறைஞ்ச கட்டணத்துல சிகிச்சை கொடுக்க, 10 வருஷங்களுக்கு முன்னாடி  கிளினிக் தொடங்கினேன். 

என்னோட கிளினிக்ல ஏழை, பணக்காரங்கன்னு எல்லோருக்கும் ஒரே மாதிரியான ட்ரீட்மென்ட்தான். ஒரு முறை இலங்கையைச் சேர்ந்த பேஷன்ட்தன்னோட மாமியாரைப் பத்திச் சொன்னாங்க. படுத்த படுக்கையா இருந்த அவங்களுக்கு, பல் எல்லாம் விழுந்திருந்தது. பல் இல்லாததால சரியா  சாப்பிட முடியலை. ரொம்ப பலவீனமா இருந்தாங்க. நோயாளிங்கிறதால ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் பல் செட் கட்டவும் முடியாத நிலையில,  ‘அவங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமான்னு கேட்டாங்க. 

அவங்க வீட்டுக்குப் போய், அந்தம்மாவுக்கு பல் செட் கட்டறதுக்கான 5 கட்ட சிகிச்சைகளையும் வீட்லயே செய்து, நல்லபடியா கட்டி விட்டேன்.  அதுக்குப் பிறகு அவங்க நல்லா சாப்பிட ஆரம்பிச்சு, உடம்பும் மனசும் தேறினாங்க. அந்த வாழ்த்தும் அதுல கிடைச்ச மன திருப்தியும்தான் என்னோட  ‘மொபைல் கிளினிக்ஐடியாவுக்கு அஸ்திவாரம்...பின்னணி சொல்கிற டாக்டர் வித்யா, ரொம்பவும் வயதானவர்கள், நடமாடவே முடியாத  நோயாளிகள், மனநலம் சரியில்லாதவர்கள் ஆகியோருக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை தருகிறார். 

மற்றவர்களுக்கு தனது கிளினிக்கில். வீட்டுக்குச் சென்று சிகிச்சையளிப்பதற்காக உபரிக் கட்டணமெல்லாம் வாங்குவதில்லை!  பற்களை சுத்தம்  செய்வது, எடுப்பது, கட்டுவது, கிளிப் போடுவது, வேர் சிகிச்சை உள்ளிட்ட 90 சதவிகித சிகிச்சைகளை வீட்டிலேயே செய்யலாம் என்கிறார் வித்யா. ‘‘பெரும்பாலும் நான் தனியாவே போயிடுவேன். கொஞ்சம் பெரிய ட்ரீட்மென்ட்டுன்னா மட்டும்தான் அசிஸ்டென்ட்ஸ் கூட்டிட்டுப் போவேன். 

வயசானவங்களுக்கும், மனநலம் சரியில்லாதவங்களுக்கும் ட்ரீட்மென்ட் கொடுக்கிறப்ப, அசாத்திய பொறுமை வேணும். தன்னையறியாம  கடிச்சிடுவாங்க. வாந்தி எடுப்பாங்க. முரட்டுத்தனமா நடந்துப்பாங்க. மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைங்களுக்கு சிகிச்சை கொடுக்கிறது அதைவிடக்  கஷ்டம். அத்தனை சுலபத்துல நம்மகிட்ட வரவே மாட்டாங்க. 

முதல் ரெண்டு விசிட் சும்மா அவங்களோட பேசிப் பழகுவேன். கிஃப்ட் கொடுப்பேன். மூணாவது விசிட்லதான் ட்ரீட்மென்ட் ஆரம்பிப்பேன். சிகிச்சை  முடியறபோது, அவங்கக்கிட்டருந்து கிடைக்கிற அந்த அன்பும் வாழ்த்தும், கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காதது...’’ - அன்பொழுகப்  பேசுகிற டாக்டருக்கு, குடிசைவாழ் மக்களிடம் பல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வைப் பிரபலப்படுத்துவதே அடுத்த திட்டமாம்! (தொடர்புக்கு - 9941664635)  


நன்றி -தினகரன் 

Read more...

திருக்குர்ஆன் கூறும் விந்துத்துளி அதிசயங்கள்

வியாழன், 11 ஏப்ரல், 2013


பதினான்கு நூண்றாண்டுகளுக்கு முன் எல்லாம் வல்ல இறைவனால் நமது நபிக்கு ஜிப்பரயீல்(அலை) மூலமாக அருளப்பட்ட இத்தன்னிகரற்ற மாமறையில் தெரிவித்துள்ள வாழ்க்கை நெறிகளும், அறிவியல் உண்மைகளும் இறைச்சட்டங்களும் இனி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் காலத்துக்கேற்ப பொருந்தி நிறைந்து நிற்பவை என்பது உண்மை.

ஆகவே மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா?
குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.   (அல்-குர்ஆன்: 86:5-7)

(சமீப காலத்திற்கு முன்பு வரை மனிதனின் விதைப் பையிலி-ருந்து தான் விந்து வெளிப்படுகிறது என்று நம்பி வந்தனர். ஆனால் விதைப் பையில் விந்து உற்பத்தியானாலும் அது மேலேறிச் சென்று முதுகுத் தண்டிற்கும் முன் பகுதிக்கும் இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கிருந்து தான் வேகமாகத் தள்ளப்படுகிறது என்பதை சமீப காலத்தில் கண்டு பிடித்தனர்.
இதை 1400 ஆண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன்(86:7) இந்தச் சொற்றொடர் மூலம் குறிப்பிட்டிருப்பது, இது முஹம்மது நபியின் வார்த்தை இல்லை. மாறாக இறைவனின் வார்த்தையே என்பதை நிரூபிக்கும் சான்றாக அமைந்துள்ளது.)
வசனம் (075:037) "கருவறைக்குள் (செலுத்தப்பட்ட) விந்தின் ஒருதுளியாக மனிதன்ٍّ இருக்கவில்லையா?" என்று கேட்கும் குர்ஆன், வசனம் 86:06 இல் திரவம் என்று பொதுமையில் குறிப்பிடுகிறது!

விந்து என்பது விந்துக் கோட்டைகள்உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது. 

மேலும் இதில் 90% நீரும், 5% புராக்டோஸ் என்ற சர்க்கரைச் சத்தும் மீதி 5% மிக மிகக் குறைந்த அளவில் புரதமும், உப்பும் சளியும் மற்றும் 1% அளவில் உயிரணுவும் உள்ளது. 

ஒருதடவை வெளியாகும் விந்துவில் (2.3 மி.லி)சுமார் 1 சிட்டிகை அளவு சர்க்கரை சத்து (150மி.கி) தான் வெளியாகிறது. இதனால் சக்தி இழப்போ, சத்து இழப்போ எத்வும் ஏற்படுவது இல்லை. 

1 மி.லி விந்துவில் சுமார் 100 மில்லியன் உயிரணு இருந்தால் தான் கரு உண்டாகும் . இது 20-40 மில்லியன் அளவுக்கு குறைந்தால் கரு உண்டாக்க முடியாது. 

ஆன் உயிரணுக்கள் பெண் குறியில் மட்டும் இருந்தால் சுமார் 1 மணி நேரமும் கருப்பையில்  இருந்தால் சுமார் 24-48 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். சுமார் 300 மில்லியன் உயிரணுவில் சுமார் 300 மட்டுமே கருமுட்டையை சூழ்ந்து அதில் ஓன்று மட்டுமே  அதன் உள்ளே சென்று கருவாகிறது.  

குழந்தை ஆனா, பெண்ணா என்பதை தீர்மானிக்க ஆண் உயிரணுவே காரணமாகிறது. 
குழந்தை உண்டாகாமல் இருக்க 75% ஆண்களே காரணமாக இருக்கிறான். 

Read more...

மாநபி (ஸல்) அவர்களின் மழைத் தொழுகை

சனி, 6 ஏப்ரல், 2013


 நாட்டில் பஞ்சம்வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காகமழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மழைக்காக வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென சில குறிப்பிட்ட முறையையும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.
சூரியன் உதித்தவுடன் தொழ வேண்டும்.
மேலாடையை மாற்றிப் போட்டுக் கொள்ள வேண்டும்.
திடலில் தொழ வேண்டும்.
இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.
அதில் இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்
முதல் ரக்அத்தில் கூடுதலாக ஏழு தக்பீர்களும்இரண்டாம் ரக்அத்தில் கூடுதலாக ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும்.
தொழுத பின்னர் இமாம் மிம்பரில் ஏறி சொற்பொழிவு நிகழ்த்தாமல் இறைவனைப் பெருமைப்படுத்தல்பாவமன்னிப்புத் தேடல் போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும். இமாமைப் போன்று மற்றவர்களும் இரு கைகயும் உயர்த்திப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இரு கைகளையும் மற்ற துஆக்களில் உயர்த்துவதைப் போன்று அல்லாமல் புறங்கை வானத்தை நோக்கி இருக்குமாறு கைகளைக் கவிழ்த்து உயர்த்த வேண்டும்.
இவற்றுக்கான ஆதாரங்கள் வருமாறு:

நபி (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
நூல்கள்: புகாரீ 1012, முஸ்லிம் 1489
நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கி துஆச் செய்தார்கள். தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)
நூல்: புகாரீ 1024
நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்த போது தம் புறங்கைகளால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1632
நபி (ஸல்) அவர்கள் பணிவாகவும்உள்ளச்சத்துடனும்அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். நீங்கள் இப்போது செய்யும் சொற்பொழிவு போல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: திர்மிதீ 512, அபூதாவூத் 984, நஸயீ 1491, இப்னுமாஜா 1256, அஹ்மத் 3160
இந்த ஹதீஸில் 'பெருநாள் தொழுகையைப் போல் தொழுவித்தார்கள்என்று கூறப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகையைப் போல் என்று வர்ணிப்பது பெருநாள் தொழுகையில் கூறப்படும் கூடுதல் தக்பீர்களைத் தான். எனவே பெருநாள் தொழுகையில் கூறுவதைப் போல் முதல் ரக்அத்தில் 7 கூடுதல் தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் 5கூடுதல் தக்பீர்களும் சொல்ல வேண்டும்.


மழைக்காக நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை 
அல்லாஹும்மஸ்கினா கைஸன் முகீஸன் மரீஅன் மரீஅன் நாஃபிஅன் கைர ளார்ரின் ஆஜிலன் கைர ஆஜிலின்.
(இறைவா! தாமதமின்றிவிரைவானஇடரில்லாதபயனளிக்கக் கூடியசெழிப்பான,  உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக!)
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: அபூதாவூத் 988 
அல்லாஹும்மஸ்கினாஅல்லாஹும்மஸ்கினா. அல்லாஹும்மஸ்கினா
(இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு வழங்குவாயாக!)
அறிவிப்பவர்: அனஸ் (ரலி
நூல்: புகாரீ 1013  
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம் மாலி(க்)கி யவ்மித்தீன். லாயிலாஹ இல்லல்லாஹு யஃப்அலு மா யுரீத். அல்லாஹும்ம அன்(த்)தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்(த்)தல் கனீய்யு வநஹ்னுல் ஃபு(க்)கராவு அன்ஸில் அலைனல் கைஸ வஜ்அல் மா அன்ஸல்(த்)த லனா குவ்வ(த்)தன் வபலாகன் இலா ஹீன்.
(எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் நினைத்ததைச் செய்வான். இறைவா! நீயே அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. (நீ) எந்தத் தேவையும் அற்றவன்;நாங்கள் தேவையுடையவர்கள்எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக! நீ எங்களுக்கு இறக்கியதில் வலிமையையும் குறிப்பிட்ட காலத்திற்குப் போதுமானதாகவும் ஆக்கி வைப்பாயாக!)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத் 992 

ஐந்து காரியங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறிய முடியாது. நாளை என்ன நடக்கும் என்பதை எவரும் அறிய முடியாது. கருவறைகளிலுள்ள நிலைமைகளை எவரும் அறிய முடியாது. ஒருவர் நாளை எதைச் சம்பாதித்தார் என்று அறிய முடியாது. ஒருவர் தாம் எந்த இடத்தில் மரணிப்போம் என்பதை அறிய முடியாது. மழை எப்போது வருமென்பதையும் எவரும் அறிய முடியாதுஎன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.


Read more...

நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறை கூட ஓதிக் காட்டித் தராத !


முஸ்லிம்களிலிருந்து பிரிவினையை உண்டாக்கிய ஹனஃபிகள் மிகவும் பரிதாபத் திற்குரியவர்கள்! தொழுகையில் ஆமீன் சொல் வதனால், முன் பாவங்கள் மன்னிக்கப்படும் உயரிய நிலையை அடையும் பாக்கியத்தை இழந்து விட்டார்கள். குர்ஆனையும், ஹதீஸை யும் விட்டு விட்டு, மத்ஹபுகளுக்கு வக்காலத்து வாங்கும் மௌலவிகளைப் பின் பற்றினால் நஷ்டம் அடைய வேண்டியதுதான். இது உறுதி.
.“அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக் காரன் யார் இருக்க முடியும்?…”;. என்று 2:114வது வசனத்திலும், 72:18 வசனத்திலும் அல்லாஹ், மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுடையவை என்று அறிவித்ததை தூர எறிந்து விட்டு, இது ஹனஃபி பள்ளி; இங்கு ஆமீன் சப்தமாகச் சொல்லக் கூடாது என அறிவிப்புப் பலகை களை பள்ளியிலே தொங்கவிடும் இந்த அறிஞர்களுக்கு (உலமாக்களுக்கு) அல்லாஹ் வின் அச்சம் எள்ளளவும் கிடையாதா?
அவர்கள் ஆமீன் சப்தமாகச் சொல்லாதது மட்டுமல்ல, நபிவழியில் சப்தமாக ஆமீன் சொல்பவர்களையும் தடுக்கும் இக்கொடூரச் செயலை செய்யும் மவ்லவிகளை அல்லாஹ் வுக்கு அஞ்சுபவர்களாக ஆலிம்களாக ஏற்றுக் கொள்ள முடியுமா?
நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறை கூட ஓதிக் காட்டித் தராத, ஃபர்ளு தொழுகைக்குப் பின் உள்ள கூட்டு துஆவை இவர்கள் புதிதாக-பித்அத்தாக உண்டாக்கி இருக் கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள்.
5 வேளை ஃபர்ளு தொழுகைகளுக்குப் பிறகும் பிரார்த்திக்க வேண்டிய துஆக்களை வெளிப்படையாக முன்பே தீர்மானித்து கூட்டு துஆ செய்யலாமே என்ற வினா நமக்கு  எழ வாய்ப்புண்டு. அந்த எண்ணம் தவறு. ஏனெனில் அப்படி ஒரு வழக்கத்தை  நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்ததில்லை. எனவே அப்படிச் செய்தால் அது பித்அத் ஆகிவிடும். பித்அத்துகள் வழிகேடு கள், அவை நரகத்திற்கு இட்டுச் செல்லும் என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், பொதுவாக சில துஆக்களைத் தேர்ந்தெடுத்து கூட்டு துஆ செய்தால், ஒவ்வொருவரின் அந்தரங்கமான துஆக்கள் விடுபட்டு விடும்.
துஆக்களில் இறைவனிடம் அங்கீகரிக் கப்பட முதல் தகுதியானது எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் கேட்கப்படும் துஆவாகும் என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூ உமாமா(ரழி), நூல்:திர்மிதி
இந்த ஹதீஸின்படி ஒவ்வொருவரும் அவரவருக்குள்ள எண்ணற்ற தேவைகளை அவரவருக்குத் தெரிந்த மொழியில் இறைவ னிடம் கேட்டுப் பெறக்கூடிய சந்தர்ப்பமாக இது இருப்பதால், அவரவர் அவரவரின் தேவை களை இறைவனிடம் பிரார்த்திப்பதே சிறந்தது. இடையில் ஒரு மனிதர் தேவை இல்லை என்பதை 2:186 வசனம் தெளிவுபடுத்துகிறது.
(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்; பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவரே பிரார்த் தித்தால் விடையளிக்கின்றேன். அவர்கள் என்னிடமே கேட்கட்டும். என்னையே நம்பட் டும். அப்பொழுது அவர்கள் நேர் வழியை அடைவார்கள் என்று கூறுவீராக. அல்குர்ஆன் 2:186
எனவே கூட்டு துஆ என்பது அறிஞர்கள் என தங்களைக் கூறிக் கொள்ளும் மௌலவி கள் தங்களுக்கு ஒரு இமேஜ்! மற்றும் வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்திய ஒரு செட் அப்! அவ்வளவுதான்! இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை.
கூட்டு துஆவை அறிமுகப்படுத்தி செயல் படுத்திக் கொண்டிருக்கும் மௌலவிகளை குழப்பவாதிகள் என்று அல்லாஹ் கூறுவதைக் கவனியுங்கள்.
உங்களுடைய இறைவனிடம் பணிவாக வும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய் யுங்கள். வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. அல்குர்ஆன் 7:55
பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள். அச் சத்தோடும் ஆசையோடும் அவனைப் பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது. அல்குர்ஆன் 7:56
அந்தரங்கமாக துஆ கேட்க வேண்டும் என்பது அல்லாஹ் ஏற்படுத்திய வரம்பு. இந்த வரம்பை மீறி சப்தமாக துஆ செய்கிறார்கள். சப்தமாக ஆமீன் சொல்கிறார்கள். அதுவும் காலர் மைக்கில் இன்னும் அதிக சத்தமாக துஆ செய்யும் பழக்கமும் ஏற்பட்டு விட்டது. எனவே வரம்பு மீறிய இவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்று கூறுகிறான்.
நபி(ஸல்) அவர்கள் எந்த ஒரு ஃபர்ளு தொழுகைக்குப் பின்னும் கூட்டு துஆ கேட்காத அழகிய முன்மாதிரியை ஏற்படுத்தி, எல்லா விஷயங்களிலும் 1430 ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் சீர்திருத்தம் செய்துவிட்டு சென்று விட்டார்கள். பிற்காலத்தில் இந்த மௌலவிகள், 2,3,4 ரகாஅத்துகளில் வந்து சேர்ந்து, இமா மின் ஸலாத்துக்குப் பிறகு எழும்பி தங்கள் விடுபட்ட தொழுகைகளை நிறைவு செய்யும் தொழுகையாளிகளின் தொழுகையில் குழப் பத்;தை ஏற்படுத்தி கெடுக்கும் விதமாக அவர் களுக்கு இடைஞ்சலாக அதில் குழப்பம் உண்டாக்கி கூட்டு துஆ மற்றும் இது போன்ற புதியவைகளை அறிமுகப்படுத்தி விட்டனர். குழப்பம் உண்டாக்காதீர்கள் என்ற அல்லாஹ் வின் எச்சரிக்கையைப் புறக்கணித்து விட்ட மௌலவிகள், நபி வழியை போதிப்பவர்களை ஏதோ புது வழியைப் போதிப்பதாகக் கூறி குழப்பவாதிகள் என அவர்கள் மீது பழியை சுமத்தி, மக்களை குழப்பத்தில் ஆழ்த்து கின்றனர். இவர்கள் மறுமையில் தப்பமுடியுமா?
 நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறை கூட ஓதிக் காட்டித் தராத, ஃபர்ளு தொழுகைக்குப் பின் உள்ள கூட்டு துஆவை இவர்கள் புதிதாக-பித்அத்தாக உண்டாக்கி இருக் கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets