உங்கள் வருகைக்கு நன்றி

உடல் குண்டாக இருந்ததால் தற்கொலையா ?

வெள்ளி, 29 ஜூன், 2012


தற்கொலைக்கு எத்தனையோ காரணங்கள் படித்திருக்கிறோம். உடல் குண்டாக இருந்ததால் மனம் வெறுத்து உயிரை மாய்த்தது புதியது. அதுவும் கல்லூரி பேராசிரியை. 
இதற்கெல்லாமா விரக்தி என்று பிறர் நினைக்கலாம். அனுபவித்த,அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும். மன பாரத்துக்கு சற்றும் இளைத்ததில்லை உடல் பாரம். சர்வதேச அளவில் பெரிய உயிர்க்கொல்லியாக பருமன் உருவெடுப்பதாக உலக நல நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரத்த அழுத்தம் முதல் பக்கவாதம் வரையிலும் பலதரப்பட்ட நோய்களுக்கு பருமன் அழைப்பு விடுப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். ஆரோக்யம் தவிரவும் முக்கியமான பல பிரச்னைகள் இதனால் ஏற்படுகின்றன. அவற்றில் ஒன்று சுற்றுச்சூழல் பிரச்னை. குண்டான உடலுக்கு நிறைய உணவும் தண்ணீரும் தேவைப்படுகிறது. இருக்கிற ஜனத்தொகையின் பசியும் தாகமும் தீர்க்க ஆதாரங்கள் போதாத நிலையில் இது கூடுதல் சுமை. 

இந்த கணக்கை பாருங்கள்: குண்டாக இருப்பவர்களால் பூமியின் எடை165 லட்சம் டன் அதிகரிக்கிறதாம். இது உண்மையான ஜனத்தொகையைவிட கூடுதலாக 24.2 கோடி பேர் இருப்பதற்கு சமம். பஸ், ரயில், விமானம் என அனைத்து வாகனங்களிலும் சீட் அளவை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் பயணிகள் எண்ணிக்கை குறையும்.  இழப்பை ஈடுகட்ட கட்டணம் உயரும். ஒல்லியாக இருப்பவர்களும் அதை செலுத்த நேரும். எட்டு பேர் செல்லக்கூடிய லிப்டில் உ.ப ஆசாமிகள் ஏறினால் ஐந்தாறுக்கு மேல் இடமிருக்காது. இப்படி அடுக்கிக் கொண்டே போகிறது ஆய்வறிக்கை. என்னதான் தீர்வு

கோககோலாவை தடை செய் என அமெரிக்காவில் கோரிக்கை எழுந்துள்ளது. ஒன்றரை லிட்டர், இரண்டு லிட்டர் கோக் பாட்டில்களுக்கு தடைவிதிக்க நியூயார்க் மேயர் முயற்சி செய்கிறார். அதிகபட்சம் 16அவுன்சுக்கு மேல் விற்கக்கூடாது என்கிறார். அரை லிட்டருக்கும் குறைவு. எல்லாரும் கோக் குடித்துதான் குண்டாகிறார்களா என்று கோக் நிர்வாகிகள் சீறுகின்றனர். ஃபாஸ்ட்ஃபுட் ரகங்கள் எல்லாமே பருமனுக்கு காரணம் என்பதால் அனைத்தையும் தடை செய்ய சொல்கிறது ஒரு கோஷ்டி. பேக்கரிகள், ஸ்வீட் கடைகளையும் விடக்கூடாது என்கிறது. சிகரெட்டையும் மதுவையும் ஒழிக்க முடியாத அரசாங்கம் ஃபாஸ்ட்ஃபுட், ஸ்வீட், கோலா மீது கைவைக்க முடியுமா,என்ன? 

Read more...

மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டிய கட்டாயம்


மன அழுத்தம் ஒருவருக்கு பல நோய்களை கொண்டு வருகிறது. 60 சதவீத மனித வியாதிகளுக்கு மன அழுத்தமே காரணம் என்று அமெரிக்க மெடிக்கல் அசோஷியேஷன் கண்டுபிடித்துள்ளது. இதனால் மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

மன அழுத்தத்தால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகள்தலைவலிமயக்கம்பயம்எரிச்சல்கோபம்பீதிஏ.டி.டி.,/ஏ.டி.எச்.டி.நோய் ஆகியவை ஏற்படுகின்றன. பற்களை கடிக்கும்போது தாடை பாதிக்கப்படுகிறது. இதயத்துடிப்பு அதிகரித்தல்பக்கவாதம்இதயநோய்கள்ரத்தஅழுத்தம்நீரிழிவு நோய் ஆகிய பாதிப்புகள் உண்டாகின்றன. செரிமானப் பிரச்னைவயிற்று எரிச்சல்அடி வயிற்று வலிகுடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடல் எடை அதிகரித்துஒபிசிட்டி எனப்படும் உடற்பருமன் ஏற்படுகிறது.உடல் எடை அதிகரித்துஒபிசிட்டி எனப்படும் உடற்பருமன் ஏற்படுகிறது. தசை இறுக்கம்நார்த் திசுக்கட்டிவலி ஆகியவை கால்களில் ஏற்படுகின்றன. மனஅழுத்தத்தால் தற்கொலை எண்ணம்போதைப் பொருட்களுக்கு அடிமையாதல்புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாதல்விபரீத எண்ணம்விபரீத பழக்கவழக்கங்கள் ஏற்படுகின்றன. தூக்கமின்மைபழக்கவழக்கத்தில் மாற்றம்உணர்வுப்பூர்வமாக மாற்றம்நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்ஆஸ்துமாஅல்சர்சத்துக் குறைபாடு,டென்ஷன்பதட்டம்பிரமை மற்றும் பல நோய்களையும் மனஅழுத்தம் கொண்டு வருகிறது. இயந்திர வாழ்க்கையில் மன அழுத்தம் சாதாரணமாக ஏற்படுகிறது. மன அழுத்தத்தை போக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

முதல்படிசிறு பிரச்னைகளுக்கு கூட பெரிய அளவில் கவலைப்படுவதே மன அழுத்தத்துக்கான முதல்படி. மன அழுத்தத்தால் உடல்வேதியியல் மாற்றத்துக்கு உள்ளாகிறது. இதனால் இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படும். ஒருவரின் தனித்தன்மைமுயற்சிசக்தி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது.

நல்லவர்களையும் முட்டாளாக்கும்மன அழுத்தம்நல்ல அறிவு படைத்தவர்களையும்பழக்கவழக்கம்நடை,உடைபாவனைகளில் முட்டாள்களாக காட்டு கிறது. ஒருவருக்கு உடலளவிலும்மனதளவிலும் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. உறவினர்கள்நண்பர்களிடமிருந்து பிரியும் நிலை உண்டாகிறது.

உணர்வற்ற மனிதனாக்கும்மனித உணர்வில்பாதிப்பை உண்டு பண்ணுகிறது. தேவையில்லாத இடங்களில்,தேவையற்ற உணர்வுகளை வெளிப்படுத்த வைக்கிறது. சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனை பிரித்துக் காட்டுகிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்யாவிடில்மனநோய் அளவுக்கு கொண்டு செல்கிறது.

எவ்வாறு கட்டுப்படுத்துவதுஅவசர உலகில் மனஅழுத்தம் எல்லா மனிதர் களுக்கும் ஏற்படுகிறது. என்ன பிரச்னையாக இருந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளப் பழக வேண்டும். சிறு விஷயத்துக்கெல்லாம் கவலைப்படாமல்அதை சரி செய்ய வேண்டும். சரி செய்ய முடியாத பிரச்னை எனில்அதையே நினைத்து கவலை கொள்ளக் கூடாது.

உடனே சரிசெய்யுங்கள்பிரச்னை ஏற்பட்டு மன அழுத்தம் தோன்றும் போதுஎண்ணத்தை மாற்ற முற்படுங்கள். நண்பர் களுடன் மனம்விட்டு பேசுங்கள். இதனால் அழுத்தம் குறையும். எளிய உடற்பயிற்சியோகா மற்றும் தியானம் ஆகியவையே மனஅழுத் தத்துக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. வார இறுதி நாட்களில் புதிய இடங்கள்சுற்றுலாத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளப் பழகிக் கொண்டால் மனஅழுத்தத்தை மறந்து விடலாம்.

மாறும் இதயத்துடிப்புசாதாரண மனநிலையில் இதயத்துடிப்பு எப்படியிருக்கும்மனஅழுத்தத்தின் போது எப்படியிருக்கும் என்பதை இந்த வரைபடம் காட்டுகிறது. சாதாரண மனநிலையில் இதயத்துடிப்பும் சீராக இருக்கிறது. மனஅழுத்தத்தின் போது இதயத்துடிப்பு வெவ்வேறு நிலைகளுக்கு மாறுகிறது. பயம்பதட்டம்கோபம் ஆகியவை ஏற்படுகிறது. எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட்டு எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகிறது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். 

Read more...

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி


உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்

ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.  மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி.


1-வது நாள் 1, 1, 1, -3.

2-வது நாள் 2, 2, 2, = 6.

3-வது நாள் 3, 3, 3, = 9.

4-வது நாள் 4, 4, 4, = 12.

5-வது நாள் 4, 4, 4, = 12.

6-வது நாள் 4, 4, 4, = 12.

7-வது நாள் 3, 3, 3, = 9.

8-வது நாள் 2, 2, 2, = 6.

9-வது நாள் 1, 1, 1, = 3.

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.

உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.


Read more...

விதம்விதமான தோரணங்கள் விற்பனை வாய்ப்புகள்

வியாழன், 28 ஜூன், 2012


களையே இல்லாத வீடும் வாசலும் பண்டிகை நாட்களில் அழகாகின்றன. காரணம், வாசலையும் வீட்டையும் அலங்கரிக்கிற மாவிலைத் தோரணம். அதற்குக் கூட நேரமில்லாத காரணத்தினால் பலரும் பிளாஸ்டிக்கில் ரெடிமேடாக கிடைக்கிற மாவிலையை வாங்கி வாசலில் கட்டிவிடுகிறார்கள்.

சுற்றுச்சூழலுக்குக் கேடு உண்டாக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க, சென்னையைச் சேர்ந்த மணிமேகலை இகோ ஃப்ரெண்ட்லிதோரணங்களை டிசைன் செய்கிறார். பி.எஸ்சி பட்டதாரியான இவர், இன்று முழுநேர கைவினைக் கலைப் பயிற்சியாளர். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களில் இருந்தும், ரீசைக்கிள் செய்யக் கூடிய பொருள்களில் இருந்தும் ஏராளமான பயனுள்ள அயிட்டங்களை உருவாக்க முடியும் என்கிற மணிமேகலை, விதம்விதமான தோரணங்கள் செய்வதில் ஆர்வமுள்ளோருக்கு வழிகளைக் காட்டத் தயாராக இருக்கிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘சணல்தான் பிரதானம். சணல்லயே கலர் கலரா கிடைக்குது. அது கிடைக்காதவங்க, பிளெயின் சணலை வாங்கி, அதுல கலர் பண்ணிக்கலாம். ஃபேப்ரிக் கலர், 3டி கிளிட்டர், மணிகள், கண்ணாடி, சமிக்கிகள், அலங்காரப் பொருள்கள், லெதர் லேஸ், பசை, வளையம்னு எல்லாத்துக்கும் சேர்த்து 750 ரூபாய்லேர்ந்து ஆயிரம் வரைக்கும் முதலீடு.’’


எத்தனை மாடல்? ஒரு நாளைக்கு எத்தனை?

‘‘வாசலுக்குக் கட்டறதுக்கு மாவிலை டிசைன். மத்த இடங்களுக்கு ஹார்ட்டின், மாம்பழ டிசைன்கள் அழகா இருக்கும். வரவேற்பறைகளுக்கு கண்ணாடி வச்ச தோரணம் அழகு. குழந்தைங்க ரூமுக்கு கார்ட்டூன் டிசைன்... கற்பனைக்கேத்தபடி எப்படி வேணா வெட்டி டிசைன் பண்ணலாம். ஒரு நாளைக்கு 6 தோரணம் வரை போடலாம்.’’


விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘கிரஹப்ரவேசம், கல்யாணம்னு எல்லா விசேஷங்களுக்கும் அன்பளிப்பா கொடுக்கக்கூடியது. 100 ரூபாய்லேருந்து, 275 ரூபாய் வரைக்கும் டிசைனைப் பொறுத்து விலை வைக்கலாம். 50 சதவீதத்துக்கும் மேலான லாபம் நிச்சயம்.’’


பயிற்சி?

‘‘ஒரே நாள் பயிற்சிக்கு, தேவையான பொருள்களோட சேர்த்து 250 ரூபாய் கட்டணம்.’’


Read more...

சம்பாதிப்பதைப் பற்றியும், சேமிப்பதைப் பற்றியும் குழந்தை பருவத்திலேயே கற்றுக்கொடுப்போம்

செவ்வாய், 26 ஜூன், 2012


பணத்தின் பயன்பாடு, அதன் தேவை, அதன் அருமை போன்றவைகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். கல்வி என்பது பல வழிகளிலும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும். அந்த கல்வி கிடைக்க காரணமாக அமையும் பணத்தைப் பற்றியும் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதும் அவர்களின் அறிவுரையாகும்.
தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரு கனவு இருக்கும். கல்வி, விளையாட்டு, இசை, மற்றும் இன்னபிற செயல்பாடுகளில் தம்மால் அடைய முடியாததை தம் குழந்தைகளை ஜெயிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
பள்ளியில் கல்வி கற்பது அறிவு வளர்ச்சிக்கு, விளையாட்டு உடல் ஆரோக்கியத்திற்கு. அந்த கல்விக்கும் விளையாட்டிற்கும் தேவையான பணம் பற்றியும் குழந்தைகளுக்கு கொஞ்சம் கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு பணத்தின் மீதான அருமை தெரியும் என்கின்றனர் நிபுணர்கள்.
பண்டைய காலங்களில் கல்வி முறையில் குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை உணர்த்தும் விதமான கல்வி கற்பிக்கப்பட்டது சிறிய வயதில் வந்து தங்கி பயிலும் மாணவன் கல்வி கற்று பெற்றோரிடம் செல்லும் போது அவன் கையாலேயே அளிப்பான். இதுதான் வழக்கம். இதன் மூலம் பணத்தின் அருமையும் அதன் தேவையும் சிறு வயதிலேயே உணர்ந்து கொள்ள முடியும். எனவே இன்றைய கல்வி முறை மாறிவிட்டது. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து லட்சம் லட்சமாக கொட்டி படிக்க வைக்கின்றனர். எனவே இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு பணத்தைப் பற்றி கற்பிக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகிறது.
எந்த முறைகளில் கற்பிக்கலாம்?
குழந்தைகளின் கையில் பணத்தைக் கொடுத்து எண்ணச் சொல்லலாம். இந்த பணத்தை சம்பாதிக்க எப்படி எல்லாம் போராடி வேண்டியிருக்கிறது எத்தனை மணிநேரம் உழைக்க வேண்டியிருக்கிறது என்பதையும் குழந்தைகளுக்கு கூறலாம். பணத்தின் மதிப்பையும் அதன் தேவையையும் கதைகள், விளையாட்டுக்கள் மூலம் குழந்தைகளுக்கு புரியவைக்கலாம்.
குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்க அவர்களின் கையில் பணத்தை கொடுத்து வாங்கி வரச்சொல்லலாம். மீதமுள்ள பணத்தை சேமிக்க கூறலாம்.
குழந்தைகள் வளர வளர அவர்களுக்கான தேவையும், செலவும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு மாதமும் அவர்களுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து அவர்கள் எவ்வாறு செலவழிக்கிறார்கள் என்பதை கண்காணிப்பது அவசியம்.
பணத்தினால் ஏற்படும் லாப நஷ்ட கணக்குகளைப் பற்றியும் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் எதற்கு செலவழிக்க வேண்டும்? எதற்கு செலவழிக்கக் கூடாது என்பதை குழந்தைகள் உணர்ந்து கொள்வார்கள்.
சில சமயம் குழந்தைகளிடம் இருந்து பணத்தை கடன் வாங்கி சில நாட்கள் கழித்து அதற்கு அதிகாமாக் திருப்பி தரலாம். இதனால் பணத்தை முதலீடு செய்தால் அதன்மூலம் வருவாய் பெருகும் என்பதை குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.
பணம் பத்தும் செய்யும் என்பார்கள். அந்த பணத்தை சம்பாதிப்பதைப் பற்றியும், சேமிப்பதைப் பற்றியும் குழந்தை பருவத்திலேயே கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களின் பொறுப்புணர்வு அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

Read more...

அவசர உதவிகளுக்கு பயன்படுத்த!


நீதியும் நிர்வாகமும் - ஸஹீஹுல் புகாரி: 7138

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்


அவசர உதவிக்கு

காவல் கட்டுப்பாட்டு அறை    100
தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை    101
ஆம்புலன்ஸ்        108
போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை    103
குழந்தைகள் நலன்        1098
பெண்கள் நலன்        1091
ஆம்புலன்ஸ் சர்வீஸ்
அரசு ஆம்புலன்ஸ் சேவை    108

அப்போலோ மருத்துவமனை 

ஆம்புலன்ஸ் சேவை        1066
போர்டிஸ் மலர் மருத்துவமனை    4289 2222
க்ளோபல் மருத்துவமனை    2424 2424
லைப்லைன் மருத்துவமனை    4245 4545

24
மணிநேர மருந்தகங்கள்

போர்டிஸ் மலர் மருந்தகம்    4289 2222
அப்போலோ மருந்தகம்    2452 1048
தன்வந்திரி மருந்தகம்    2440 1169

காவல் நிலையங்கள்

அனைத்து மகளிர் காவல்நிலையம்    2345 2586
ஜே2 அடையார்    2345 2583
ஜே4 கோட்டூர்புரம்    2345 2595
ஜே5 சாஸ்திரிநகர்    2345 2598
ஜே6 திருவான்மியூர்    2345 2602
நீலாங்கரை    2449 1196

மின்வாரியம்

தலைமை கட்டுப்பாட்டு அறை    155 333
காந்தி நகர்    2491 3001
இந்திரா நகர்    2254 1734
பெசன்ட்நகர்    2490 0959
திருவான்மியூர்    2448 3714
கொட்டிவாக்கம்    2451 2333

ரத்த வங்கி
கேன்சர் இன்ஸ்டிடியூட்    2235 0131

தபால் நிலையம்

பத்மநாப நகர்    2491 4261
கஸ்தூரிபா நகர்    2441 2535
சாஸ்திரி நகர்    2446 5940
திருவான்மியூர்    2448 3648
பெசன்ட் நகர்     2491 1609
கோட்டூர்புரம்    2447 4438
ஐ.ஐ.டி    2257 0446
சர்தார் படேல் சாலை    2235 0259

Read more...

ரேஷன் கார்டு முதல் வங்கி கணக்கு வரை, அவசியம் வேணும் ஆதார் கார்டு


ஏழை மக்களுக்காகவும், நடுத்தர வர்த்தக்கத்தை சேர்ந்தவர்களுக்காவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால், உரிய ஆதாரம் இல்லாத காரணத்தால் ஏழைகள் சிலரால் நலத்திட்டங்களை பெற முடிவதில்லை. அவர்களால் வங்கி கணக்குகூட தொடங்க முடிவதில்லை. குடும்ப அட்டை வாங்க முடிவதில்லை. இன்னும் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதே போல, வேலை விஷயமாக வெளி மாநிலங்களுக்கு குடிபெயரும் போது, குடும்ப அட்டை, வங்கி கணக்கு தொடங்க அடிப்படை ஆதாரம் இல்லாமல் பலரும் சிரமப்படுகின்றனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு ஆதார் கார்டுதிட்டத்தை கொண்டு வந்துள்ளது.

ஏழைகளின் அத்தியாவசிய தேவை உணவு, மருத்துவம், கல்வி. இவற்றை வழங்க அரசு பல திட்டங்களை கொண்டு வந்தாலும், போலி குடும்ப அட்டை போன்ற காரணங்களால் ஏழைகளுக்கு முழுப் பயனும் கிடைக்காமல் போகிறது. ஏழைகளுக்கு கிடைக்க வேண்டியவை, போலிகளால் சுரண்டப்படுகிறது. இதற்கு ஆதார் கார்டு மூலம் தீர்வு காண முடியும்.

ஆதார் கார்டு என்றால் என்ன?

ஆதார் என்பது 12 இலக்க அடையாள எண் கொண்ட அட்டை. இது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த எண் உங்களுடைய முகவரிக்கான அடையாளமாக இந்தியா முழுவதும் செல்லுபடியாகக் கூடியது.

ஆதார் பெயர் காரணம் என்ன?

ஆதார் என்றால் ஆதாரம் என்று பொருள். பொதுவாக, இந்தியாவில் உள்ள மக்கள் அதிகமாக பேசக்கூடிய சில மொழிகளில் ஆதார் என்ற வார்த்தை கிட்டத்தட்ட ஒரே அர்த்தத்துடனும், உச்சரிக்கவும் எளிதாக இருப்பதால் அடையாள அட்டைக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆதாரில் அடங்கியவை...

இதில் மெமரி சிப் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அதில், உங்களது ரத்த வகை, விழி அமைப்பு, இடது மற்றும் வலது கை விரல் ரேகை, பிறந்த தேதி, தாய், தந்தை ஊர், மாவட்டம், மாநிலம் மற்றும் உங்கள் அனைத்து அடிப்படை தகவல்களும் சேமித்து வைக்கப்படும்.

இதன் தனித்துவம் என்ன?

இந்த 12 இலக்க எண் உங்களுக்கே உரித்தானது. இது ஒரு ரேண்டம் எண். ஆதார் கார்டு ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். இதில் போலிகளை உருவாக்குவது இயலாத காரியம்.

எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

ஆதார் கார்டு மூலம் வங்கி கணக்கு துவக்கலாம். தொலைபேசி இணைப்பு பெறலாம். அரசு மற்றும் அரசு சாரா அனைத்து சேவைகளை பெற அடையாள சான்றாக பயன்படுத்தலாம்.

எப்படி பெறுவது?

தபால் நிலையங்கள் மூலம் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. சென்னையில் கடந்த மாதம் 24ம் தேதி ஆதார் கார்டு விண்ணப்பிக்கும் பணி அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் துவங்கியது. விண்ணப்பித்தவர்களுக்கு தற்காலிக எண் வழங்கப்படும். அதன் பிறகு 60&90 நாட்களில் ஆதார் கார்டு உங்கள் வீடு தேடி வரும். தற்காலிக எண்ணை வைத்து உங்களின் ஆதார் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வயது வரம்பே கிடையாது.

எவ்வளவு செலவாகும்?

இத்திட்டத்திற்கான முழு செலவையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. இது ஒரு இலவச திட்டமாகும்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets