உங்கள் வருகைக்கு நன்றி

அரசை மட்டுமே குறைகூறிப் பயனில்லை.

சனி, 28 ஜூலை, 2012


நாட்டில் சாலை விபத்துகளும், அவற்றில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் பெட்ரோல்-டீசல்   விலையைப் போலவும், வாகனங்களின் எண்ணிக்கையைப் போலவும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்போது சாலை விபத்துகளில் மணிக்கு 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும், அதிக விபத்துகள் நிகழும் மாநிலங்களுக்குள் தமிழகத்துக்கும் ஒரு தனியிடம் உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சாலை விபத்துகளை முழுவதும் தடுப்பதென்பது இயலாத காரியமே. ஆனால், குறைந்தபட்சமாகக் குறைக்கலாம். அதைப் பொதுமக்கள் குறிப்பாக, வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும் நினைத்துச் செயல்பட வேண்டும்.
விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு குறித்த செய்திகளைப் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும்   படிக்கும்போதும், பார்க்கும்போதும் மட்டும் அனுதாபப்படுவதும், அடுத்த வினாடி மறந்துவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. மற்றவர்களுக்கு அது ஒரு செய்தி, அவ்வளவே. ஆனால், உறவுகளையோ, உடல் உறுப்புகளையோ இழந்து தவிக்கும் சம்பந்தப்பட்டோருக்குத்தான் தெரியும் வலியும், இழப்பும், தொடரும் வேதனையும்.
எதற்கெடுத்தாலும் அரசைக் குறைகூறுவதைப்போல இந்த விஷயத்திலும் அரசை மட்டுமே குறைகூறிப் பயனில்லை. சாலை விபத்துகளுக்கும், அவற்றில் அதிக உயிரிழப்பு ஏற்படவும் முக்கிய காரணம் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காததே. மதுபோதை,  தலைக்கவசம் அணியாமை, சாலையில் திரியும் கால்நடைகள், தேவையான இடங்களில் இல்லாமலும், தேவையற்ற இடங்களில் இருப்பதுமான வேகத்தடைகள், குடிநீர்க் குழாய்கள், பாதாள சாக்கடை போன்ற திட்டங்களுக்காக தோண்டப்பட்ட அல்லது தோண்டி மூடமறந்த பள்ளங்கள், முக்கியப் பிரமுகர்களுக்காக வைக்கப்படும் பிரமாண்ட வரவேற்பு வளைவுகள், பதாகைகளுக்காகத் தோண்டப்படும் பள்ளங்கள் என காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவை மட்டுமன்றி, செல்போன் பேசிக் கொண்டு வாகனங்களை ஓட்டுதல், சாலை நடுவிலோ, சாலையோரத்திலோ பழுதாகி நின்றிருக்கும் வாகனங்களும் அதிக விபத்துகள் நேரிடுவதற்குக்   காரணமாகின்றன.
மித வேகம் மிக நன்று' என சாலையோர அறிவிப்புப் பலகைகள் அறிவுறுத்தினாலும், அதிக வேகம் ஆணுக்கு அழகு' என்பதே இன்றைய இளைய சமுதாயத்தின் புதுமொழியாக இருக்கிறது. இளைஞர்கள் பலரும் தார்ச்சாலைகளைப் பந்தய மைதானத்தைப் போலவே பாவித்துக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் வாகன ஓட்டும் திறமையையும், சாகசத்தையும், இளமைக் குறும்புகளையும் காட்ட சாலைகளே சிறந்த இடம் எனத் தேர்வு செய்துவிட்டதைப்போலத் தோன்றுகிறது.
பரந்து விரிந்த தேசிய நெடுஞ்சாலைகள் என்றில்லை; முட்டுச் சந்துகளில்கூட பலர் தங்கள் வாகனத்தின் வேகத்தைக் குறைப்பதில்லை. மேலும் வாகனங்களுக்குப் பொருந்தாத வகையில் ஒலியெழுப்பும் விதவிதமான ஹாரன்களைப் பொருத்தி, அதை "கொலைவெறி' கொண்டதுபோல அழுத்தி, சாலையோரம் நடந்து செல்லும் அப்பாவி மக்களை அலறவைப்பதும், சிலர் இருசக்கர வாகனங்களில் அதிக ஆள்களை ஏற்றிக்கொண்டு உயிரோடு விளையாடுவதும் தொடர்கதையாக உள்ளது.
 சில நேரங்களில் வாகனங்களில் அதிக வேகத்தில் செல்வோரைக் கண்டால் இவர்கள் எல்லாம் ஒரு வினாடியைக்கூட வீணாக்காத மனிதர்கள் என நினைப்போம். ஆனால், அவர்களின் வேகமெல்லாம் மதுக்கடையை நோக்கியோ, திரையரங்குகளை நோக்கியோ, சாலையோரக் கட்டைச்சுவரில் அமர்ந்தபடி வெட்டிக்கதைகள் பேசிப் பொழுதைப்போக்கவோதான் பயன்படும் எனத் தெரியவந்தால் வேதனையால் அழுவதா, சிரிப்பதா என்ற நிலைதான் நமக்கு.
விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தும் காவல் துறையினர்,  அரசும், விபத்துகளை ஏற்படுத்தும் பஸ் ஓட்டுநர்களின் உரிமங்களை ரத்துசெய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனாலும், விபத்துகளை ஏற்படுத்தி உயிர் பலிக்குக் காரணமாவோருக்கு அதிகபட்ச தண்டனை, அதிக அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் வாகன ஓட்டிகளுக்கும் அச்சம் ஏற்படும். விபத்துகளின் எண்ணிக்கையும் குறையும்.

Read more...

வாழ்க்கையையே தொலைக்க வேண்டி வரும்!

வெள்ளி, 27 ஜூலை, 2012


படுவேகத்தில் வாகனங்களை ஓட்டுவோருக்கு நேற்று முன் தினம் மதுரையில் நடந்த விபத்து ஒரு பாடம். இப்போதெல்லாம், டூவீலரை 'ஸ்டார்ட்' செய்து விட்டாலே, பலருக்கு ராக்கெட்டில் பறக்கும் நினைப்பு வந்து விடுகிறது. 'கட்' அடித்து, பஸ்களுக்கு இடையேயும், பிளாட் பாரத்திற்கு மேலேயும் பாய்ந்து சென்று, மற்றவர்களை கவர அல்லது மிரட்ட நினைக்கின்றனர்.

30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தான், இதை சாகசமாக நினைத்து, இப்படி ஓட்டுகின்றனர்.'பெண்கள் நம்மை பார்க்க வேண்டும். ஹீரோவாக நினைக்க வேண்டும்' என்பது இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்பு. அதிலும், வாகனத்தின் பின்னால் காதலி அமர்ந்திருந்தால், இளைஞர்களுக்கு இன்னும் கொஞ்சம் வீரம் 'பொத்துக்கொண்டு' வந்து விடும். வண்டியின் வேகம் அதிகரிக்கும். தரையில் படுமாறு வண்டியை சாய்த்து, ரொம்ப அதிகமாகவே 'கட்' அடித்து, ஹீரோத்தனத்தை வெளிப்படுத்துவர்.எப்போதுமே இந்த 'ஹீரோத்தனம்' வெற்றி பெறாது என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. சில நேரங்களில் விபத்துகளுக்கு 'ஓவர் ஸ்பீடு' காரணமாகி, வாழ்க்கையையே தொலைக்க வேண்டி வரும் என நினைப்பதில்லை.

இதற்கு உதாரணம், நேற்று முன் தினம் மாலை மதுரை பை-பாஸ் ரோட்டில் நடந்த விபத்து.ஆரப்பாளையத்தில் இருந்து ஒரு அரசு டவுன் பஸ், திருமங்கலத்திற்கு புறப்பட்டது. பை-பாஸ் ரோடு ராம் நகர் காலனி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தது. அப்போது அதே திசையில் ஒரு டூவீலரில் இருவர் (ஹெல்மெட் அணியவில்லை), படுவேகத்தில் பறந்து வந்தனர். பஸ்சை முந்த நினைத்த பைக்கை ஓட்டி வந்தவர், பஸ்சிற்கும் ரோடு மீடியனுக்கும் இடையே புக முயன்றார்.இவர் வருவதை எதிர்பாராத டிரைவர், பஸ்சை லேசாக நகர்த்தினார். அவ்வளவு தான், வந்த வேகத்தில் பஸ்சின் பின்பக்க ஓரத்தில் பைக்காரர் மோதி, கீழே உருண்டார். 'ஐயோ, அம்மா' என கத்தியபடி மயங்கினார். முழங்காலுக்கு கீழ், இடது கால் எலும்பு உடைந்து கால் வளைந்தது. பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தவரும் கீழே விழுந்து, எழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் இல்லை. இருப்பினும், அவரால் எழுந்து, பைக் ஓட்டி வந்தவரை தூக்க முடியவில்லை.

ஏனென்றால் பரிதாபம்... அவர் கால்கள் ஊனமுற்றவர். அவரது ஊன்றுகோல்கள் விழுந்து கிடந்தன. பைக்கின் பின்னால் அமர வைத்து, ஓட்டி வந்தவரை தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், ரோட்டில் அமர்ந்தபடி, தரையை அடித்து, அடித்து அழுதுகொண்டு இருந்தார். பார்த்தவர்கள் கண்கள் கலங்கின. அங்கிருந்தவர்கள், விபத்தில் சிக்கியவரை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கால்களை இழந்தவரை அமர வைத்து ஓட்டும்போது கூட, உடல் உறுப்புகளின் அருமை தெரியாமல் இருந்திருக்கிறாரே அந்த இளைஞர் என்பது தான் கொடுமையிலும் கொடுமை. இளைஞர்களே... பைக்கின் வேகத்தை 'முறுக்கும்' முன், 'இந்த வேகம் தேவையா' என சிந்தியுங்கள். உங்களை நம்பி பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்பதை மறக்காதீர்கள்.

Read more...

கிருமிகள் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கும் இடம் ?

வியாழன், 26 ஜூலை, 2012


ஹோட்டல் அறைகளில் சுகாதாரம் எப்படி இருக்கிறது என்று அமெரிக்காவின் பிராந்தியங்களில் ஆராய்ச்சி செய்தார்கள். ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜே நீல் இந்த ஆய்வு முடிவுகளை நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஹோட்டல் அறைகள் என்பது ஓரிரு நாள்களுக்கு மட்டுமே தங்குவதற்காக விருந்தினர்கள் வந்துபோகும் இடம்தான்அங்கு மருத்துவமனையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தைப் போல கிருமி சுத்தமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைதான்ஆனாலும் நாம் பார்க்கும்போது தூய்மையாகவும் நறுமணத்துடனும் இருக்கும் ஹோட்டல் அறைகளில் நமக்கே தெரியாத ஆபத்துகள் இருக்கின்றன என்பதை இந்த ஆய்வு புலப்படுத்துகிறது. (அமெரிக்காவிலேயே இந்தக் கதை என்றால் நம்ம ஊரு ஹோட்டல்களை நினைத்தால்....ஆத்தாடி!)
எல்லா அறைகளிலும் கதவு கைப்பிடிகளிலும் டி.வி. ரிமோட்டுகளிலும் கிருமிகள் அதிகம். எந்த அளவுக்கு என்றால் - அந்த அறையில் உள்ள டாய்லெட் இருக்கை விளிம்புக்கு அடியில் இருப்பதை விட! இன்னொரு இடமும் இருக்கிறது. அது படுக்கைக்கு அருகிலேயே இருக்கும் பெட்ரூம் ஸ்விட்ச்தான் அது. ஹோட்டல் அறையில் உள்ள டி.வி. ரிமோட்டுகள் அசுத்தமானவை என்றால் அதை எதனுடனாவது ஒப்பிட வேண்டும் அல்லவாவீடுகளில் இருக்கும் டி.வி. ரிமோட்டுகள் அளவுக்கு அசுத்தமானவை என்கிறது ஆய்வு. அதாவது கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அதில் ஆயிரக்கணக்கில் குடியிருக்கின்றன.
நல்ல ஸ்டார் ஹோட்டல்கள் என்றால் அறையை தினமும் சுத்தம் செய்வார்களேஅப்படியுமா கிருமிகள் வந்துவிடுகின்றன என்று சிலர் கேட்கக்கூடும். அதற்கும் இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் கேட்டி கிர்ஷ் பதில் வைத்திருக்கிறார்.
ஒவ்வொரு அறையையும் 30 நிமிஷங்களுக்குள் சுத்தப்படுத்துகிறார்கள். படுக்கை விரிப்புகள்தலையணை உறைகள்போர்வைகள் ஆகியவற்றை தோய்க்க எடுத்துக்கொள்கிறார்கள். பாத்ரூம்டாய்லெட் உள்பட அறை முழுவதையும் "மாப்புபோட்டுத்தான் சுத்தப்படுத்துகிறார்கள். அதற்குப் பயன்படுத்தும் தண்ணீரில்தான் விசேஷமே அடங்கியிருக்கிறது. ஏதாவது ஓரிடத்தை முதலில் மெழுகும்போதே அதில் ஆயிரக்கணக்கான கிருமிகள் தொற்றிவிடுகின்றன. அதையே மீண்டும் மீண்டும் நீரில் நனைத்து மெழுகுகிறார்கள். மாப்பை அவர்கள் நல்ல நீரில் சுத்தம் செய்துஅழுக்குத் தண்ணியை ஹோட்டல் அறையின் கழிவுநீர்ப்பாதையில் கொட்டிய பிறகு அவர்கள் எடுத்துவரும் தள்ளுவண்டிக்கு இடம்பெயர்கின்றன கிருமிகள். அங்கு மட்டுமல்லாது பக்கெட்டிலும் மாப்பின் கைப்பிடியிலும் அடிப்பாகத்திலும்இண்டு இடுக்குகளிலும் இடம்பிடித்துவிடுகின்றன.
இதனால் கிருமிகள் எந்தக் குறையும் இல்லாமல் அந்த ஹோட்டலிலேயே வாசம் செய்கின்றன. அவற்றில் கணிசமானவை அங்கே தங்குபவர்களின் பெட்டிகள்பைகளில் ஏறி அவர்களுடைய ஊர்களுக்குச் சென்றுவிடுகின்றன. ஹோட்டலில் தங்குகிறவர்கள் அனைவருமே பாதிக்கப்பட வேண்டுமே என்று கேட்கலாம். அவர்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்வரை கிருமிகள் அடக்கியே வாசிக்கும். சக்தி குறைந்தால் போட்டுப் பார்த்துவிடும்!

Read more...

காது கொடுத்து கேளுங்கள்.. காது பிரச்சினையை


பெரியவர்களுக்கு காது சம்பந்தமாக ஏதேனும் பிரச்சினை என்றால் எளிதாக தெரிந்து கொள்ளலாம். ஆனால்குழந்தைகளுக்கு காது தொடர்பான பிரச்சினைகளைத் தெரிந்து கொள்வது சற்று கடினமான வேலை தான்.
சில குறிப்புகளை வைத்து குழந்தைகளுக்கு காதில் பிரச்சினை உள்ளதை தெரிந்து கொள்ளலாம்.
காது கேட்பது மட்டுமே பிரச்சினை அல்ல. காதில் வலிசீழ் வடிவதுகிருமி தொற்று போன்ற பல பிரச்சினைகள் ஏற்படலாம்.
இதனை கண்டய சில குறிப்புகள் :
தேவையில்லாமல் குழந்தை அழுது கொண்டிருந்தால் அதற்கு ஏதேனும் ஒரு பிரச்சினை இருக்கக் கூடும் என்று தெரிந்து கொள்வீர்கள். ஆனால் காதில் பிரச்சினை இருக்கிறது என்பதைகாதுக்கு அருகே உங்களது கைகளை வைத்து லேசாக வருடி விடுங்கள். அப்போது அழுகை குறைந்தால் பிரச்சினை காதில் என்பதை கண்டறிந்து விடலாம்.
காது என்பது மூக்குவாயுடன் தொடர்புடையது என்பதால்இவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் கூட காதினை பாதிக்கலாம். எனவேமூக்கு மற்றும் வாயில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.
குழந்தை பிறக்கும் போது காதுகளின் உள் இருக்கும் மெல்லிய எலும்புகள் மூடியிருக்காது. குழந்தை பிறந்த பிறகு காதுகளை உலர்வாக வைத்திருந்தால்தான் அவை மூடுகின்றன. அதில்லாமல் எப்போதும் சளிப்பிடித்து காதுகள் ஈரமாக இருக்கும்பட்சத்தில் அவை மூடுவதற்கு காலதாமதம் ஏற்படும். இந்த சமயத்தில் தான் குழந்தைகளுக்கு தொற்று பிரச்சினை ஏற்படுகிறது. காதுக்குள் தொற்று பரவும் போது காதில் சீழ் வடிகிறது.
இந்த பிரச்சினை உள்ள குழந்தையை குளிக்க வைக்கும் முன் பஞ்சினை தேங்காய் எண்ணெயில் நனைத்து காதுகளில் வைத்துவிட்டால் குளிக்கும் போது தண்ணீர் காதுக்குள் செல்வதை தவிர்க்கலாம்.
அதிக சப்தம் கேட்கும் இடங்களில் குழந்தைகளை வைத்துக் கொள்வதை தவிர்க்கலாம்.
வகுப்பறையில் கவனம் செலுத்தத் தவறினால் குழந்தையை அடிப்பதையோதிட்டுவதையோ விட்டுவிட்டு அவர்களுக்கு காதில் ஏதேனும் பிரச்சினை உள்ளதாக என்று கண்டறியலாம்.
குழந்தைகள் தாங்களாகவே பட்ஸ் அல்லது வேறு ஏதேனும் ஒன்றை காதில் போட்டு குடைவதை தவிர்க்க வேண்டும்.
மெல்லிய டவலின் நுனிப் பகுதியை லேசாக காதுகளில் விட்டு அருகில் உள்ள நீர்த்தன்மையை போக்கலாமேத் தவிரகுழந்தைகளின் காதுகளில் பட்ஸ்களைப் பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டாம்.
காதுகளில் இருந்து மோசமான நாற்றம் வருமாயின் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டியது அவசியம் என்பதை உணருங்கள்.

Read more...

இந்த குழநதை செய்த பாவம் என்ன?

புதன், 25 ஜூலை, 2012

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 4 வயது குழந்தையை அத்தை, மாமா ஆகியோர் அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. வியாசர்பாடியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தம்பதியை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி அன்னை சத்தியா நகர் 5வது தெருவை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (30). இவரது மனைவி மும்தாஜ் (26). தம்பதிக்கு மகன் முபாரக் அலி (6), மகள் ப்ரானா (4). நேற்று முன்தினம் தம்பதி வேலைக்கு போகும்போது மகள் ப்ரானாவை அருகில் வசிக்கும் தங்கை ஷகிலா வீட்டில் தமீம் அன்சாரி விட்டு சென்றார். மாலை குழந்தையை கூப்பிட சென்றபோது குழந்தை மயங்கிய நிலையில் இருந்தது. இந்த நிலையில் ப்ரானாவை சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை இறந்து விட்டதாகவும், பிரேத பரிசோதனை செய்து சடலத்தை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார். 
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper 
இதற்கு சம்மதிக்காத ஷகிலா, குழந்தையை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். அங்கு குழந்தையை கொண்டு சென்றபோது சுடுகாட்டில் இருந்த ஊழியர், குழந்தையின் உடலில் காயம் இருந்ததால் சந்தேகப்பட்டு இறப்பு சான்றிதழ் கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்தவர்கள் மழுப்பலான பதில் கூறியதால் எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மயானத்திற்கு விரைந்து வந்து ப்ரானாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் குழந்தை அடித்து, துன்புறுத்தி கொலை செய்தது தெரியவந்தது.  இதையடுத்து ஷகிலா, அவரது கணவர் சலீம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறிவந்த தம்பதி, பின்னர் ப்ரானாவை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டனர். இது குறித்து போலீசார் கூறும்போது, சம்பவத்தன்று ஷகிலா வீட்டில் குழந்தை ப்ரானா தூங்கிக்கொண்டிருந்தது. அப்போது சலீம், ஷகிலா ஆகியோர் உல்லாசமாக இருந்துள்ளனர். தூக்கத் தில் எழுந்த குழந்தை அழுது கொண்டே ஷகிலா அருகில் வந்தது. இதில் ஆத்திரம் அடைந்த ஷகிலா, அருகில் கிடந்த பருப்பு கடையும் மத்தால் குழந்தை முகத்தில் அடித்துள்ளார். இதில் ப்ரானா உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. பிறகு குழந்தையின் மார்பில் சலீம் எட்டி உதைத்துள்ளார். இதில் மயங்கி கீழே விழுந்த குழந்தை இறந்தது என்றனர். கைதான சலீம், ஷகிலா ஆகியோரை போலீசார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Read more...

தண்ணீர் பட்டபாடுன்னா இதுதாங்க !

செவ்வாய், 24 ஜூலை, 2012


உயிரினங்கள் அனைத் தும் வாழ இன்றியமையாதது தண்ணீர். இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. ஜீவராசிகளின் உயிர் நாடியாய் உள்ள தண்ணீர் இப்போது பல்வேறு வகைகளில் மாசுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலை நீடித்தால் குடிநீருக்காக 3-வது உலகப்போர் ஏற்படும் என்று உலக நாடுகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளன. 

எனவே நாம் நீராதாரங்களை காப்பதை முக்கிய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும். நீர் மாசுபட்டால் அனைத்து நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். உயிர் காக்கும் தண்ணீரின் அவசியத்தையும்அவற்றின் பயன்பாடுகளையும்,தண்ணீரைப்பற்றிய அரிய தகவல்களையும் இங்கு காண்போம். 
இந்தியாவில் குடிநீர் தேவை......... 

இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்தியாவில் 82 சதவீதம் விவசாயத்திற்கும், 10 சதவீதம் தொழிற்சாலைகளுக்கும், 8 சதவீதம் மக்கள் பயன்பாட்டிற்கும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. 


அமெரிக்கா ஒரு நாளைக்கு 346000 மில்லியன் காலன் தண்ணீரை பயன்படுத்துகிறது. 


அமெரிக்கா தனது நாட்டில் உள்ள தண்ணீரில் 80 சதவீதத்தை விவசாயத்திற்கும்மீதியை மின் உற்பத்திக்கும் பயன்படுத்துகிறது. 


அமெரிக்க குடிமகன் ஒரு நாளைக்கு 80 முதல் 100 காலன் தண்ணீரை பயன்படுத்துகிறான். 

மனிதனும் தண்ணீரும்.......... 

மனித உடலில் 70 சதவீதம் தண்ணீர் உள்ளது. 


பிறக்கும் குழந்தையின் எடையில் 80 சதவீதம் தண்ணீர்தான். 


மனிதன் ஆரோக்கியமாக வாழ தினமும் டம்ளர்   தண்ணீர் குடிக்க வேண்டும். 


தண்ணீர் அதிகம் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் தானாக வெளியேறும்.

உலகமும் தண்ணீரும்.......... 

உலகத்தில் 70 முதல் 75 சதவீதம் பகுதியை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பூமிக்கு மேல் உள்ள நீராதாரங்களை விட நிலத்தடி நீரே சுத்தமானது. சுகாதாரமானது. 


ஆண்டாண்டு காலமானாலும் தண்ணீரின் அளவு மாறப்போவதில்லை. உலகம் தோன்றியது முதல் அதே அளவு தண்ணீர்தான் உள்ளது. 


உலகில் உள்ள மொத்த தண்ணீரின் அளவு 326 மில்லியன் கியூபிக் மைல்ஸ். 

குடிநீரின் அவசியம்.......... 

ஒரு மனிதன் உணவு சாப்பிடாமல் ஒரு மாதம் வாழ முடியும். ஆனால் ஒரு வாரத்துக்கு மேல் தண்ணீர் குடிக்காமல் வாழ முடியாது. 


மனித உடல் சீராக இயங்க கண்டிப்பாக தண்ணீர் தேவை. 


தண்ணீர் மனிதன் உயிர்வாழ தேவையான சக்தியை அளிக்கிறது. 


சுத்தமான தண்ணீரை குடிப்பதன் மூலம் நோய் தடுப்பாற்றலை பெறலாம். 


தண்ணீர் அதிகம் குடித்தால் தலைவலி வராது. 


ஆரோக்கியமான - அழகான தோற்றத்துக்கு தண்ணீர் அவசியம். 


உணவு செரிக்கவும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதும் தண்ணீரின் தலையாய பணி. 


உடலுக்கு தேவையான சத்துக்களை அந்தந்த பாகங்களுக்கு எடுத்துச் செல்ல தண்ணீர் அவசியம். 

பழங்கள்-காய்கறிகளில்.......... 

உலகின் சராசரி மழை அளவு 850 மி.மீ. 


உலகின் தட்பவெப்ப நிலையை பேணிக் காப்பதில் தண்ணீரின் பங்கு அதிகம். 


விலங்குகளின் ரத்தம்தாவரங்களின் திசுக்கள் ஆகியவற்றில் தண்ணீரின் அளவு அதிகம். 


நீரின்றி அமையாது உலகு. 


தக்காளியில் 95 சதவீதமும்மாங்காயில் 65 சதவீதமும்தர்பூசணியில் 95 சதவீதமும்,அன்னாசியில் 87 சதவீதமும் தண்ணீர் உள்ளது. 

அதிர்ச்சி தகவல்கள்......... 

உலகில் 1.5 பில்லியன் மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். 


தண்ணீர் தொடர்பான நோயால் ஆண்டுக்கு மில்லியன் மக்கள் மரணத்தை தழுவுகிறார்கள். 


அசுத்தமான தண்ணீரே காலராவுக்கு மூல காரணம். இதன் மூலம் 43 சதவீதம் பேர் மரணத்தை தழுவுகிறார்கள். 


வளரும் நாடுகளில் நிகழும் மரணங்களில் 98 சதவீதம் தண்ணீரால் ஏற்படுகிறது. 


சுகாதாரமற்ற  தண் ணீரை குடிப்பதால் வயதுக்குட்பட்ட குழந்தைகள் காலராவால் மடிகிறார்கள். 


ஆப்பிரிக்க வாழ் பெண்கள் ஒருநாளைக்கு 16 மணி நேரத்தை தண்ணீர் தேடி அலைவதிலேயே செலவழிக்கிறார்கள்

Read more...

நீரிழிவு நோய் இருக்கிறதா? காது கொடுத்து கேளுங்க !


தற்போது நீரிழிவு நோய் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அப்படி நீரிழிவு நோய் இருப்பவர்கள் அடிக்கடி உடல் ஆரோக்கியம் பற்றி அறிய இரத்தம்கண்கள்,இதயம் என்று பரிசோதனை செய்து கொள்வர். ஆனால் தற்போது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளைபக்கவிளைவுகளை கண்டறிய ஒரு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் நீரிழிவு நோயால் காது கேட்கும் திறனும் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில் நீரிழிவு நோய் இல்லாமல் காது செவிடாகுபவர்களை விடஅந்த நோய் இருப்பவர்களுக்கு இரு மடங்கு அதிகம் என்று மருத்துவர்கள் கண்டறிந்து கூறுகின்றனர். மேலம் இந்த நோய் இருப்பவர்கள் காதுகளுக்குள் ஏதேனும் சப்தங்கள் ஏற்பட்டால் உடனே காது சிறப்பி மருத்துவரை போய் பார்ப்பது நல்லது என்று கூறுகின்றனர்.
மேலும் அவர்கள் வீட்டில் டிவியை பார்க்கும் போது சப்தம் குறைவாகத் தான் இருக்கிறதென்றுஅதிகமாக சப்தம் வைத்து கேட்பவராய் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
வயதானவர்கள் சிலருக்கு இரண்டு காதுகளும் சமஅளவில் கேட்காமல் இருக்கும். அதற்கு காரணம் சர்க்கரை வியாதி என்று கூறமுடியாது. அது வயது ஏற்பட்டதால் உண்டாகியிருக்கும் என்று கூறலாம். ஆனால் தற்போது அடிக்கடி இளம் வயதினருக்கு ஒரு காது மட்டும் சற்று மந்தமடைகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி இருந்தால் அதற்கு சர்க்கரை நோயும் ஒன்று என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் நீரிழிவு நோய் இருப்பர்களுக்கு காதுகளில் கெராடின் என்று பொருள் குறைவாக இருக்கும் அல்லது இல்லாமலும் இருக்கும். அதனால் காதுகளில் அழுக்கானது அதிகமாக சேரும். அவ்வாறு காதுகளில் அழுக்கானது அதிகமாக சேர்ந்தால் அது நீரிழிவு நோயின் ஒரு அறிகுறி என்றும் கூறலாம். மேலும் காதுகளில் அழுகானது அதிகமாக சேர்ந்தால் காது செவிடாகும் வாய்ப்பும் ஏற்படுகிறது.
ஆகவே நீரிழிவு நோய் இருப்பவர்கள் கண்கள்இதயம் மற்றும் இரத்தம் போன்றவற்றை பரிசோதிப்பதுடன்காதுகளையும் மறக்காமல் அடிக்கடி பரிசோதித்துப் பாருங்கள் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Read more...

நெயில்பாலிஷ் பயன்படுத்தும் பெண்களுக்கு

வெள்ளி, 20 ஜூலை, 2012

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ப்ரிகாம் மருத்துவமனையின் பெண்கள் நலப்பிரிவு சார்பில் டாக்டர் தமரா ஜேம்ஸ் டாட் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடந்தது. தேசிய ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் என்ற பெயரில் ஒரு சர்வே மற்றும் அதனுடன் இணைந்து ஆய்வும் நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:


2,350 பெண்கள் சிறுநீர் தொற்றால் அவதிப்படுவது முதல்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. தாலேட்ஸ் வகை ரசாயனம் அவர்களது சிறுநீரில் அதிக அளவில் இருந்ததே இதற்கு காரணம் என்பது பல்வேறு பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டது. தாலேட்ஸ் ரசாயனம் அதிக அளவில் இருந்தவர்கள் சர்க்கரை நோய் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தனர். நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கும் தாலேட்ஸ் ரசாயனப் பொருள் மாயிஸ்சரைசர், சோப்புகள், ஹேர் ஸ்பிரே ஆகியவற்றில் உள்ளது. மேலும், நாம் அதிகம் பயன்படுத்தும் பசைப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், விளையாட்டு சாதனங்களில்கூட இந்த ரசாயனம் அதிக அளவில் உள்ளது. நெய்ல்பாலிஷ், பாடி ஸ்பிரே, சென்ட் உள்ளிட்ட பர்ப்யூம்களில் அதிகமாக உள்ளது. தாலேட்ஸ் வகைகளான மோனோ பென்சைல் தாலேட் மற்றும் மோனோ ஐசோபியூட்டைல் தாலேட் ஆகியவை சிறுநீரில் அதிகரிக்கும் போது சர்க்கரை நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம். தாலேட்ஸ் அதிகம் உள்ள ரசாயன பொருட்களை நாம் அதிகம் பயன்படுத்தினால், நம் உடலில் இவை அதிகம் ஊடுருவும். நாள்பட பயன்படுத்தும்போது சர்க்கரை நோய்க்கு ஆளாகும் அபாயம் உண்டாகும். எனவே, முடிந்தவரை இந்த வகை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அவ்வப்போது முழு உடல் பரிசோதனைகள் மேற்கொண்டால், நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த உதவும். இவ்வாறு ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

Read more...

அப்பளத்தில் பணமும் ருசிக்கும்

வியாழன், 19 ஜூலை, 2012

வருடத்தின் எல்லா நாட்களிலும் தேவையாக இருக்கிற பொருள் அப்பளம்! அவசர சமையலுக்கு கை கொடுப்பதிலாகட்டும், விருந்து சாப்பாட்டை முழுமையாக்குவதில் ஆகட்டும்... அப்பளத்தின் பங்கு மகத்தானது.

‘‘இப்ப வர்ற அப்பளமெல்லாம் சுவையா இருக்கிறதில்லை. பரந்து பொரியறதில்லை. வெள்ளையா இருக்கிறதில்லை...’’ - இப்படி ஏகப்பட்ட இல்லைபுகார்களைக் கேட்கிறோம் சமீபகாலமாக! அப்பளம் தயாராகிற சூழலைப் பற்றியும் அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்புவதுண்டு. ‘‘கொஞ்சம் மெனக்கெட்டா நாமளே சுகாதாரமான முறையில வீட்லயே தயாரிக்கலாம். செலவும் குறைவு. ருசியும் அதிகம்’’.


அப்பளம், வடாம் போடறதெல்லாம் அத்தை, பாட்டி காலத்து வேலையாச்சேஎன நினைக்கிறவர்களும், இதை சுலபமாக செய்யலாம்


என்னென்ன தேவை

‘‘அரிசி, ஜவ்வரிசி, உப்பு, மிளகு, சீரகம் உள்ளிட்ட மளிகைச் சாமான்கள், அச்சு, சப்பாத்திக் கல், குழவி, கொஞ்சம் பாத்திரங்கள்... 


எத்தனை வெரைட்டி என்ன ஸ்பெஷல்

‘‘அரிசி அப்பளம், மரவள்ளிக் கிழங்கு அப்பளம், டபுள் அப்பளம், பப்படம், மிளகு அப்பளம்னு அப்பளத்துலயும், ஓமப்பொடி, ரிப்பன், தட்டை, ஜவ்வரிசி, வெங்காயம், குழம்புன்னு வடகத்துலயும் ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு. கடைகள்ல வாங்கறது ஒரே மாதிரியான உப்பு, காரத்தோடதான் கிடைக்கும். ஆனா வீடுகள்ல பண்ணும்போது, ஆர்டர் கொடுக்கறவங்களுக்கு எவ்வளவு உப்பு, காரம் தேவையோ அப்படிச் செய்யலாம். கடை அப்பளங்கள்ல சோடா உப்பு சேர்ப்பாங்க. வீட்டுத் தயாரிப்புல அது கிடையாது. தேவைக்கேத்தபடி தயாரிக்கிறதால, பழைய ஸ்டாக்கை கஸ்டமர் தலையில கட்ட வேண்டிய அவசியமிருக்காது.’’


விற்பனை வாய்ப்பு லாபம்

‘‘வாய்வழி விளம்பரமே போதும். அக்கம்பக்கத்து வீடுகள், தெரிஞ்ச ஆபீஸ், ஸ்கூல் மாதிரி இடங்கள்ல தொடர்ந்து ஆர்டர் எடுத்தாலே மாசம் முழுக்க விற்பனை இருக்கும். கடைகளுக்குக் கொடுக்க வேண்டிய அவசியமே இருக்காது. ஒரு நாளைக்கு ஒருத்தர் மட்டுமே 10 கிலோ வரைக்கும் செய்யலாம். 100 அப்பளம் போடலாம். 30 சதவீத லாபம் நிச்சயம்.’’


பயிற்சி

ஒரே நாள் பயிற்சில 10 வகை கத்துக்க கட்டணம் 500 ரூபாய்.’’

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets