உங்கள் வருகைக்கு நன்றி

ஆக்கமும்... அழிவும் தான் அணுசக்தி

செவ்வாய், 30 அக்டோபர், 2012


பூமியில் கிடைக்கும் கனிமப்பொருட்களில் யுரேனியம்ப்ளூட்டோனியம் முக்கியமானவை. இவை தான் அணுசக்திக்கு மூலப்பொருட்கள். அணுஉலையில் யுரேனியத்தை செலுத்திய பின்அதில் இருந்து அணுக்கூறுகள் பிளக்கபிளக்க முடிவில்லா வெப்ப சக்தி உருவாகிறது. இதில் இருந்து தான் மின்சாரமும்  தயாரிக்கப்படுகிறதுஅணு ஆயுதத்துக்கு  தேவையான சக்தியும் கிடைக்கிறது.
அணுஉலையில் யுரேனியத்தை செலுத்தியவுடன்அணுவை பிளப்பதால் மூன்று வித எனர்ஜி அதாவது எரிசக்தி கிடைக்கிறது. இதைத்தான் பிஷன் ப்ராடக்ட்ஸ்’ எபர். 1. கைனடிக் எனர்ஜி. 2. காமா கதிரியக்க சக்தி. 3. ப்ரீ நியூட்ரான்ஸ். இவை தான் மின்சாரம் முதல் அணுகுண்டு வரை தயாரிக்க கைகொடுக்கின்றன.
அணுஉலையில் அணுவை பிளக்கும் யுரேனியம்ப்ளூட்டோனியம் போன்றவை கம்பிகளாக இருக்கும். இவற்றில் வெளிப்படும் வெப்பம் அதிகரிக்கும் போது தான் ஆபத்தே. இதை கட்டுக்குள் வைத்திருப்பதுஇதில் பொருத்தப்பட்டுள்ள கோர்’ என்ற சாதனம்.
இந்த வெப்பத்தை தணித்து கட்டுக்குள் வைக்கவேகனநீர்திரவ சோடியம்ஹீலியம் போன்ற ஏதாவது ஒன்று செலுத்தப்படுகிறது.
கட்டுக்குள் உள்ள வெப்பசக்திஅடுத்து டர்பைன் வழியாக செல்லும் போது தான் மின்சாரம் தயாரிக்கும் பணி நடக்கிறது.
மின்சாரம் தயாரிக்கப்பட்டதும்வழக்கமான மேல்நிலை கம்பிகள் மூலம் கப்பலுக்கும் கூட மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. நீர்மூழ்கிக்கும் கூட ஒளியூட்டுகிறது.

ஆக்கமும்... அழிவும் தான் அணுசக்தி

அணுவை துளைக்கதுளைக்க அதன் சக்தியில் ஆக்கமும் இருக்கிறதுஅழிவும் இருக்கிறது. மின்சாரம் தயாரிப்பதுவிமானத்தை இயக்க பயன்படுவதுநீர்மூழ்கிகளை இயக்குவதுகேன்சர் சிகிச்சைக்கு உதவுவதுமருத்துவ இமேஜிங் பரிசோதனைகளுக்கு ஐசோடோப்களை உருவாக்குவது ஆகியவை ஆக்கமாக சொல்லலாம்.
அழிவு என்ன தெரியுமாஅணு குண்டு மற்றும் அணு ஆயுதங்கள் தான். ஒரு நகரத்தையே அழிக்க ஒரு அணுகுண்டு போதும். அணு உலையில் ஏற்படும் விபத்தினாலும் கதிர்வீச்சு மூலம் அழிவு ஏற்படும். 

எப்படி செயல்படுகிறது?

ரியாக்டரின் மையப் பகுதியில் கோர் கம்பிகளை சுற்றி நீர் இருக்கும். அதற்கு அதிக நீர் தேவை காரணமாகவே அணுமின் நிலையங்கள் பெரும்பாலும் ஆறுகடலோரப் பகுதிகளில் அமைக்கப்படும்.
அணுக்களை பிளக்கும்போது ஏற்படும் வெப்பம் ஒரே முறையாக வெளியாகாமல் தடுக்க கருவிக்குள் 2 அடுக்கு சுற்றுச் சுவர்கள் இருக்கும். இந்த நடைமுறையில் டர்பைன்ஜெனரேட்டரும் முக்கிய பங்கு வகிக்கும். பயங்கர சக்தியுடன் அணுவை பிளக்கும்போது கோர் கம்பிகளில் வெளிப்படும் வெப்பத்தால் நீர் கொதித்து ஆவியாகிஅதனுடன் டர்பைன் செயல்பட்டு ஜெனரேட்டரில் மின்சக்தியாக மாற்றப்படும்.

கதிர்வீச்சு ஆபத்து  என்னென்ன?

அணுஉலை கதிர்வீச்சு கசிந்துஉலையை குளிர்விக்க பயன்படுத்தப்பட நீரில் பரவும். அதன் மூலம் கடல்நீரில் பரவும்காற்றில் பரவும்மண்ணில் இறங்கிசெடிகொடிபயிர்களை அழிக்கும். வானில் நீராவியாக பரவிமழை தூறலில் கூட நம் தலையில் விழும். இப்படி அணுக்கதிர் ஆபத்துக்கு அளவே கிடையாது.
சாதா காய்ச்சல்இருமலில் தான் ஆரம்பிக்கும்காசநோய் முதல் கேன்சர் வரை வரும். உறுப்புகளை ஊனமாக்கும். காலம் காலத்துக்கு பாதிப்பு நீடிக்கும்.
ரஷ்ய செர்னோபில் விபத்து நடந்து 25 ஆண்டாகியும் இன்னும் அதன் பாதிப்புக்கு அளவே இல்லை.

குட்டிப்பையன்... குண்டு மனிதன்

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதியை யாராலும் மறக்க முடியாதுஆம்இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில்நடந்த பயங்கரம் அது. ஜப்பானிய நகரான ஹிரோஷிமா மீது யுரேனியம் சார்ந்த துப்பாக்கி வடிவ அணுகுண்டை போட்டது அமெரிக்கா. இந்த குண்டுக்கு பெயர் லிட்டில் பாய்.
மூன்று நாளுக்கு பின்அதே நாட்டின் நாகசாகி நகரில் அமெரிக்கா மீண்டும் போட்டது. இந்த குண்டுக்கு பெயர் பேட் மென்.’ அப்போது ஏற்பட்ட அழிவுகளுக்கு பின் தான்அணுவை மின்சாரத்துக்கு மட்டும் பயன்படுத்த உலக நாடுகள் உறுதி பூண்டன. நிலைத்ததா அந்த உறுதி...?

யாரிடம் தான் இல்லை அணுகுண்டு?

ஐம்பது ஆண்டுகளை கடந்தாலும் ஹிரோஷிமாநாகசாகி அழிந்த கதையை இன்னும் மறக்கவில்லை பல நாடுகளும். ஆனாலும்குண்டுபோட்ட அமெரிக்காவில் ஆரம்பித்துசீனாபாகிஸ்தான்பிரான்ஸ்வடகொரியாஇஸ்ரேல்ரஷ்யாபிரிட்டன் மட்டுமல்ல இந்தியாவும் அணு குண்டு தயாரிக்கும் திறன் படைத்துள்ளன.  இதுவரை இந்த நாடுகள் சேர்ந்து 2 ஆயிரம் முறை பூமிக்கடியில் அணுகுண்டு சோதனைகளை நடத்தியுள்ளன.

Read more...

விழிப்புடன் இருந்து பார்த்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 80 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது மிக எளிதாக தவிர்க்கக் கூடிய பிரச்னை. ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. நாற்பது வயதிற்கு மேல், இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை முழுமையாக மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது முக்கியம். மார்பகப் புற்றுநோயை கண்டறிய, "மேமோகிராம்' கருவி பயன்படுகிறது. இந்த பரிசோதனை, நவீன வசதியுடன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வந்துவிட்டது. இதில் எந்தச் சிரமமும் வலியும் இல்லாமல், பரிசோதனை செய்யலாம். மொத்தமே எட்டு நிமிடங்கள் தான் ஆகும்; மிகவும் துல்லியமாக முடிவைத் தெரிந்து கொள்ளலாம்; செலவும் அதிகம் இல்லை; 3,500 ரூபாய் வரை செலவாகும்.பரிசோதனையின் போது தரப்படும் கதிரியக்க அளவைவிட இதில் குறைவு. நோய் வந்த பின், தாமதமாகக் கண்டுபிடித்து சிகிச்சை செய்வதை விட, இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ளும் போது, அவஸ்தைகளும், செலவுகளும் வெகு குறைவே. தொடர்ந்து கவனமாக இருந்தால், ஒரு வேளை புற்று நோய் பாதிப்பு வந்தாலும், மார்பகங்களை இழக்காமல் சிகிச்சை செய்து கொள்ள முடியும். மார்பகப் புற்றுநோய் ஏன் வருகிறது என்பதற்கு, இதுவரை எந்த சரியான காரணமும் கண்டுபிடிக்கப்படவில்லை. நம் வாழ்க்கை முறை, உணவுப் பழக்க மாற்றத்தால், பெண்கள் சீக்கிரமே வயதிற்கு வருவது, மாதவிடாய் சுழற்சி, 50 வயதிற்கு மேலும் தொடர்வது, "ஒபிசிட்டி' எனும், உடல் எடை அதிகரிப்பு, தாய்ப்பால் தராமல் இருப்பது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவை எதுவுமே இல்லாமலும், என்ன காரணம் என்று தெரியாமலும், சிலருக்கு மார்பகப் புற்றுநோய் வரலாம். எனவே, விழிப்புடன் இருந்து நம் உடலை பார்த்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். 

Read more...

உடல்நலம் குறித்த சந்தேகங்களுக்கு முதல்முறையாக போனில் தகவல் பெறும் இலவச சேவை

உடல்நலம் குறித்த சந்தேகங்களுக்கு சரியான பதில் பெறநாட்டிலேயே முதல்முறையாக போனில் தகவல் பெறும் இலவச சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெலிகேர் டெக்னாலஜி என்ற நிறுவனம் இந்த சேவையை போன் மற்றும் இணைய தளத்தில் 24 மணி நேரமும் அளிக்கிறது. மக்கள் தங்கள் உடல்நலம் குறித்த சந்தேகங்களுக்கு ஆண்டு முழுவதும்எந்நேரத்திலும் போனில் பதில் பெறலாம். நோய் அறிகுறிகள்நோய்சிகிச்சைமுறைமாற்று சிகிச்சைமருந்துகள்பின்விளைவுகள்நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் உட்பட எல்லா தகவல்களும் கிடைக்கும்.
போனில் தகவல் பெற 3300 6666 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இணைய தளத்தில் சந்தேகங்களுக்கு பதில் அறிய,   www.healthline24x7.com  என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். உடல்நலம் குறித்த சந்தேகங்களுக்கு நம்பிக்கையானமருத்துவ உலகில்     ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள்முன்னேற்றங்களுக்கு ஏற்ப தகவல்களை இலவசமாக இந்த சேவை மூலம் பெறலாம்.

சந்தேகங்களுக்க சிறந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். நோய்க்கு டாக்டர்கள் உங்களுக்கு பரிந்துரைத்துள்ள மருந்துமாத்திரைகள் குறித்த சந்தேகங்கள்மாற்று மருந்துகள்மருந்துகளின் விலைகள் உட்பட எல்லா தகவல்களும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

Read more...

கிளிஞ்சலில் கிடைக்கும் கடலளவு லாபம்!


சுவரை அலங்கரிக்கும் ஓவியத்தில் தொடங்கிதிரைச்சீலைபூச்சாடிடேபிள் அலங்காரம்... இன்னும் கற்பனை கூட செய்து பார்த்திராத பல பொருள்கள்அத்தனையும் கிளிஞ்சலில் செய்தவை! நீலாங்கரையில் இருக்கும் ஷம்சியா பானுவின் வீட்டினுள் எந்தப் பக்கம் திரும்பினாலும் கிளிஞ்சல் மயம்! பயோ கெமிஸ்ட்ரி பேராசிரியையாக இருந்து ஓய்வுபெற்ற ஷம்சியா பானுவுக்கு இன்று முழுநேர வேலையே கிளிஞ்சல் கலைப் பொருட்கள் உருவாக்குவதுதான்.


‘‘எங்க வீடு இருக்கிறது நீலாங்கரை ஏரியாவுல கடற்கரை ஓரம். பீச்சுக்கு போகும்போதெல்லாம் கிளிஞ்சல் சேகரிக்கிறது வழக்கம். ஓவியமும்கைவினைக் கலைகளும் தெரியும். அதை அடிப்படையா வச்சு கிளிஞ்சல்கள்ல கலைப் பொருட்கள் செய்ய ஆரம்பிச்சேன். கற்பனை சக்தி இருக்கிறவங்கஇதுல விதம் விதமா முயற்சி பண்ணலாம்.  பிசினஸா பண்ண நினைக்கிறவங்க துணிஞ்சு செய்யலாம்’’ என்கிற ஷம்சியா,கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு வழிகாட்டுகிறார்.

என்னென்ன தேவைமுதலீடு?
‘‘கிளிஞ்சல்கள்தான் அடிப்படை. கடற்கரைகள்ல சேகரிக்கலாம். வண்ணாரப்பேட்டைல மொத்த விலைக் கடைகள்ல எல்லா நாட்டு கிளிஞ்சல்களும் கிடைக்கும். ஒட்டறதுக்கு பசைஅலங்கரிக்க மணிகண்ணாடிமுத்து மாதிரியானவைகயிறு... அவ்வளவுதான். ரூ.2ஆயிரம் முதலீடு போதுமானது.’’

என்னென்ன செய்யலாம்என்ன ஸ்பெஷல்?
‘‘பேப்பர் வெயிட்பூச்சாடிசுவர் அலங்காரம்தோரணம்கண்ணாடிநகைப் பெட்டிஃப்ரிட்ஜ் மேக்னட்... இன்னும் என்ன வேணாலும் பண்ணலாம். கிளிஞ்சல் பொருட்கள் 50 வருஷம் ஆனாலும் அப்படியே இருக்கும். கலர் மாறாது. தூசி படிஞ்சு அழுக்கு ஆகாது.’’

விற்பனை வாய்ப்புலாபம்?
‘‘குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லா வயசுக்காரங்களுக்கும்எல்லா விசேஷங்களுக்கும் தரமுடியற அன்பளிப்புகளை இதுல பண்ண முடியும். குட்டி பூவை 40ரூபாய்க்கு விற்கலாம். சுவர் அலங்காரம் ஆயிரம் ரூபாய். ஒரு பாக்கெட் கிளிஞ்சலோட விலை 60 ரூபாய். நாம பண்ற பொருளுக்கேத்தபடி தேவை மாறும். கைவினைப் பொருள் கண்காட்சிகள்அன்பளிப்புப் பொருள்கள் விற்கிற கடைகள்ல நல்லா விற்பனையாகும். கிளிஞ்சல் வச்சா வீட்டுக்கு நல்லதுங்கிற நம்பிக்கையிலசாதாரணமாகவே ஏதாவது ஒரு கிளிஞ்சல் பொருளை வாங்கி வீட்ல வைக்கிறாங்க மக்கள். 50 சதவீத லாபம் நிச்சயம்.’’

Read more...

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க

திங்கள், 29 அக்டோபர், 2012


 டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கும் பணி துவங்கியுள்ளது. டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பகுதி நேர ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கப்படுகிறது. நிலவேம்பு, சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சிறந்த மூலிகை. 

அரசு மருத்துவமனை சித்த மருத்துவர்கள் கூறுகையில், ‘மூலிகை குடிநீரை டெங்கு வந்தவர்கள் மட்டும் இன்றி, வராமல் தடுப்பதற்கும் பயன்படுத்தலாம். தொடர்ந்து 7 நாட்களுக்கு மூலிகை குடிநீரை குடித்தால், டெங்கு மட்டுமின்றி, பன்றிகாய்ச்சல், சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்களும் வருவதை முற்றிலும் தடுக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. ஒவ்வொரு சீதோஷ்ண நிலை மாறும் சீசனிலும் நிலவேம்பு குடிநீரை குடிப்பதன் மூலம் வைரஸ் காய்ச்சல் வராமல்  தடுக்க முடியும்என்றனர்.

Read more...

சோதனையில் வெற்றி

ஞாயிறு, 28 அக்டோபர், 2012


நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களைப் பொறுமையுடன் சகித்துக்கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். உங்களுடைய இந்த இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று என்று கூறுவார்கள்'' (அல்குர்ஆன் 13:24).
அகிலமனைத்தையும் படைத்த ரப்புல் ஹிஸ்ஸத் தன் படைப்பினத்தின் மீது மிகுந்த அன்பும்,அருளும் கொண்டவன். அவற்றின் உணவிற்கும் வாழ்விற்கும் பொறுப்பேற்றுக்கொண்டவன். இருந்தும் சிலர் வறுமையிலும்துன்பத்திலும்துயரத்திலும் உழல்வதும்துவள்வதும் பலர் செல்வத்திலும்செல்வாக்கிலும் இன்பமாய் மேம்பட வாழ்வதும் இயற்கையின் பால்பட்ட நியதி என்றும்விதி வந்த வினைகள் என்றும் கொண்டு இதுவரை உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
அல்லாஹ்விற்கு தன் அடியானை தண்டிக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. ஆனால் மனிதன் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக சிறுசிறு தண்டனைகளைஅதுவும் அந்த மனிதனால் ஏற்றுக்கொள்ளும் வகையில் மட்டும் அனுபவிக்கச் செய்து விட்டோமேயானால் நாளை மகஸரில் பாவமற்ற மனிதனாக கேள்விக் கணக்குகள் இலேசாக்கப்ட்ட நிலையில் சுவர்க்கம் என்ற அற்புதப் பரிசை கொடுக்கலாமே என்றுதான் அல்லாஹ் ஆசை கொள்கிறான்.
பொன்நெருப்பில் புடம் போட்டால்தான் பொலிவு பெறும். மனிதனும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டால்தான் புனிதம் பெற முடியும். அந்த சோதனையில் இறைவன் மீது கொண்ட நம்பிக்கையின் வேர் எவ்வளவு ஆழமாக உள்ளதுஅதன் அஸ்திவாரம் எவ்வளவு உறுதியாக உள்ளது என்பதைத்தான் அல்லாஹ் கூர்ந்து நோக்குகிறான். அந்த சோதனையில் வெற்றி பெற்று விட்டோமேயானால் நாம் ஈடேற்றம் பெற்றவர்களாகி விடுவோம். நமக்குக் கிடைக்கும் இறுதி வீடும் மிக்க நல்லதாகிவிடும்.
எந்த சோதனையிலும் அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கையில் தளர்வுகொள்ளக் கூடாது. ""உங்களை பயத்தைக் கொண்டும்பசியைக் கொண்டும்உயிர் பொருள் இழப்பைக் கொண்டும் உங்கள் வளத்தைக் கொண்டும் சோதிப்போம். அந்த சோதனையை யார் தன் பொறுமையின் மூலம் வெற்றி கொள்கிறார்களோ அவர்கள் எண்ணியறியாதஅளவிற்கு வெகுமதியையும் வழங்குவோம்'' என்றும் சூரா அல் பகராவிலே மிக அழகாக எடுத்துரைக்கிறான் அல்லாஹ். நாளைக்கு மறுமையில் நமக்கு நல்ல கூலியை வழங்கவும்இவ்வுலகில் தன் படைப்பு தன் மீது எந்த அளவுக்கு உறுதியான நம்பிக்கை வைத்திருந்தது என்பதை அளந்து பார்ப்பதற்காகவும்தான் சின்ன சின்ன துன்பங்களைத் தந்து சோதிக்கிறான்.

""பொறுமையுடன் காத்திருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்தவர்களின் கூலியை வீணாக்கிவிட மாட்டான்'' (அல்குர் ஆன் 11:115).

Read more...

எரிவாயு சிக்கனம் தேவை


தாளிப்பதற்கு வாணலியை அடுப்பில் வைக்கும்போதுஅதில் எஞ்சியிருக்கும் தண்ணீரை நன்கு துடைத்துவிட்டு வைத்தால்எரிவாயு மிச்சமாகும்.
கடைசி தோசை அல்லது சப்பாத்தி கல்லில் இருக்கும்போதே அடுப்பை நிறுத்திவிடலாம். கல் சூட்டிலேயே அவை ரெடியாகிவிடும்.
எண்ணெய் நன்கு காய்ந்த பின்பு அடுப்பை அணைத்துவிட்டு தாளிக்கத் தேவையான பொருள்களை எல்லாம் போட்டால் அந்தச் சூட்டிலேயே தாளித்துவிடலாம்.
காபிடீபால் போன்றவற்றை வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் அருந்தலாம். முடியாத பட்சத்தில் ஃப்ளாஸ்கில் ஊற்றிவைக்கலாம். இதனால் ஒவ்வொருத்தருக்கென்று தனித்தனியாக சூடாக்குவதை தவிர்க்க முடியும். சாப்பாட்டுக்கும் இதே முறையைப் பின்பற்றலாம் அல்லது ஹாட்பேக்கில் போட்டு வைத்துவிடலாம்.
இட்லி பாத்திரத்தில் இட்லி அவிக்கும்போது அதன் அடியில் பருப்புஉருளைக்கிழங்கு போன்றவற்றை வைத்தால் அருமையாக வெந்துவிடும்.
தோசையை இருபக்கமும் வேக வைக்காமல் ஆப்பம் மாதிரி மூடிவைத்து எடுக்கலாம். எரிவாயுவும் மிச்சமாகும்புதிய சுவையும் கிடைக்கும்.
யாராவது வீட்டின் அழைப்பு மணியை அடித்தாலோ அல்லது தொலைபேசி அழைப்பு வந்தாலோ காஸ் அடுப்பை அணைத்துவிட்டுச் செல்லுங்கள். எரிவாயு மிச்சமாவதுடன் மறதியால் ஏற்படும் சில விபத்துகளையும் தவிர்க்கலாம்.
வாரத்தில் ஒரு நாள் ஒரு நேரமாவது சமைக்காத இயற்கை உணவுஅவல்முளைகட்டிய பயறுபழங்கள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
பருப்புசாதம் போன்றவற்றை குக்கரினுள் மற்றொரு பாத்திரத்தை வைத்து சமைக்காமல்குக்கரிலேயே நேரிடையாக சமைத்தால் எரிவாயு மிச்சமாகும்.
அவ்வப்போது குடிப்பதற்கான நீரை காய்ச்சுவதை தவிர்த்துஅகலமான பாத்திரத்தில் ஒரு நாள் முழுவதற்கும்,தேவைப்படும் தண்ணீரை மொத்தமாகக் காய்ச்சி வைத்துக்கொள்ளலாம்.
சமையல் தொடங்குவதற்கு முன் அதற்குத் தேவையான அனைத்துப்பொருள்களையும் தயார் நிலையில் வைத்துக்கொண்டால்எரிபொருள் விரயமாவதைத் தடுக்கலாம்.
*காய்குழம்பு வகைகளை முடிந்தவரை மூடி வைத்தே சமைக்க வேண்டும்.
குழம்புகூட்டுபொரியல் எனத் தனித்தனியாக தாளிக்காமல் அனைத்தையும் மொத்தமாக தாளிக்கலாம்.
அடுப்பின் பர்னர்களை அவ்வப்போது நன்கு சுத்தம் செய்து எப்போதுமே நீல நிற ஜூவாலை எரியுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

Read more...

நீரிழிவு நோயும், வெண்டைக்காய் மருத்துவமும்!.

சனி, 27 அக்டோபர், 2012


நீரிழிவு நோய் தற்போது அனைவரின் உடலிலும் வந்துவிடுகிறது. இத்தகைய நீரிழிவு உடலில் வந்துவிட்டால், அதனை முற்றிலும் சரிசெய்ய முடியாது. ஆனால் அவற்றை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாக வாழ முடியும். அதற்கு இன்சுலின் ஊசி தான் ஒரே வழி என்று நினைக்க வேண்டாம். அத்தகைய நீரிழிவை இயற்கை முறையிலும் கட்டுப்படுத்தலாம். அதிலும் காய்கறிகளில் வெண்டைக்காயை சாப்பிட்டால், நீரிழிவு கட்டுப்படும்.
நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டைக்காயை பயன்படுத்த வேண்டும்?

1.       இரண்டு வெண்டைக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும்.
2.       முனைகளை நறுக்கியப்பின் அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல், ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.
3.       பின் காலையில் எழுந்து, அந்த துண்டுகளை நீக்கி, அந்த நீரை குடிக்க வேண்டும்.
4.       இதனை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.
5.       சொல்லப்போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.
6.       ஆகவே வெண்டைக்காயை குழம்பு, பொரியல் என்று சாப்பிடுவதை தவிர்த்து, மேற்கூறியவாறு சாப்பிட்டால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.
7.       வெண்டைக்காய் எப்படி நீரிழிவைக் கட்டுப்படுத்தும்?
8.       வெண்டைக்காயில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. ஆகவே இதனை அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, வயிறும் நிறைந்துவிடும். இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
9.       நீரிழிவில் டைப்-2 நீரிழிவு என்று ஒன்று உள்ளது. இது சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த வகையான நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.
10.   எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இந்த சத்து உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட்டின் செரிமான நேரத்தை குறைத்து, அவை இரத்தத்தில் கலக்காமல் தடுக்கிறது. இத்தகைய சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது.
எனவே, வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்து, நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள். தட்ஸ்தமிழ்

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets