உங்கள் வருகைக்கு நன்றி

நம் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்க

சனி, 31 மார்ச், 2012


குழந்தைகள் என்றாலே விளையாடுவது, உறங்குவது என்றில்லாமல், அவர்களையும் சிறு சிறு வேலைகளை செய்ய பழக்குங்கள். ஏன் என்றால், சிறு சிறு வேலைகளை செய்வது உடற்பயிற்சியாக அமைந்து அவர்களது உடலை ஆரோக்கியமாக வைக்கும்.
முந்தைய காலத்தில் தெருவில் ஓடி விளையாடிக் கொண்டிருந்ததால், பெரிதாக குழந்தைகளுக்கு உடற்பயிற்சிகள் தேவைப்படவில்லை. ஆனால் இப்போது குழந்தைகளுக்கு விளையாட நேரமோ, இடமோ இருப்பதில்லை.
எனவே, குழந்தைகளின் உடல் இயக்கத்தை ஊக்குவிக்கு வீட்டில் சிறு சிறு வேலைகளை செய்யப் பழக்கலாம். அவர்களது துணிகளை மடித்து வைப்பது, வீட்டில் களைந்திருக்கும் பொருட்களை சீரமைப்பது, சாப்பிட்டதும், உணவு சமைத்த பாத்திரங்களை சிங்கில் போட வைப்பது போன்ற வேலைகளை செய்ய வைக்கலாம்.
இதனால் அவரது உடல் இயக்கம் அதிகரித்து இளம் வயதிலேயே உடல் பருமனில் இருந்து காத்துக் கொள்ளலாம்.
குழந்தைகளை நடக்க வைக்காமல் தூக்கிக் கொண்டு செல்வதோ, வண்டியிலேயே எல்லா இடத்திற்கும் செல்வதையும் தவிர்த்து அவர்களை தேவையான அளவு நடக்க விடுங்கள். அவர்களது சுமையை அவர்களே தூக்கிச் செல்ல அனுமதியுங்கள். இது அவர்களது உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.

 

Read more...

ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் அதிகமாக அமர்வது!


ஆபீசில் வேலை பார்ப்பது, டிவி, கம்ப்யூட்டர் முன்பு செலவிடுவது என ஒரு நாளைக்கு 11 மணி நேரத்துக்கு மேல் உட்கார்வது உயிருக்கு ஆபத்து என எச்சரிக்கிறது ஆஸ்திரேலிய ஆய்வு. ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலை சீனியர் ஆராய்ச்சியாளர் ஹிட்டி வாண்டர் பிளாக் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தினார். 

அதில் 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 2.22 லட்சம் பேரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆராய்ச்சி ரிப்போர்ட் விவரம் இதுதான்: தினமும் உடற்பயிற்சி, வாக்கிங், ஒழுங்கான டயட்.. எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அலுவலகத்தில், டிவி, கம்ப்யூட்டர் முன்பு என தினமும் 11 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவரா நீங்கள்  

இன்னும் சில ஆண்டுகளில் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிக நேரம் உட்கார்ந்துவிட்டு, மற்ற நேரத்திலும் உடற்பயிற்சிகள் இல்லாமல், ஒழுங்கான டயட்டும் இல்லாமல் இருந்தால் இந்த ஆபத்துக்கான வாய்ப்பு இரட்டிப்பு. அதற்காக, அதிக நேரம் உட்கார்வது ஆட்கொல்லி என்று ஒரேயடியாக சொல்லிவிட முடியாது. 

அதிக நேரம் உட்கார்வதற்கும் வாழ்நாள் குறைவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று சொல்லலாம். நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கும் இதய நோய்கள், சர்க்கரை, அதிக பருமன் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் உட்காரும் நேரத்தைகுறைப்பது மிகமிக அவசியம். அலுவலகத்தில், கம்ப்யூட்டர், டிவி முன்பு, பஸ், டூவீலர் வாகனங்களில் செல்வது உள்பட உட்காரும் நேரத்தை முடிந்தவரை குறையுங்கள். 

முடிந்தவரை நில்லுங்கள், அதிகம் நடந்துசெல்லுங்கள். மற்ற நேரங்களிலும் உடற்பயிற்சி, மற்ற வேலைகள் செய்வது என ஆக்டிவ் ஆக இருங்கள். இவ்வாறு ஆய்வு ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் இதய நோய்கள் ஆய்வு நெட்வொர்க் மற்றும் தேசிய இதய பவுண்டேஷன் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதய பவுண்டேஷன் தலைமை அதிகாரி டோனி தர்ல்வெல் கூறுகையில், ‘‘சுறுசுறுப்பின்றி சோம்பலாக உட்கார்ந்திருப்பது இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இது ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 1.7 கோடி இறப்புகளை ஏற்படுத்துகிறது. நாம் ஓய்வாக இருக்கும் பெரும்பாலான நேரத்தை டிவி, கம்ப்யூட்டர், வீடியோகேம்கள் வீணடிக்கின்றன. இவற்றில் செலவிடும் நேரத்தை குறைத்துக் கொள்வது ஆரோக்கியமான வாழ்வை தரும்’’ என்கிறார்.

Read more...

உங்கள் கண்களைப் பாதுகாக்க இதுதான் வழி

விதவிதமான சேனல்கள் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு டி.வி.யில் ஏகப்பட்டவை இருக்கின்றன.  இடத்தை விட்டு நகராமல் பார்த்துக் கொண்டு இருக்ககூடாது. அது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முதலில் தெரிந்து கொள்ளவேண்டியது. நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் டி.வி.யின் அளவு எத்தனை அங்குலம் என்று. 9 அங்குலம் 12, 14, 19, 22, 24, 26, 32, 42, 50, 65, 103 ஏன் 160 அங்குலம் வரை மிகப்பெரிய டி.வி மார்க்கெட்டில் விற்பனைக்கு இருக்கிறது. நீங்கள் வீட்டில் எந்த அளவுள்ள டி.வி. வைத்திருக்கிறீர்களோ, அந்த டி.வி.யின் ஸ்கிரீன் அளவு எத்தனை அங்குலம் என்று தெரிந்து வேண்டும்.
 
ஏழு முதல் பதினான்கு அங்குளம் டி.வி.

உங்கள் டி.வி. ஸ்கீரின் அளவு சுமார் 7 மடங்கு இருப்பின் 4அடி தூரத்தில் தள்ளி உட்கார்ந்துதான் டி.வி. பார்க்க வேண்டும். அதாவது உதாரணத்திற்கு 19 அங்குலம் ஸ்கிரீன் அகலமுள்ள டி.வி. நீங்கள் வைத்திருந்தால் 19 அங்குலம் X 7= 133 அங்குலம் அதாவது சுமார் 11 அடி தூரத்தில் உட்கார்ந்துதான் டி.வி. பார்க்க வேண்டும்.
 
14 அங்கு டி.வி. என்றால் 98 அங்குலம் அதாவது சுமார் 8 அடி தூரத்தில் உட்கார்ந்து டி.வி. பார்க்க வேண்டும். இந்த டி.வி. அகலம், அளவு கணக்கு எல்லாம் தெரியவில்லை என்றால் கவலையே பட வேண்டாம். எந்த டி.வி.யாக இருந்தாலும் குறைந்தது 3 மீட்டர் அதாவது 10 அடி தள்ளி உட்கார்ந்து டி.வி. பாருங்கள். கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது.


சம உயரத்தில் உட்கார்ந்துதான் டி.வி. பார்க்க வேண்டும்.
 
ரூமுக்கு ஏற்றபடிதான் டி.வி. வாங்க வேண்டுமே தவிர டி.வி.க்கு ஏற்றபடி ரூமை மாற்ற முடியாது. ரூம் பெரியதாக ஆக இருந்தால் டி.வி.யும் பெரிதாக செலக்ட் பண்ணலாம். டி.வி. பார்ப்பவரும் டி.வி.யும் தரையிலிருந்து ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். டி.வி. அதிக உயரத்திலும், பார்ப்பவர் கீழேயும் உட்கார்ந்து பார்க்கக் கூடாது. பெரும்பாலான குழந்தைகள் தரையில் உட்கார்ந்து கொண்டோ, கட்டிலில் படுத்துக் கொண்டோதான் டி.வி. பார்ப்பார்கள் இது தவறு.
 
சம உயரத்தில் உட்கார்ந்துதான் டி.வி. பார்க்க வேண்டும். டி.வி. மேலேயும் பார்ப்பவர் கீழேயும் உட்கார்ந்து டி.வி.யை அதிக நேரம் பார்த்தால் கண் சீக்கிரம் களைப்படைந்து விடும், கழுத்து தசைகள் எல்லாம் வலி எடுக்க ஆரம்பித்துவிடும். எனவே சம உயரத்தில் உட்கார்ந்து டி.வி. பார்த்துப் பழகுங்கள். அதிக நேரம் தொடர்ந்து டி.வி. பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  
2
நிமிடம் கண்களை மூடிக்கொண்டு அமரலாம்
சில நிகழ்ச்சிகளை தொடர்ந்துதான் பார்த்தாக வேண்டும். அதற்காக பல மணி நேர நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் மட்டும் பார்த்துவிட்டு நடுவில் விட்டுவிட்டு வர முடியாது. குறைந்தது, விளம்பரம் போடுகிற இடைவேளையிலாவது டி.வி. ரூமைவிட்டு எழுந்து அடுத்த ரூமுக்கு போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து மறுபடியும் படம் பார்க்க ஆரம்பிக்கலாம்.
 
அல்லது 2 நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்து மறுபடியும் பார்க்க ஆரம்பிக்கலாம். இந்த மாதிரி இடைவெளிவிட்டு மறுபடியும் டி.வி. பார்ப்பது கண்களுக்கு நல்லது. டி.வி.யை தொடர்ந்து அதிக நேரம் பார்ப்பவர்களுக்கும், கம்ப்யூட்டரில் தொடர்ந்து அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும் சில நேரங்களில் தலைவலி வர வாய்ப்புண்டு.
 
இடைவெளிவிட்டு அமர்வது நல்லது

இம்மாதிரி தலைவலியை சந்திப்பவர்கள், கண்டிப்பாக கொஞ்சம் இடைவெளிவிட்டு அமர்வது நல்லது. டி.வி. பார்க்கும் ரூமில் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு டி.வி.யை பார்ப்பது நல்லதல்ல, டி.வி. வெளிச்சம் போக அந்த ரூமில் ஏதாவது ஒரு விளக்கு கண்டிப்பாக எரிய வேண்டும். சிலர் சினிமா தியேட்டரில் படம் பார்க்கும், எபெக்ட்டை வீட்டில் உருவாக்கி விடுவார்கள்.
 
மொத்த ஜன்னலையும் மூடி மொத்த ஸ்கிரீனையும் போட்டு எல்லா விளக்குகளையும் அணைத்து ரூமை நன்றாக இருட்டாக்கி டி.வி. பார்ப்பார்கள். இது கண்ணுக்கு கெடுதி. டி.வி.யிலிருந்து வரும் வெளிச்சமும் அந்த ரூமிலுள்ள வெளிச்சமும் ஒரே அளவில் இருக்க வேண்டும். டி.வி.யிலிருந்து வரும் வெளிச்சம் அதிகமாகவும், ரூமிலுள்ள வெளிச்சம் குறைவாகவும் அல்லது டி.வி. வெளிச்சம் குறைவாகவும், ரூம் வெளிச்சம் அதிகமாகவும் இருக்கக்கூடாது.

கவனம் அவசியம்
 
இது கண்களுக்கு நல்லதல்ல. டி.வி.க்கு பக்கத்திலோ, பின்னாலேயோ எங்கிருந்தோ மறைமுகமாக ஒரு வெளிச்சம் அந்த ரூமில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் ரூமிலுள்ள வெளிச்சம் டி.வி. ஸ்கிரீனில் பட்டு உங்கள் கண்ணுக்கு திருப்பி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டி.வி. ரூமைச் சுற்றி வெளிச்சம் வைத்துக்கொண்டு டி.வி.யைப் பார்த்தவர்கள் பல பேருக்கு கண் அசதி குறையும், கண் சோர்வு குறைவும், கண் களைப்பு குறைவும், வெளிச்சத்தால் மூளை தூண்டுதல் குறைவாக இருப்பதாகவும் `லைட் ரிசர்ச் சென்டர்` விஞ்ஞானி `யுகியோ அகாஷி' கூறுகிறார்.
 
எனவே டி.வி. பார்க்கும்போது கண்களின் நலனைப் பாதுகாக்க விரும்பினால், குறிப்பிட்ட தூரத்தில் இருந்து பார்ப்பதுடன், சிறிது இடைவேளை விட்டு டி.வி. பாருங்கள்

Read more...

வேப்பிலை மற்றும் வேப்பம் பூவின் மருத்துவ பயன்கள்


வேம்பின் இலை, காய் கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது.. வேப்பந்தழையின் இலை கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது.

வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை போல கொடுத்து வர அம்மை நோய் தணியும். வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.

வேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10, 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும். வேம்பின் சாறில் 10 அரிசி ,நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.

வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும். உந்தாமணி இலையை வேப்பெண்ணையில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்து, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு, கண்ட மாலை கீல் வாதம் குணமாகும்.

வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும். வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக் கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்த சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால்  மலேரியாக் காய்ச்சல் குணமாகும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாத்திரை எதுவும் இன்றிக் குணமாகும்.

கார்த்திகை மாதம் விடுகின்ற கொழுந்தை இருபத்தேழு நாள் சாப்பிட பாம்பு விடம் நீங்கும். பாம்பு கடித்தாலும் விடம் ஏறாது. ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் பதினெட்டு வகையான குட்டமும் குணமாகும். நூற்றாண்டு வேம்பின் பூ, தளிர், பட்டை, வேர், காய் உலர்த்திய சூரணத்தை ஆறு மாதம் சாப்பிட்டு வந்தால் நிச்சையம் குட்டம் முதலான தோல் நோய் அனைத்தும் குணமாகும். புளி நீக்கி பத்தியம் இருத்தல் வேண்டும்.

வேப்பிலை, எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்த மயக்கம், குடிவேறி குணமாகும். வேப்பிலை+ மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்கு பற்றிட குணமாகும்.

வேப்பிலையை பச்சையாகவும் வேக வைத்தும் அல்லது கசாயம் செய்தும் சாப்பிடடு வந்தால் தீராத நோய் அனைத்தும் தீர்ந்து விடும்

வேப்பம் பூ

வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல்,பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்பார்கள்.
5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும்.


கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். 3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும்.

வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த குன்மம் தீரும்.
காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும்.

வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும். வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.

நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும். 

வேப்பம்பட்டை நாவல்மரப்பட்டை வகைக்கு 150 கிராம் எடுத்து இதனுடன் 50 கிராம் மிளகு 50 கிராம் சீமைக்காசிக்கட்டி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூளைப்போட்டுக் காய்ச்சி எடுத்த கசாயத்தைத் தினம் இரு வேளை கொடுத்து வந்தால் நாட்பட்ட பேதி, கிராணி, சீதபேதி  குணமாகும்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets