உங்கள் வருகைக்கு நன்றி

ரத்த அழுத்தம் எதற்கு அறிகுறி:?

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012


ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம் என இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுசம்மந்தமாக அவர்கள் நடத்திய ஆய்வில் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முன்பு பலருக்கு ரத்த அழுத்த நோய் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. 

எனவே சர்க்கரை நோயின் அறிகுறியாகத்தான் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அது இதயத்தில் உள்ள பாதிப்பாகவும் இருக்கலாம். சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் அதுவும் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். 

எனவே ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உடனடியாக இதயம், சிறுநீரகம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். மேலும் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா? என்றும் பரிசோதித்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளர்.

நீரிழிவு நோய்க்கு கோவைக்காய்...

சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கொஞ்சம் நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியது தான் கோவைக்காய்.

கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொறியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்து கொள்வதுண்டு. மற்றும் கோவைக் காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகு பொடி, சீரகப் பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவு தான் கோவைக்காய் பச்சடி தயார்.

இதனை வாரம் 2 நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப் புண் குணமாகும். நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சேரும் சர்ககரை அளவைக் கட்டுப்படுத்தும். ஆனால் நிறைய பேர் பாகற்காயை ஒதுக்குவது போல் கோவைக் காயையும் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி விடுகிறார்கள்.

நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளும் விருப்பமுடையதாகத் தான் ஆகும். இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம். பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பி விட்டாலே வாய்ப்புண் ஆறிடும்.

வயிற்றுப் புண் இருப்பவர்கள் வாரம் 2 நாள் கோவைக்காயை சேர்த்துக் கொள்ளலாம். கோவைக்காயை பீன்ஸ் போல பொறியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும் ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் சேர்த்து அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். முக்கியமா முற்றின கோவைக்காய் வாங்க கூடாது பிஞ்சு காயா பார்த்து வாங்கணும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். 

Read more...

எளிதாக விரட்ட முடியுமா மாரடைப்பை ?


ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி, எல்லா தரப்பினரும் பாதிக்கப்படும் நோய்களுள் ஒன்று... மாரடைப்பு. உலகிலேயே அதிகமாக மனிதர்கள் இறப்பதற்கு முக்கிய காரணமாக இந்நோய் கண்டறியப்பட்டு இருக்கிறது. உணவு விஷயத்திலும், பழக்கவழக்கத்திலும் தனிக்கவனம் செலுத்தினால் மாரடைப்பை எளிதில் விரட்டி விடலாம்.

அதற்கு என்ன செய்யலாம்?

இதயத்தை பாதுகாப்பாக வைத்திருந்தாலே மாரடைப்பை தடுத்து விடலாம். அதற்கு, இதய நோய்களை வருமுன் காப்பதுதான் நல்லது. இதில் முக்கிய பங்கு வகிப்பது உணவு. சரியான உணவு, உடற்பயிற்சி, நோய் வந்தால் சரியான சிகிச்சை, வாழ்வு முறைகளில் மாற்றம், மன நிலையில் அமைதி என்ற பல வழிகளில் இந்த நோயை சமாளிக்க வேண்டும்.

சாப்பிடும் உணவு எவ்வளவு கலோரிகள் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். வயதாக வயதாக, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு, 1500 கலோரிகள் போதுமானது. வனஸ்பதி, வெண்ணெய் இவற்றை அறவே தவிர்க்கவும். அதற்கு பதிலாக சிறிதளவு உருக்கிய நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

நார்ச்சத்தும், மாவுச்சத்தும் மிகுந்த கோதுமை, அரிசி, பீன்ஸ், ஓட்ஸ் மாவு, காய்கறி, பழங்கள் போன்ற உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். சமையலில் ஆலிவ் எண்ணெய், தானிய எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் இவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கவும். 4 பேர் உள்ள குடும்பத்திற்கு மாதம் 2 கிலோ எண்ணெய்க்கு மேல் உபயோகிக்க கூடாது.

ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் போதுமானது. உணவில் கண்டிப்பாக உப்பைக் குறைக்கவும். ஒரு நாளைக்கு 2,400 மில்லிகிராம் உப்பு போதுமானது. முடிந்தால் இந்த அளவையும் குறைத்துக் கொள்ளவும். முக்கியமாக, உடல் எடையை அதிகரிக்கவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வயிற்றை சுற்றி கொழுப்பு இருப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகம். அதனால் முடிந்தவரை உடற்பயிற்சி செய்யுங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். தகுந்த உணவு பழக்கவழக்கத்தையும் பின்பற்றுங்கள்.

இனி... மாரடைப்பு பற்றிய கவலையே வேண்டாம்!

Read more...

தெரிந்த பொருள். தெரியாத அதிர்ச்சியான செய்தி!

புதன், 29 ஆகஸ்ட், 2012


குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு என்றால் அது பால்தான். காலையில் எழுந்ததும் பால் குடிக்கும் பழக்கமும், பாலை குடியுங்கள் உடலுக்கு நல்லது என்ற வாக்கியமும் நமக்கு கேட்டு கேட்டு புளித்த விஷயம். ஆனால் இப்போது நாம் சொல்லவிருக்கும் விஷயம், ஏற்றுக் கொள்ள கடினமாக இருந்தாலும் உண்மையான விஷயம்.

பால் குடித்தால் புற்றுநோயை வெற்றிலைப் பாக்கு வைத்து வரவேற்கிறீர்கள் என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள். இதற்குக் காரணம் வெறும் பால் அல்ல, பாலில் சேர்க்கப்படும் கார்பனேட், பைகார்பனேட், ஸ்டார்ச், யூரியா, அமோனியம சல்பேட் போன்றவைதான்.

பொதுவாக, பால் சீக்கிரம் கொடாமல் இருக்கவும், அஜீரணக் கோளாறு ஏற்படுத்தாமல் இருக்கவும் சில பொருட்கள் சேர்க்கப்படுவது உண்மைதான் என்று பால் தொழில்நுட்பவியலாளர் கூறினார். ஆனால், அந்த கூடுதல் பொருட்கள் என்னவென்றால், சோடா மாவு, ஆப்ப சோடா, பேக்கிக் சோடா போன்றவையாகும்.

சில தனியார் பால் உற்பத்தி மையங்கள் யூரியாவையும், டோபிகா ஸ்டார்ச்சையும் சேர்க்கின்றனர். இவற்றை சேர்ப்பதால் பாலின் திடத்தன்மை அதிகரிக்கிறது. இதனால் பாலில் அதிகளவில் தண்ணீர் சேர்த்தாலும் அதன் திடத்தன்மை குறைவதில்லை. அதாவது ஒரு பால் 8% அளவிற்கும் குறைவாக திடத்தன்மை இன்றி இருந்தால் அந்த பால் விநியோகிப்பாளருக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே, பாலில் தண்ணீரை கலந்துவிட்டு, அதன் திடத்தன்மை குறையாமல் இருக்க யூரியா போன்ற ஒரு ரசாயனத்தை பாலுடன் கலக்கின்றனர். இதுபோன்ற பாலை தொடர்ந்து குடிப்பதால் பல குழந்தைகளுக்கு உடல்நிலை பெரிதும் பாதிக்கிறது. உடலில் உள்ள புரதச் சத்து குறைகிறது.

சத்துணவு நிபுணரான மருத்துவர் ஒருவர் கூறுகையில், யூரியா சேர்க்கப்பட்ட பாலை அதிகளவில் எடுத்துக் கொண்டால், சிறுநீரகம் பாதிக்கப்படும். சோடா மாவு சேர்க்கப்பட்ட பாலை அருந்தினால் ஹைபர் டென்ஷன், இதய பலவீன நோய் ஏற்படும் என்கிறார்.

எங்கள் பால் மிகவும் திக்காக இருக்கும் என்று விளம்பரம் கொடுக்கும் நிறுவனங்கள் பலவும் ஸ்டார்ச் சேர்த்தும், எங்கள் பால் அதிக நேரம் கெடாது என்று விளம்பரம் செய்யும்  பால் உற்பத்தி நிறுவனங்கள் சோடா மாவையும் பாலில் சேர்க்கின்றனர் என்று பால் தொழில்நுட்பவியலாளர் தெரிவிக்கிறார்.

ஆவின் பால் உற்பத்தி நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடப்பதில்லை. ஒவ்வொரு முறையும் ஆவின் பால் சோதனைக்குட்படுத்தப்படுகிறது. மற்ற தனியார் பால் உற்பத்தி நிலையங்களில் வேண்டுமானால் இவ்வாறு நடக்கலாம் என்று ஆவின் பொது மேலாளர் சிராஜ் தெரிவித்துள்ளார்.

நன்மைகள்

நீங்கள் வழக்கமாக பால் குடித்துக் கொண்டிருந்து அதை சமீபகாலமாக நிறுத்தி விட்டீர்களா? அப்படியானால் உங்களின் உடல் எடை அதிகரிக்கலாம். வயிற்றில் மடிப்புகள் உருவாகலாம். தொப்பையும் அதிகமாகலாம். பாலில் உள்ள கால்சியம் சத்தும் மற்ற பல சத்துக்களும் உடல் எடை கூடுவதைத் தடுக்கின்றன.

பால் பொருட்களில் உள்ள கால்சியம் சத்து நமது உடலின் எடை கூடாமல் தடுக்கிறது. அதிகமான உடல் எடை கொண்டவர்களுக்கு அதை குறைக்கவும் உதவி புரிகிறது. அதே நேரத்தில், அவர்கள் மற்ற கொழுப்புச் சத்துக் கொண்ட, கலோரி அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களையும் அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை பருவ வயதினர் சாப்பிடுவதால் அவர்களுக்கு எடை அதிகரிக்காமல் உடல் "சிலிம்" ஆக இருக்க உதவுகிறது. மத்திய தர வயதில் உள்ளவர்களுக்கு உடல் பெருத்து அசிங்கமாவதை தடுக்கிறது.

"பால் பொருட்கள் உடல் எடை குறைப்பை ஊக்கப்படுத்துகின்றன" என தெரிவித்துள்ள பிரபல ஆராய்ச்சியாளர் ஒருவர் இதற்காக பேடன்ட் உரிமையும் கோரியுள்ளார்.


பெரும்பாலான ஆய்வுகள் "குறைந்த அளவில் கால்சியம், பால் பொருட்கள் அல்லது இரண்டையும் எடுத்துக் கொள்வதற்கும், அதிகப்படியாக உடல் எடைக்கும் தொடர்பு உண்டு" என்பதை நிரூபித்துள்ளன. உடல் எடை குறிப்பிட்ட அளவைத் தாண்டும் போது அது வாழ்க்கைக் காலத்தை குறைக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருபது வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றிலும், "குறைந்த அளவில் கால்சியம் எடுத்துக் கொள்வதற்கும், அதிகமான உடல் எடைக்கும் தொடர்பு உண்டு" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மையங்கள் நடத்திய ஆய்வில், "கால்சியம் சத்து குறைவாக உள்ள உணவு வகைகளை சாப்பிடுவதற்கும், உடலில் கொழுப்பு அதிகரிப்பதற்கும் தொடர்பு உள்ளது. குறிப்பாக தொப்பை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் வயிற்றுப் பகுதியிலும் கொழுப்பு அதிகரிக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் கூறப்பட்டுள்ள இந்த முடிவுகள் குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும், முதியோர்களுக்கும் பொருந்தும். அதிக அளவில் பால் பொருட்களை சாப்பிட்டால் உடலில் கொழுப்புச் சத்து குறைவாகவே இருக்கும் என்பதை பல ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

இளம் வயதினர் அதிக அளவில் சோடா போன்ற பானங்களை குடித்தால், உடல் எடை அதிகரிக்கும். ஆனால் பாலினால் எந்த பாதிப்பும் இல்லை. உயிருக்கு ஆபத்தான பல பிரச்னைகளில் இருந்து பால் பொருட்கள் நமக்கு பாதுகாப்பு அளிக்கின்றன.

மேலும், இன்சுலின் சுரப்பது அதிகரிப்பதற்கும் பாலுக்கும் தொடர்பு இருக்கிறது. குறைந்த அளவில் பால் சாப்பிடுவோர் சீக்கிரம் சர்க்கரை நோய்க்கு ஆட்படலாம். இன்சுலின் சுரப்பது அவர்களுக்கு குறையலாம். அதே நேரத்தில், அதிக அளவில் பால் சாப்பிடுபவர்களுக்கு இன்சுலின் சுரப்பது அதிகரிப்பதோடு, இருதய நோய்கள் வராமலும் பாதுகாக்கப்படுகிறது என்றும் சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஆறு வருடங்களுக்கு மேலாக கொழுப்புச் சத்து குறைவான பாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தவர்களுக்கு உடல் எடை கச்சிதமாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியமாக இருப்பதும் பல்வேறு சோதனைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில் பால் சாப்பிடாதவர்களுக்கு உடல் எடை அதிகரித்துள்ளது.

இவை தவிர வேறு பல பிரச்சனைகளையும் தீர்க்க பால் பொருட்கள் உதவியாக இருக்கின்றன. அதனால், கொழுப்புச் சத்து அதிகம் இல்லாத பாலை நாம் தினமும் ஒரு முறையாவது சாப்பிடுவது நல்லது.

Read more...

நாம் ஏன் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் ?



விரிவான ஆலோசனைகள்:

விருப்பமான தொழில்துறையை தேர்ந்தெடுப்பதுதனிப்பட்ட ஒரு மாணவரின் சொந்த முடிவாக இருக்க வேண்டும். ஏனெனில் இலக்கை அடைவதற்கான பயணத்தின் விளைவுகளை முழுமையாக எதிர்கொள்பவர் அவர்தான். பெற்றோர்உறவினர் அல்லது ஆசிரியர் போன்ற தரப்புகளிலிருந்து வருங்கால லட்சியத்தை தேர்ந்தெடுப்பது சம்பந்தமாக வரும் வற்புறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள்மாணவரை மனோரீதியிலான துன்பத்திலும்குழப்பத்திலும்வெறுப்பிலும் ஆழ்த்திவிடும்.

ஒரு சரியான லட்சிய தேர்வு என்பதுமாணவரின் விருப்பங்கள்திறன்கள்ஆற்றல்கள் ஆகியவற்றோடு   முறையாக இணைந்ததாகவும்அந்த எதிர்கால வேலையானது சூழல் ரீதியாகவும்வருவாய் ரீதியாகவும் திருப்தி தரக்கூடியதாய் இருப்பதாகவும் இருக்க வேண்டும்.

எதிர்கால லட்சியத்தை தேர்ந்தெடுப்பது முதலில் கனவிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. எதிர்காலத்தில் யாராக இருக்க விரும்புகிறோம் என்ற கனவு அனைவரிடத்திலும் இருக்க வேண்டும். விஞ்ஞானியாகமருத்துவராகபேராசிரியராகசினிமா இயக்குனராகதொழிலதிபராகபெரிய அரசு அதிகாரியாகதொல்பொருள் நிபுணராகதத்துவ ஞானியாகஇசை கலைஞராகஅரசியல்வாதியாக என்று பல நிலைகளில் மாணவர்களுக்கு கனவுகள் உண்டு. கனவுகள் இல்லாதவரிடத்தில் பெரிதாக எதுவும் இருக்காது என்று ஒரு சீன பழமொழி கூறுகிறது.

கனவுகள் லட்சியத்தை வகுக்க உதவுகிறது. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் வரலாறுகளை படித்துஅந்த வெற்றிக்கான காரணியை ஆராய்ந்தால் அதற்கான அடிப்படையாக இருந்தது லட்சியம் என்பது தெரியவரும். எனவே கனவு லட்சியமாகிஅந்த லட்சியம் உங்களின் செயல்களை தீர்மானிக்கும்.

உங்களின் கனவை நனவாக்க வேண்டுமெனில்எதிர்கால தொழில்துறையை முடிந்தளவு விரைவாக முடிவுசெய்ய வேண்டும். இந்த விஷயத்தில் தாமதிப்பதானதுலட்சியத்தை அடைவதில் தேவையற்ற பெரும் கால விரயத்தை ஏற்படுத்திவிடும்.

உங்களின் தொழில்துறையை முடிவுசெய்யும் செயல்பாட்டின்போதுஉங்களின் கனவில் இடம்பெறாத பலவித விருப்ப வாய்ப்புகளை பற்றியும் கேள்விப்படுவீர்கள். இதுபோன்ற விருப்ப வாய்ப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள அதுசம்பந்தமான செய்தித்தாள்கள்பத்திரிக்கைகள்இணையதளம் ஆகியவற்றை பயன்படுத்துவதுடன்பெற்றோர்கள்ஆசிரியர்கள்தொழில் ஆலோசகர்கள்தொழில்துறை பற்றி பரவலான அறிவுடைய நபர்கள் ஆகியோருடன் இதுசம்பந்தமாக கலந்துரையாடவும் வேண்டும்.

எதிர்கால தொழில்துறையை முடிவுசெய்வதற்கு முன்னர் இருக்கும் முக்கிய பணிஉங்களை நீங்கள் கண்டுகொள்வதாகும். உங்களின் இயல்பான ஆர்வம்திறமை ஆகியவைப் பற்றி தெளிவான புரிதல் இருக்க வேண்டும். நமது ஆர்வம் மற்றும் விருப்பங்கள்தான்லட்சியத்தை அடைவதற்கான கடினமான பயணத்தில் நமக்கு துணை நின்று பேருதவி புரியும். உங்களின் திறமைஆற்றல்குணாதிசயம்ஆர்வம் ஆகியவற்றை கண்டுணரும் செயல்பாட்டில் நீங்கள் மிதமிஞ்சிய கற்பனையின்றி மிக சரியாக செயல்பட்டால்தான் தெளிவான முடிவு கிடைக்கும்.

உங்களின் சொந்த திறமை மற்றும் ஆற்றல்களை அறிந்துகொள்வது எவ்வளவு முக்கியமோ,அதேபோல உங்களின் எதிர்கால தொழில்துறைக்கு தேவையான புதிய திறன்களை வளர்த்துக்கொள்வதும் மிகவும் முக்கியம்.

உங்களின் எதிர்கால லட்சியத்தை முடிவுசெய்த பின்னர்அதைப்பற்றி ஒவ்வொரு காலகட்டத்திலும் மறுஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் நாளுக்குநாள் மாறிவரும் இந்த உலகில் எந்த விஷயமும் நிலையாக இருப்பதில்லை. எனவே மாறும் சூழலுக்கு ஏற்ப உங்களின் லட்சியத்தை பொருத்திப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

லட்சியத்தை முடிவுசெய்து விட்டால் மட்டும் எல்லாம் முடிந்துவிடுவதில்லை. வாழ்க்கை என்ற அளவில் பொதுவாகவும்லட்சியம் என்ற அளவில் குறிப்பாகவும் உங்களின் ஆளுமையை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். லட்சியத்தை அடைவதில் இந்த தன்மை முக்கிய பங்கு வகிக்கும்.

விரும்பிய தொழில்துறையை அடைவதில் நமது கல்வித்தகுதி பெரியளவில் பங்கு வகித்தாலும்ஒருவரின் பொது புரிந்துணர்வு திறன்பரவலான அறிவு மற்றும் சிறப்பு பயிற்சி போன்றவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே ஒருவர் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.


Read more...

அதிகம் சர்க்கரை சேர்த்துக் கொள்பவரா நீங்க ?


உணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய், எலும்பு முறிவுநோய்,மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சரும நோய்கள்,விரைவில் முதிர்ச்சி, உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சர்க்கரையும் ஒன்று. சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது. உண்மையில் நம்முடைய உடலுக்கு சர்க்கரை அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும் போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.
சிகரெட், மது முதலியவற்றைவிட சர்க்கரை அதிக ஆபத்தானது எனலாம். புற்றுநோய்,எலும்பு முறிவுநோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதயநோய்கள், இரத்த அழுத்தம்,சரும நோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு,சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரிழிவு நோய், இப்படி சர்க்கரை உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
காபி, டீ, பால் போன்றவைகளில் சர்க்கரையை அதிகம் சேர்த்துக்கொள்கின்றனர். சர்க்கரை அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு,அளவுக்கு மிஞ்சிய துடுக்குத்தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு
நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. அதேபோல் குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட்
மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது. சர்க்கரையும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப்பொருட்கள் இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவை அதிகரித்து விடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசை நார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப்பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.
உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத்தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டே கிளேன்டின் E2வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது. கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சர்க்கரை இன்னும் துரிதப்படுத்துகிறது.
தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரை நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை. எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு சர்க்கரையே காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள். 

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets