உங்கள் வருகைக்கு நன்றி

பணம்,வசதிகள் இருக்கின்றன. ஆனால் அமைதி இல்லை ஏன்?.

திங்கள், 31 டிசம்பர், 2012


மாணவர்கள் படிக்கும் காலத்திலே இலக்கை நிர்ணயித்து, அவற்றை அடையும் முயற்சியில் ஈடுபட வேண்டும். முதல் வெற்றியே முழுமையான இலக்கை அடைவதில்லை; அது வெற்றியின் துவக்க நிலையாகும்.
வாழ்வில் புதுமை காண, ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தை பெற்றிருக்க வேண்டும். இளமையில் ஏற்படும் தவறு ஏற்றுக்கொள்ளக் கூடியது; அதே சமயத்தில் அவற்றை திருத்தி, எதிர்கொள்ளும் தன்மையும் தேவை. பல்வேறு புத்தகங்களை படித்தாலும், ஒவ்வொரு கருத்தையும் ஒவ்வொரு விதமாகத்தான் வெளிப்படுத்த முடியும்.
வகுப்பறைகளில் பெறப்பட்ட ஆக்கத்திறனை உரிய இடங்களில் வெளிப்படுத்த வேண்டும். திறமைகளை நீங்களே வளர்த்துக்கொள்ள  வேண்டுமே தவிர, பிறரால் உங்களுக்குள் திணிக்க முடியாது. அதற்காக உங்கள் பெற்றோர்களை குறை கூறக் கூடாது. புதுமைகள் காண சிந்திக்க துவங்க வேண்டும்.
பெயர் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே பணிபுரிவது என்றில்லாது, சிறிய நிறுவனங்களில் கிடைக்கும் வேலைகளை நல்முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடின பயிற்சி மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும்.  
ஒய் திஸ் யூத் வெறி? - மீடியாவுக்கு பொறுப்பு வேண்டும்!
என்னாச்சு இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு? சமீபத்தில் செய்திகள் அனைத்தும் மனத்தைப் பிசைவதாகவே இருக்கின்றன.
பெற்றோர்கள் ஊருக்குப் போயிருக்கும் சமயத்தில், ஒரு மாணவன் தன் நண்பன் மூலமாக தன் வீட்டிலேயே 55 சவரன் நகைகளையும், 20 லட்சம் ரூபாயையும் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்திருக்கிறான்.
சென்னையில் ஒரு மாணவன் தனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண்ணைத் தந்திரமாகப் பேசி, தனியாக வரவழைத்து, தன் நண்பர்களோடு சேர்ந்து கூட்டாக பாலியல் வன்முறைக்குள்ளாக்கி இருக்கிறான். பஸ்டேவைக் கொண்டாட அனுமதிக்காததால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாணவர்கள் கலவரம்; கல்வீச்சு. இவற்றுக்கெல்லாம் உச்சக்கட்டமாக சென்னையில் ஒன்பதாம் வகுப்பு மாணவன், பட்டப்பகலில், வகுப்பறையில் தன் ஆசிரியரையே கத்தியால் சரமாரியாகக் குத்தி கொன்ற கொடூரம்.
இளைஞர் சமூகத்திற்கு ஏனிந்த வெறி?
இந்தக் குற்றங்களை எல்லாம் ஒரு போலீஸ் அதிகாரியாக, சட்டம் ஒழுங்கு பிரச்னையாக நான் பார்க்கவில்லை. நான் யாரையும் விரல் நீட்டிக் குற்றம் சாட்ட விரும்பவில்லை. நாம் அனைவருமே ஒரு விதத்தில் இத்தகைய சமூகச் சீர்கேட்டுக்குக் காரணம், என்று கனத்த சோகத்தோடு பேச ஆரம்பித்தார் தமிழகக் கூடுதல் காவல்துறை டைரக்டர் ஜெனரல் கே.ராதா கிருஷ்ணன்.
2002-ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற அகில உலகக் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் நான் கலந்து கொண்டேன். அங்கே சொற்பொழிவாற்றிய உலகப் புகழ்பெற்ற மனிதவளப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் கவி, அமெரிக்காவில் குற்றங்கள் பெருகி வருகின்றன. அமெரிக்கக் குடும்பங்களில் பணம் இருக்கிறது; வசதிகள் இருக்கின்றன. ஆனால் அமைதி இல்லை. காரணம் இங்கே குடும்பக் கட்டமைப்பு நிலை குலைந்து போய் விட்டது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று அமெரிக்காவின் நிலைமையைச் சுட்டிக் காட்டிவிட்டு, தொடர்ந்து, நாம் கிழக்கு நோக்கி, குறிப்பாக இந்தியாவைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் அங்கே காணப்படும் குடும்பக் கட்டமைப்பு என்கிறார். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஆனால் பத்தாண்டுகளில் இங்கே நிலைமை எப்படி மாறிவிட்டது?

ஒன்பதாம் வகுப்பு மாணவன் உணர்ச்சிவசப்பட்டு, கோபத்தில் தன் டீச்சரைக் குத்திக் கொல்லவில்லை; இரண்டு நாட்கள் கத்தியோடு தக்க தருணத்துக்காகக் காத்திருந்து கொலை செய்திருக்கிறான். இது சமூகத்துக்கு ஒரு அபாய மணி எச்சரிக்கை. பணத்தக்கும், அந்தஸ்துக்கும், வசதியான வாழ்க்கைக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம், ஒழுக்கத்துக்கும், கட்டுப்பாடான வாழ்க்கைக்கும் கொடுக்கப்படவில்லை.
கன்ஸ்யூமரிசம் என்ற வெள்ளம் சமூகத்தில் அனைவரையும் அடித்து இழுத்துச் செல்கிறது. மேற்கத்திய நாடுகளில் இருக்கும் மோசமான விஷயங்களை நாம் காப்பி அடித்துக் கொண்டிருக்கிறோம்.
பெற்றோர்களுக்குப் பணம் சம்பாதிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. அந்தப் பணத்தின் மூலமாக, குழந்தைகளுக்கு சந்தோஷத்தை அளித்தவிடலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள். அவர்களுக்கு நல்லொழுக்கத்தைச் சொல்லித் தரத் தவறிவிடுகிறார்கள். இது மிகவும் தவறு. அபாயமானது. அதன் விபரீத விளைவுகளைத்தான் இன்று சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையைச் சீர் செய்வது சாத்தியமா என்று சந்தேகமாக உள்ளது.
ஒரு மாணவன், ஒவ்வொரு நாளும் காலை எட்டு மணி முதல் நான்கு மணி வரை சுறுசுறுப்பாக இருக்கும் பகல் பொழுதினை, பள்ளிக்கூடத்தில்தான் கழிக்கிறான். அவனைப் பொறுப்புள்ள குடிமகனாக உருவாக்குவதில் பள்ளிக்கு முக்கியமான பங்கு உண்டு. எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களிடம் எனக்கு இன்றும் பெரும் மரியாதை உண்டு. அவர்கள் முன்னால் உட்கார்ந்த பேசுவதற்கு எனக்குத் தயக்கமாக இருக்கும். பொதுவாக இன்று ஆசிரியர்களை மாணவர்கள் மதிப்பதில்லை. அதேபோல் என்னுடைய ஆசிரியர்களிடம் இருந்த கடமையுணர்வும், கனிவும், அன்பும் இன்று ஆசிரியர்களிடம் அரிதாகவே காணப்படுகின்றன.
பள்ளிக்கூடங்களில் பாடங்களை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், சாஃப்ட் ஸ்கில்ஸ் எனப்படும் படிப்புக்கும் அப்பாற்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், வாழ்க்கையில் சவால்களை எதிர் கொள்ளும் வழிகளையும் சொல்லித்தர வேண்டும்.
மூன்றாவதாக இன்றைய சீரழிவுக்கு நான் மீடியாவை, குறிப்பாக சினிமாவைக் குற்றம்சாட்டுவேன். காவலர் பயிற்சிக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குற்றங்கள் மலிய காரணம் குறித்த விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட ஒரு சினிமா இயக்குனர், நாங்கள் சினிமாவில் நல்ல கருத்தக்களைச் சொல்கிறோமே. அவற்றை எல்லாம் எடுத்துக் கொள்ளாமல், கெட்ட விஷயங்களை மட்டும் மக்கள் ஏன் எடுத்துக் கொள்கிறார்கள்? என்று விவாதித்தார். அதற்குப் பதிலளித்த ஒரு அதிகாரி ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் மொத்த பாலும் விஷமாகி விடுகிறது. ஆனால், ஒரு குடம் விஷத்தில் ஒரு துளி பால் கலந்தால், அது விஷமாகவே தான் இருக்கிறது என்றார்.
மனித வாழ்க்கையின் அங்கமான சில விஷயங்களை, சினிமாவில் காட்டும்போது இலை மறை காயாகத்தான் சொல்ல வேண்டும். சினிமாவில் எதற்காக இவ்வளவு வன்முறையைக் காட்ட வேண்டும்? புதுமை என்ற பெயரில் ஆபாசம் அதிகரித்த வருகிறது. சமூகச் சீரழிவுக்கு அவர்கள் காரணமாகலாமா?
குழந்தைகளின் மீது டி.வி. சேனங்களின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சோட்டா பீம் என்ற குழந்தை பீமன் தொடரில் குட்டி பீமன் கெட்டவர்களை பஞ்ச் கொடுப்பதைப் பார்த்து, எங்கள் உறவினர் ஒருவரது மூன்று வயது குழந்தை, வீட்டில் எல்லோரையும் முஷ்டியை மடக்கிக் குத்த ஆரம்பித்துவிட்டான். இந்த வீபரீதத்தைப் பார்த்த அவனது பெற்றோர்கள் தங்கள் வீட்டு கேபிளில் அந்த சேனலை அகற்றி, அவனை வழிக்குக் கொண்டு வந்தார்கள்.
எப்படி ஊழலை சட்டத்தின் மூலமாக மட்டுமே ஒழித்துவிட முடியாதோ, அதே போல இந்தச் சமூகச் சீரழிவையும் சட்டத்தின் மூலமாகச் சரி செய்து விட முடியாது. இப்போது மக்கள் மத்தியில் எப்படி ஊழலைப் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதோ, அதேபோல சமூகச் சீரழிவு பற்றியும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும், பள்ளிக்கூடங்களும், இந்த சமூகமும், மீடியாவும் தங்கள் கடமையை உணர வேண்டும் என்று ராதா கிருஷ்ணன் ஐ.பி.எஸ். வலியுறுத்தினார்.

பள்ளிக்கூடம் என்ன செய்யும்? - கல்வியாளர் திருவள்ளூர் என்.சி.ஸ்ரீதரன்:
* இந்தச் சமூகத்தின் கொடூரங்கள் மாணவர்களைப் பாதிக்காதவாறு, அவர்களுக்குப் பாதுகாப்புக் கவசம் ஏற்படுத்தும் பொறுப்பு பள்ளிகளுக்கு இருக்கிறது. இதற்கு பெற்றோர்கள் பள்ளிகளோடு கைகோத்துச் செயல்பட வேண்டும்.

* வாழ்க்கையின் நெறிமுறைகளை எடுத்துச் சொல்லி, குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு, பெற்றோர்களுக்கு இருக்கிறது. மீண்டும் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் கொண்டுவரப்பட வேண்டும்.

* ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மீது கொண்ட அக்கறை காரணமாக என்ன சொல்கிறார்கள் என்பதைவிட, அதை எப்படிச் சொல்கிறார்கள் என்பது ரொம்ப முக்கியம். இத்தகைய பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கபட வேண்டும்.

*மாணவர்களை அடித்துத் திருத்துவதைவிட, அன்போடு எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பதே சிறந்த முறை.


என்ன தீர்வு - பருவ வயதிதனர் சிறப்பு மருத்துவர் டாக்டர் யமுனா:
* பாடத்திட்டத்தில் வாழ்க்கைக்கு அவசியமான விஷயங்கள் இடம்பெற வேண்டும்.

* பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடல்களாக விளங்க வேண்டும்.

* பருவ வயதில், பிள்ளைகள் பெற்றோர்களின் அன்புக்கு ஏங்குகிறார்கள். அந்த வெற்றிடம் நிரப்பப் படாமல் போனால் விபரீதங்களைச் சந்திக்க நேரிடும்.

* டீன்-ஏஜ் குழந்தைகள் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான் முக்கியம்.

* குழந்தைகளின் நடத்தையில், நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

* பெற்றோர்கள் குழந்தைகளோடு குவாலிடி நேரம் செலவிடுவது மிகவும் அவசியம்.

* அன்னப்பறவை போல மீடியாக்களில் இருந்து நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்தக் கொள்ள, குழந்தைகளைப் பழக்கும் மீடியா லிட்ரசி தேவை.


சமூகத்தில் சினிமாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பெற்றோர்கள் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; வன்முறைகள் உள்ள படத்தின் வெற்றிக்குப் பிறகு, சினிமாவில் வன்முறை ரொம்பவே அதிகரித்துவிட்டது. சமூகச் சீர்கேட்டுக்குத் துணைபோகிறவர்களைத் தண்டிக்கக் கடுமையான சட்டம் வேண்டும்.


நம் சமூகத்தின் வேல்யூ சிஸ்டம் பாதுகாக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடலாக இருப்பதுதான் முதல் தேவை. இல்லாதுபோனால், நாளுக்கு நாள் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
-சாந்தி (குடும்பத்தலைவி)

Read more...

கம்பியூட்டரால் இஞைர்களை பாதிக்கும் மனஅழுத்தம்!


இணையதளத்தில் சதா உட்கார்ந்து பொழுது போக்குவது என்பது இளைஞர்களுக்கு பிடித்த விஷயம். ஆனால்அப்படி செய்வது மன அழுத்தத்தை கொடுக்கும் என்று ஆய்வு கூறுகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள லாசேன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர். பியரி ஆன்ட்ரூ மிசௌட் மற்றும் இவரது குழுவினர் இது தொடர்பான ஆய்வு நடத்தினர். 16 முதல் 20 வயதுக்கு உட்பட்ட 7,200 வாலிபர்கள் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டனர்.

ஆய்வில், ‘தினமும் 2 மணி நேரத்திற்கு மேலாக இணையதளம் பயன்படுத்தினால் அது அதிக இணையதள பயன்பாடு. வாரம் முழுவதும் தினமும் 2 மணி நேரம் என்ற அளவில் பயன்டுத்தினால் அது வழக்கமான பயன்பாடு. வழக்கமான பயன்பாட்டில் இருப்பவர்களை காட்டிலும் அதிக பயன்பாட்டில் இருப்பவர்கள் அல்லது பயன்படுத்தாமல் இருப்பவர்கள் அதிக மன அழுத்தத்துடன் காணப்படுகின்றனர். ஆண்களில் அதிக பயன்பாட்டில் இருப்பவர்கள் மற்றும் பயன்படுத்தாதவர்கள் பட்டியலில் 3ல் 1 பங்கினர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பெண்களில் அதிகம் பயன்படுத்துபவர்களில் 86 சதவீதம் பேர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

இணையதளம் அதிகளவில் பயன்படுத்துபவர்களுக்கு உடல் ரீதியாக சில குறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதிக இணையதள பயன்பாட்டாளர்களில் 18 சதவீதம் பேர் உடல் பருமனானவர்கள். இது வழக்கமான பயன்பாட்டாளர்களில் 12 சதவீதமாக உள்ளது. இணையதளம் அதிகம் பயன்படுத்தும் பெண்களில் 59 சதவீதம் பேர் தூக்கத்தை இழக்கின்றனர். இவர்கள் இப்படி மதிப்பிடஇணையதளமே பயன்படுத்தாதவர்கள் சமுதாயத்தில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களாக கருதப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

Read more...

கம்பியூட்டரும், யு. எஸ்.பி. போர்ட்டும்


புதிய கம்ப்யூட்டரில் இப்போதெல்லாம் குறைந்தது நான்கு யு.எஸ்.பி. போர்ட்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் இணைக்கப்படும் சாதனங்களுக்கு, இவை கம்ப்யூட்டருக்குக் கிடைக்கும் மின் சக்தியை வழங்குகின்றன. இந்த சாதனங்களுக்கு வெளியே இருந்து மின்சக்தி இணைப்பு இல்லை எனில், கம்ப்யூட்டரிலிருந்துதான் பவர் தரப்படுகிறது. இதில் என்ன பிரச்னை என்றால், ஒவ்வொரு யு.எஸ்.பி. போர்ட்டும் அதிக பட்சம் 500 மில்லி ஆம்பியர் கரண்ட் தான் தர முடியும். கம்ப்யூட்டர் ஒன்றுடன், யு.எஸ்.பி. போர்ட் வழியாக, ஒரு சாதனம்இணைக்கப்பட்டால், இதில் பிரச்னை ஏற்பட வழியில்லை. யு.எஸ்.பி. ஹப் (பல யு.எஸ்.பி.போர்ட் கொண்ட ஒரு சாதனம் - மல்ட்டிபிள் ப்ளக் போல) ஒன்றை இணைத்து, அதில் பல சாதனங்களை இணைத்தால், அங்கு பிரச்னை எழ வாய்ப்புண்டு. இதற்குப் பதிலாக, ஒவ்வொரு யு.எஸ்.பி.போர்ட்டிலும் இணைக்கப்படும் சாதனங்கள் இயங்க எவ்வளவு மின் சக்தி தேவைப்படுகிறது என்பதனை நாம் அறிந்து கொண்டால், பிரச்னையை ஓரளவிற்குச் சமாளிக்கலாம். இதனை அறிந்து கொள்ள நமக்கு இலவசமாக USBdview என்ற ஒரு சாப்ட்வேர் கிடைக்கிறது. http://www.nirsoft.net /utils/ sb_devices_view.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம். இந்த சாப்ட்வேர் தொகுப்பினை டவுண்லோட் செய்து, கம்ப்யூட்டரில் இயக்கவும். இதில் உள்ள பல அப்ளிகேஷன்களில், பவர் என்பதுவும் ஒன்று. இதில் கிடைக்கும் பட்டியலில் கீழாக இது கிடைக்கும். இதில் நாம் காணவேண்டிய சாதனத்தினைக் கிளிக் செய்தால், அதற்கான தேவைப்படும் மின் சக்தி குறித்த தகவல் கிடைக்கும். இணைக்கப்படும் ஒவ்வொரு சாதனத்திற்கும் மின்சக்தி தேவையில்லை. இருப்பினும் அனைத்து இணைக்கப்பட்ட சாதனத்திற்கும் தேவைப்படும் மின்சக்தி குறித்த தகவல் காட்டப்படுகிறது. இந்த தகவல்களைக் கொண்டு நாம் கிடைக்கும் மின்சக்தியின் அளவுக்கேற்றாற்போல, யு.எஸ்.பி.போர்ட்டில் சாதனங்களை இணைத்துக் கொள்ளலாம். 

Read more...

லாபம் தரும்நெல்லி வளர்ப்பு!

நெல்லி மகசூல் பற்றி கூறும், திருநெல்வேலி தோட்டக் கலைத் துறை இணை இயக்குனர் தமிழ் வேந்தன்: உலகம் முழுவதும் நெல்லியின் தேவையிருந்தாலும், தமிழகத்தில் மட்டும் தான், நெல்லி விளைச்சல், ஆண்டு முழுதும் பலன் தரக் கூடியது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடவு செய்து விட்டால், மழை ஆரம்பித்தவுடன், சீராக வளர்ந்து விடும். உவர் நிலம் உள்ள, ராமநாதபுரம் போன்ற கடற்கரை மாவட்டங்கள் தவிர, மற்ற எல்லா இடங்களிலும் வளரக் கூடியது, நெல்லி. செம்மண் பூமியாக இருந்தால், மகசூல் நன்றாக இருக்கும்.நட்டவுடன், காற்று புகாத வகையில், கன்றுகளைச் சுற்றி, மண்ணை இறுக்க வேண்டும். ஒரே ரகத்தை நடாமல், பல ரகங்களை கலந்து நட்டால், மகரந்தச் சேர்க்கை நடந்து, மகசூல் நன்றாக இருக்கும். நட்ட முதல் இரண்டு ஆண்டுகளில், மழைக்காலம் தவிர, மற்ற நேரங்களில் வாரத்திற்கு ஒரு முறை, நீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாவது ஆண்டிலிருந்து, நெல்லி பலன் தரும்; அப்போது, 20 நாட்களுக்கு ஒரு முறை, நீர் பாய்ச்சினால் போதுமானது.நெல்லி மரங்கள், நன்கு படர்ந்து அடர்த்தியாவதற்கு, ஐந்து ஆண்டுகள் வரை ஆகும் என்பதால், இந்தக் காலத்தில் ஊடு பயிராக, காய்கறி, பருப்பு வகைகளைப் பயிரிடலாம். மரங்கள் பூக்கும் தறுவாயில், நீர் பாய்ச்சத் தேவையில்லை. கோடை காலத்திற்குப் பின், காய்கள் பிடிக்கத் துவங்கும் போது, பருவ மழை துவங்கி விடும். உரமிட்ட உடனே, நீர் பாய்ச்சுவது முக்கியம். இம்முறையைப் பின்பற்றினால், பிஞ்சுகள் உதிர்வதை தடுக்க முடியும்.நெல்லியில், 100 ஆண்டுகள் வரை காய்க்கும் மரங்களும் உள்ளன. ஒரு மரம், 10 ஆண்டுகள் காய்க்கும் என, வைத்துக் கொண்டாலும், ஒரு பருவத்தில் மரத்திற்கு குறைந்தது, 80 முதல், 100 கிலோ நெல்லி கிடைக்கும். ஏக்கருக்கு, 110 மரம் வைக்கலாம். கிலோ, 10 ரூபாய் விற்றாலே, ஏக்கருக்கு, 80 ஆயிரம் லாபம் கிடைக்கும். அருகில் உள்ள சந்தை வாய்ப்புகளை தெரிந்து கொண்டால், நெல்லி போல் லாபத்தை அள்ளித் தரக் கூடியது வேறு இல்லை.

Read more...

புகுந்த வீடும் தன் குடும்பம் என்ற எண்ணம் வந்தால் எந்த பிரச்சனையும் வராது.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012


தற்போதுள்ள காலகட்டத்தில் திருமணம் என்பது பொழுது போக்காக உள்ளது. பெண்கள் தாய் வீட்டில் இருக்குத் போது எப்படி வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் புகுந்த வீட்டில் எந்த பிரச்சனை வந்தாலும் அந்த குடும்பத்தின் கௌரவத்தை காக்க பெண்கள் பாடுபட வேண்டும். பெண்கள் தன் புகுந்த வீட்டில் அன்பாகவும்.

ஒற்றுமைக்காகவும் ஒரு சில தியாகங்களை செய்யவும் முன்வர வேண்டும். ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்கு உண்டு என்பதைக் காட்ட வேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது.

அதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. சில பெண்கள் தாய்வீட்டில் கிடைக்கும் சுதந்திரம் புகுந்த வீட்டில் கிடைக்காத போது பிரச்சனைகள் தலைதூக்குகிறது.

இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது. எனவே பெண்களுக்கு புகுந்த வீடும் தன் குடும்பம் என்ற எண்ணம் வந்தால் எந்த பிரச்சனையும் வராது.

Read more...

பாச அரவணைப்பான `கட்டிப்புடி' வைத்தியம்


குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும். பிறந்து சில மாதங்களில் ஆட்களைப் பார்த்து இனம் காணத் தெரியாத பொழுதே தன் தாயினை குழந்தை நன்றாக அடையாளம் தெரிந்து வைத்திருக்கும்.

தாயின் அரவணைப்பிற்கு பிறகே சமாதானம் அடையும். இல்லாவிட்டால் காரணமே இல்லாமல் அழுவதை நாம் பார்க்கலாம். ஆனால் இதுபோன்ற பாசத்தை தந்தையுடன் குழந்தை வெளிப்படுத்துவது கிடையாது. தாய்- குழந்தைக்கு மட்டும் அப்படி என்ன பிணைப்பிருக்கிறது? என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.

அதற்கான விடை கிடைத்துவிட்டது. நிïயார்க் மாகாணத்தைச் சேர்ந்த மவுன்ட் சினாய் மருத்துவ மைய ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். `ஆக்சிடாக்சின்' என்னும் ஒருவித ஹார்மோன்கள் பெண்களின் உடலில் காணப்படுகின்றன.

இவைதான் தாய்- குழந்தையின் பிணைப்பை தூண்டுகிறது. அதுமட்டுமல்லாமல் வேறு சில பணிகளிலும் இந்த ஹார்மோன்கள் பணியாற்றுகிறது. தாய்க்கு, பாலூட்டும் உணர்ச்சியை அதிகமாக்குவது, உடல் உழைப்பை தூண்டுவது, குழந்தைகளை தாயின் அருகாமையை எதிர்பார்த்து காத்திருக்க வைப்பது போன்ற பணிகளில் ஆக்சிடாக்சின் பங்கேற்கிறது.

பாச அரவணைப்பான `கட்டிப்புடி' வைத்தியத்தில் தூண்டப்படுவது இந்த ஹார்மோன்கள்தான்!

Read more...

திருமண வாழ்க்கைக்கு பரஸ்பர அன்பு அவசியம்.


மணமகன் கருப்பாக இருக்கிறார், வயதானவராக இருக்கிறார், அழகில்லாமல் இருக்கிறார், காதலன் இருக்கும்போது இன்னொருவரை எப்படி திருமணம் செய்வது... இப்படி பல காரணங்களைக் கூறி தாலி கட்டும் நேரத்தில் திருமணம் நின்று போவது அதிகரித்து வருகிறது. இதெல்லாம் முதலிலேயே தெரியாதா? திருமணத்துக்கு முதல் நாள்தான் தெரியுமா? கடைசி நேரத்தில் திருமணம் நின்றுபோனால் எவ்வளவு அவமானம்? எத்தனை பேருக்கு மனக் கஷ்டம்? திருமணம் வேண்டாம் என முடிவு செய்யும் அந்த நேரத்தில் வரும் தைரியம் ஆரம்பத்திலேயே வந்தால் யாருக்குமே பிரச்னை கிடையாதே. மணக்கோலம் பூண்டபிறகு, திருமணம் வேண்டாம் என முடிவு செய்து மண்டபத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார் மணமகள்.

பட்டுப் புடவை, கழுத்து நிறைய நகை, முழு மேக்கப்புடன் மணக்கோலத்தில் ஒரு பெண் கும்பகோணம் புது பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார்.  ரோந்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண் திருமணம் பிடிக்காமல் தாலி கட்டும் நேரத்தில் ஓடி வந்திருப்பது தெரியவந்தது. அவருக்கு வயது 18. பிளஸ் 2 படித்திருக்கிறார். கும்பகோணம் அருகே ஆவூர் ஊத்துக்காடு சொந்த ஊர். மருங்கூரை சேர்ந்த ராஜாவுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயித்திருக்கிறார்கள். பட்டீஸ்வரத்தில் திருமணம். மணமகன் 13 வயது மூத்தவர். அதிகம் படிக்கவில்லை. அவரை திருமணம் செய்வதில் பெண்ணுக்கு இஷ்டமில்லை. 

அதனால், கல்யாண மண்டபத்துக்கு போவதாக அப்பா, அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு, ஓடிவந்துவிட்டார். இதையடுத்து அவரது பெற்றோரை போலீசார் வரவழைத்தனர். அவமானம் தேடி தந்த மகள் எங்களுக்கு வேண்டாம்என்று கூறிவிட்டு அவர்கள் சென்று விட்டனர். இதையடுத்து, பெரியப்பாவுடன் அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், மணமகன் குடும்பத்தினர் உடனே ஊருக்கு புறப்பட்டு சென்று உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். பெண் வீட்டாரும் மண்டபம் தயார், சாப்பாடு தயார், உறவினர்களும் இருந்ததால் ஓடிப்போன பெண்ணின் தங்கைக்கு அதே முகூர்த்தத்தில் உறவுக்கார பையனுக்கு பேசி உடனடியாக திருமணம் செய்து வைத்தனர்.

திருமண வாழ்க்கைக்கு பரஸ்பர அன்பு அவசியம். ஒருவரையொருவர் பிடித்திருந்தால்தான் அன்பு வரும். நிச்சயம் செய்வதற்கு முன்பு மணமகன், மணமகள் இருவரிடமும் திருமணத்துக்கு ஒப்புதல் வாங்க வேண்டும். அப்படி இல்லாமல் பெற்றோரே முடிவு செய்தால், திருமண நாளில் இப்படித்தான் அவமானத்தை சந்திக்க நேரிடும்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets