உங்கள் வருகைக்கு நன்றி

இது ஒரு சிறு துளிதான்

புதன், 29 பிப்ரவரி, 2012


'கேரளம் கடவுளின் தேசம்' என்று அந்த மாநிலத்தின் சுற்றுலாத் துறையினர் விளம்பரம் செய்வார்கள். உலகத்தில் உள்ள அனைத்து தேசங்களும் கடவுளின் தேசங்கள்தான். ஆனால் கேரளாவை மட்டும் அவர்கள் அப்படி அழைப்பதேன்?.  பருவ மழைக்காலம். மழையென்றால் கொட்டித் தீர்க்கின்ற மழை. ஒரு துளிநீரும் தேங்கி நிற்காத அற்புதத்தை  அங்கே தான் பார்க்கலாம். மாநிலம் முழுவதும் அப்படி ஒரு வடிகால் அமைப்பு. முக்கால் வாசி இயற்கை செய்துகொடுத்தது. கால் வாசி மக்களும் அரசும் செய்வது. அந்தக் கால் வாசிதான் ஒவ்வொரு முறையும் கேரளம் என்னை ஆச்சரியப்படுத்துவது. ஊரில் உள்ள வடிகால்கள் அனைத்தும் முறைப்படிப் பராமரிக்கப்படுகின்றன. மக்கள் தங்கள் பங்குக்கு வடிகால்களில் வேண்டாததைப் போடாமல் பொறுப்போடு இருக்கிறார்கள்.
                                    
நம்மூர்களில், குறிப்பாக  நகரங்களில், புற நகர்ப் பகுதிகளில், அனேகமாக எல்லா மழை நீர் வடிகால்களும் அடைபட்டுக் கிடக்கின்றன. சாக்கடைகளின் நிலைமை இன்னும் மோசம். அவற்றில் அடைந்து கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. இதில் அரசை அல்லது உள்ளாட்சி அமைப்புக்களைக்  குறை கூறுவது எனக்கு உடன்பாடல்ல. காரணம் மக்களே நாள்தோறும் தமக்கு வேண்டாத-பழைய பேப்பர் வாங்குபவருக்குத் தேவை இல்லாத பொருட்களை, 'பிளாஸ்டிக்' பொருட்களை, சாக்கடைகளில் வீசி விடுகிறார்கள். நாலு பேர் பார்க்கும் போதே அப்படி! யாவரும் கண்ணயர்ந்து உறங்கும் நேரத்தில், போடுவதும் உண்டு !  பிளாஸ்டிகிற்கு அழிவில்லை!   இந்த பிளாஸ்டிக்கை எதைக் கொண்டு அழிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை! ஏதோ அறிவியல் ஆய்வுக் கூடங்களில்   அழிப்பது எப்படி என்று ஆய்வு செய்கிறார்களாம்.   பிளாஸ்டிக்கைக் கொண்டு சாலை அமைக்கலாம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேசினார்கள். தூத்துக்குடியில் ஒரு பரிசோதனைச் சாலை போட்டார்கள். அந்தச் சாலை இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. அந்த முயற்சி சூழலுக்குச் சிக்கல் ஆக்காத நல்ல முயற்சியாக இருக்கட்டும். அதுவல்ல எனது இப்போதைய கவலை.இந்த பிளாஸ்டிக் கழிவுகளைச் சாக்கடைகளிலும் மழை நீர் வடிகால்களிலும் வீசி  எறிந்து விளையாடும் மக்கள் மற்றவர் உயிரோடு விளையாடும் மக்கள் என்று அடையாளப்படுத்துவதற்கு என்ன செய்யலாம்  

இந்தக் கவலையோடு திருவனந்தபுரத்திலிருந்து நமது நாகர்கோவிலுக்குச்  சென்றேன். ரயில் பயணம். என்னை அழைக்க வந்த நண்பர் நெடு நாளைக்குப் பின் சந்திப்பவர். வழக்கமான நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு கொஞ்சம் தாழ்ந்த குரலில் ஆனால் அவசரமாக 'உங்களிடம் பிளாஸ்டிக் பைகள் ஏதும் இல்லையே? இருந்தால் அபராதம்தான்!'என்று கூறினார். நல்ல வேளையாக என்னிடம் அப்படி ஒன்றும் இல்லை.'ஏன்?' என்று கேட்டேன். 'கன்யாகுமரி மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை. ஆட்சித் தலைவர்  ஆணை!' என்றார். மகிழ்ச்சியாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன். பயணிகளின் கையில் பிளாஸ்டிக் பை இல்லை! கண்களைக் கசக்கிக் கொண்டேன்! என்னைக் கிள்ளிக் கொண்டேன்!. வலித்தது! கனவல்ல நனவுதான்! 'அடடாவோ அடடா!இதுவல்லவா ஊர்!என்று வியந்தேன்.'ஊரா, மாவட்டமே அப்படித்தான்!'என்றார் நண்பர். 'அபராதம் எவ்வளவு?' என்று வினவினேன். 'நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை'என்றார். 'வசூல்  எப்படி?' என்றேன்.'ஆரம்பத்தில் அறியாதவர்கள், அகப்பட்டுக்கொண்டவர்கள் என்று அரசுக் கருவூலத்துக்கு நல்ல வருமானம் 'என்றார். 'இப்போதெல்லாம் அறவே இல்லை' என்ற நல்ல தகவலையும் சொன்னார். 'வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு எப்படித் தெரியும்?' என்று வினவினேன். 'அரசு விளம்பரங்களைக் காட்டினார். தெரியாமல் கொண்டு வந்தவர்களும் தப்பவில்லை. 'உங்களை விட்டால் உள்ளூர் ஆசாமிகளும் வெளியூர்ப் போர்வையில் தப்பிக்கப் பார்ப்பார்கள்' என்று அதிகாரிகள் மறுத்து விடுவார்களாம். 'காவல் துறையின் உண்மையான கெடுபிடியை இங்கேதான் பார்க்கவேண்டும்' என்றார். இரயில் நிலையத்துக்கு வெளியே காக்கிச் சட்டைக்காரர்கள் கன கச்சிதமாக தங்கள் கடமையைச் செய்து கொண்டிருந்தார்கள்.
                                      
'ஆணை பிறப்பித்து அதனை எல்லா வகையிலும் நடைமுறைப்படுத்தும் அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் எனும் மகானுபாவர் யார்?' என்றேன் 'திரு.ராஜேந்திர ரத்னூ'.என்றார். அந்த அதிசய மாவட்ட ஆட்சித் தலைவரை எப்படி பாராட்டினாலும் மிகையில்லை.
                                         
சட்டம் போட்டதோடு நில்லாமல் பிளாஸ்டிக் தீய விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை மாவட்டம் முழுவதும் பல நிலைகளில், பல வகைகளில் அவர் செயல் படுத்தி வருவதை நண்பர் விரிவாகக் குறிப்பிட்டார். இதில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்கு பற்றியும், அரசு அதிகாரிகளின் ஈடுபாடு மிக்க ஆர்வத்தையும் பாராட்டிப் பேசினார். 'வணிகர்கள், நுகர்வோர் அனைவரும் தம் பங்கைச் சிறப்பாகச் செய்கிறார்கள் 'என்றார். 'காகிதப் பையோ, துணிப் பையோபாத்திரமோ  இன்றி இன்று கடைக்குச் செல்வார் யாரும் இல்லை' என்றார். சூழலைக்  காப்பதில் இது ஒரு சிறு துளிதான்  எனினும் இதுவே ஒரு பெரு வெள்ளமாக வளரும்.! மற்ற மாவட்டங்கள் இந்த மாபெரிய இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொள்ளும் நாள் எது?
                                         
கன்யாகுமரி மாவட்டம் கேரளத்தை அடுத்துள்ள மாவட்டம் என்பதால் படித்தவர்கள் நிறைந்த மாவட்டம் எனும் புகழ் உடையது.  படித்தவர்கள் என்பதோடு அறிவியல் உணர்வு கொண்டவர்களாகவும், சுற்றுச் சூழல் உணர்வு மிக்கவர்களாகவும், சட்டத்தை மதிக்கின்றவர்களாகவும் இருப்பது மகிழ்ச்சி தருகிறது.                                                          

Read more...

தவ்ஹீத் ஜமாத் சொன்னதை உண்மைப் படுத்தும் மம்தா பானர்ஜி !

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

மக்களை எந்த வகையிலும் ஏமாற்றவே கூடாது என்பதில் உறுதியை கடைபிடித்தும், மக்களுக்கு தொல்லைதரும் எதையுமே செய்யக்கூடாது என்பதில் மிககவனத்துடன் ஒவ்வொரு விஷயத்தையும் கடைபிடிக்க முயற்ச்சிக்கும் TNTJ சாலமறியல் போன்ற போராட்டங்களை நடத்தக்கூடாது என்று கொள்கையாகவே கொண்டு உயிர் மூச்சுடன் செயல்படுகிறது. 

சாலை மறியலை இஸ்லாம் அனுமதிக்கிறதா ?
இங்கே சொடுக்கவும் 
----------------------
TNTJ தீவிரவாதத்தை ஏன் ஆதரிப்பதில்லை
இங்கே சொடுக்கவும் 
2. http://www.youtube.com/watch?v=YXgArZp
                            ----------------------
எதிர்கட்சியாக இருந்தபோது தினமும் ஒரு சாலைமறியல் போன்ற போராட்டங்களை செய்துவந்த மம்தாபானர்ஜி, இப்போது ஆளும்கட்சியாக இருக்கும் போதுதான், இது எவ்வளவு தவறான மக்களை சிரமத்தில் ஆழ்த்தும் செயல் என்று உணர்ந்து மக்களிடம் மன்னிப்பு கேட்கிறார். 

தப்பு செய்தவர்கள் மன்னிப்பு கேட்பது இந்தக் காலத்தில் பெரிய விஷயம். அதிலும் ஆளும் கட்சியாக இருக்கும் அரசியல்வாதிகள் கேட்பது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயம். ஆனால் மன்னிப்பு கேட்டிருக்கிறார் மம்தா பானர்ஜி. கடந்த காலத்தில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்ததற்கும் கடையடைப்பு செய்ததற்கும் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.


மத்தியமாநில அரசு ஊழியர்கள்வங்கிப் பணியாளர்கள்ஆட்டோபஸ் தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தனியார் மயம்புதிய பென்ஷன் கொள்கைகளை எதிர்த்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். இதில் பங்கேற்கக் கூடாது என மேற்கு வங்க மக்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார் மம்தா. கடந்த ஆட்சியாளர்கள் வேலை நிறுத்தத்தை ஆதரித்தனர். அதனால் ஸ்டிரைக் வெற்றியடைந்தது. 

¢ப்போது அரசு ஊழியர்கள் யாராவது பணிக்கு வராமல் இருந்தால் கடுமையான நடவடிக்கை காத்திருக்கிறது. பஸ்ரயில்ஆட்டோடிராம் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். தடுத்தால் அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அவர். கடந்த காலங்களில் நீங்கள் ஸ்டிரைக் செய்யவில்லையா என யாராவது கேட்டு விட்டால்...அதற்கும் பதில் சொல்லியிருக்கிறார் அவர். திரிணாமுல் கட்சியும் கடந்த காலத்தில் ஸ்டிரைக் செய்துள்ளது. 

அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஸ்டிரைக்கால் தினக் கூலிகள் எத்தனையோ பேர் வேலை இல்லாமல்வருமானம் கிடைக்காமல் கஷ்டப்பட்டது தெரிய வந்ததும்  2 ஆண்டுகளாக ஸ்டிரைக் செய்யவே இல்லை. மேலும் ஸ்டிரைக் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதையும் தெரிந்து கொண்டோம் என்கிறார் அவர்.

வங்கி ஊழியர்அரசு ஊழியர்கள் வேலைக்கு போகாவிட்டால் பிரச்னை இல்லை. தனியார் ஊழியர்களுக்கும் தினக் கூலிகளுக்கும் அப்படியில்லை. அவர்களுக்கு வருமானம் மட்டுமல்லபல நேரங்களில் வேலையே போய்விடும். இந்த வேலை நிறுத்தத்தால் அவர்களுக்கு எந்த வகையிலும் லாபம் இல்லை எனும்போதுபல ஆயிரம் கோடி உற்பத்தி இழப்புவருமான நஷ்டம்,போக்குவரத்து முடக்கம் என பாதிப்பை மட்டும் அனுபவிக்க வேண்டும் எனச் சொல்வது எந்த விதத்திலும் நியாயமில்லை.


சாலை மறியலை இஸ்லாம் அனுமதிக்கிறதா ?
இங்கே சொடுக்கவும் 
------------------------------
TNTJ தீவிரவாதத்தை ஏன் ஆதரிப்பதில்லை
இங்கே சொடுக்கவும் 
2. http://www.youtube.com/watch?v=YXgArZpASvE
------------------------------

Read more...

அனைத்து தீமைகளுக்கும், நிச்சயம் இதற்கு பங்கு உண்டு

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

வெறும் பொழுதுபோக்கிற்காகவும், மக்கள் தங்களது அன்றாட கவலையிலிருந்து சற்று நேரம் ஓய்வுபெற்று, கேளிக்கைகளின் மூலம் மன அமைதி பெறுவதற்காகவும் மட்டுமே துவக்கப்பட்டது சினிமா. நாளடைவில் மக்கள் மனதில் கொஞ்சம் பக்தி, சமூக அக்கறையை வளர்க்கும் விதமாக, புராண பக்திப் படங்களும், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்ட படங்களும், மனதில் பதிய வைக்கும் கதையம்சம் மற்றும் கருத்தாழமிக்க பாடல்களுடன் வெளிவரத்துவங்கின.

மேடை நாடகங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற நடிகர் மட்டுமே, சினிமாக்களில் ஹீரோக்களாக வலம் வந்தனர். நாடக அனுபவம் இல்லாதவர்கள், சினிமாவில் அடியெடுத்து வைக்க முடியாது. ஒரு ஹீரோவுக்கோ, நகைச்சுவை நடிகனுக்கோ, இன்னின்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. நகைச்சுவை நடிகர்களும் கொடிகட்டிப் பறந்தனர். கதையம்சத்துடன், ஆடல் பாடல்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அன்றைய சினிமாக்கள், ரசனையுடனும், ஆரோக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களுடனும், நாகரிகமான கேளிக்கைகளுடனும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தன. காலம் செல்லச் செல்ல, மக்கள்   ரசனை மாற்றத்திற்கு ஏற்ப, திரைப்படங்களில் ஆடல், பாடல் காட்சிகள் குறைக்கப்பட்டன.
ஆனால், இப்போது வருகிற 95 சதவீத தமிழ் சினிமாக்களில், வன்முறையில் எப்படி இறங்குவது, கொலை, கொள்ளை எப்படி திட்டம் தீட்டி செய்வது, மேஜர் கூட ஆகாத பெண்ணை,  எப்படி மயக்கி காதல் செய்வது,  பெற்றோரை எப்படி ஏமாற்றுவது, பெற்றோரையும், பெரியவர்களையும் எப்படி அநாகரிகமாக அழைப்பது என சொல்லிக் கொடுக்கின்றன. உதாரணமாக,   பெரியவர்களை, யோவ்,  பெரிசு'   என்றும், தாய், தந்தையை, "கிழவன், கிழவி' என்றும் அழைப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன. இது போன்று, தமிழ் கலாசாரத்திற்கு சற்றும் ஏற்புடையதாக இல்லாத காட்சியமைப்புகளும், வசனங்களும், பாடல்களும் இடம் பெற்று குடும்பத்துடன் சினிமா பார்ப்பவர்களை முகம் சுளிக்க செய்கின்றன.
வளர்ந்துவரும் இளம் தலைமுறை கவிஞர் ஒருவர், நல்ல அழகு தமிழில், இலக்கிய நடையுடன் எழுதித் தந்த பாடலை பார்த்து தயாரிப்பாளர், "என்னய்யா இது, இந்தக் காலத்திற்கு தகுந்த பாடலா கேட்டால், ஏதோ சங்க காலத்து பாட்டையல்லவா எழுதித் தருகிறாய்' என்று கடிந்து கொண்டார். அந்தப் பாடல் வரிகளிலுள்ள கலைநயம், இலக்கிய நடை, இலக்கண வார்த்தைகள் ஆகியவற்றை எடுத்துவிட்டு, ஆங்கிலச் சொற்களுடன் ஆபாசமான வார்த்தைகளையும் புகுத்தி எழுதச் சொன்னார். தன்மானமும், தமிழ் பற்றுமுள்ள அந்த கவிஞர், அதற்கு மறுக்கவே அவருடைய வாய்ப்பு பறிபோனது. இன்றைய சினிமாக்களும் அவற்றில் வரும் காட்சியமைப்புகளும்வசனங்களும், பாடல்களும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு எந்த வகையில் உபயோகமாக இருக்கிறது என, எந்த தயாரிப்பாளர் அல்லது இயக்குனரால் சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது.அன்றைக்கு கெட்டுப் போனவர்களும், சினிமாவைப் பார்த்து திருந்தி வாழ நினைத்தனர். இன்றைக்கு திருந்தி வாழ நினைப்பவர்களும், திசைமாறிப் போகும் படியாகத்தான், இக்கால சினிமாக்கள் பெரும்பாலானவை அமைகின்றன.
என்னதான் கடைசி காட்சியில், ஒரு நல்ல முடிவையோ, ஒரு நல்ல செய்தியையோ சொன்னாலும், அதற்குமுன் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து பார்த்த வன்முறை காட்சிகளும், விரச காட்சிகளும், ஆபாச நடனங்களுமே இளம் தலைமுறை, இளவயது நெஞ்சங்களில் ஆழமாகப் பதியும். நாளுக்கு நாள் பெருகி வரும் கள்ளக்காதலுக்கும், அது தொடர்பான கொலைக்கும், இக்கால சினிமாவின் பங்கும் நிச்சயம் உண்டு என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். இக்கால சினிமாக்கள் இளம் தலைமுறையினருக்கு தேசப்பற்றையோ, தெய்வ பற்றையோ உணர்த்தாவிட்டால் பரவாயில்லை; சகித்துக் கொள்ளலாம். ஆனால், குறைந்தபட்சம் தனிமனித ஒழுக்கத்தைக் கூட உணர்த்துவதில்லை.
மீசை கூட முளைக்காத பள்ளி மாணவன், தனக்கு பாடம் சொல்லித்தரும் டீச்சரையோ அல்லது சக மாணவியையோ எப்படி வசியம் செய்வது, இழுத்துக் கொண்டு ஊரைவிட்டு ஓடுவது, பெற்றோரை எப்படி ஏமாற்றுவது, ஆசிரியரை எப்படி கொலை செய்வது போன்ற ஒழுக்க நெறியில்லாத கதைகளையும், காட்சிகளையும்தான் இக்கால சினிமாக்கள் இளைய தலைமுறைக்கு சொல்லித் தருகின்றன.
 சென்னை தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்த மாணவன், தன் ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்றே, இக்கால சினிமா, தொலைக்காட்சி தொடர்களால் ஏற்படும் விளைவுகளுக்கு உதாரணமாக சொல்லலாம். "அக்னிபாத்' என்ற இந்தி சினிமாவை 30க்கும் மேற்பட்ட முறை பார்த்து, அதன் மூலம் ஆசிரியையை கொலை செய்ய திட்டம் தீட்டினேன்' என அந்த மாணவன் கூறியுள்ளான். "ஒய்திஸ் கொலை வெறி?' பாடலை முணுமுணுக்காத குழந்தைகளே தமிழகத்தில் இல்லை. சினிமா பாடல்களும், காட்சிகளும் பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை எந்த அளவுபாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. மொத்தத்தில், இக்கால சினிமாக்களும், தொலைக்காட்சித் தொடர்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு, இன்றைய இளம் தலைமுறையினரை கெடுப்பது என கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதில் சந்தேகமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது யார் என்ற கேள்விக்குத்தான் விடை இல்லை.  

Read more...

மாணவர்களே ஆபாச வலைத் தளங்களுக்கு அடிமையாகாதீர்

வெளிநாடுகளில் வசிக்கும் 13 முதல் 14 வயதொத்த பள்ளி மாணவர்கள் பலரும் ஆபாசபடங்களை பார்வையிட ஆர்வம் காட்டுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதில் இன்டர்நெட் மூலமும், டிவிடி, மற்றும் தொலைக்காட்சி சேனல் வழியாக இந்த படங்களை அவர்கள் பார்வையிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தகவல் தொடர்புத்துறையின் அபரிமிதமான வளர்ச்சி எண்ணற்றோருக்கு சாதகமாக இருந்தாலும், பெரும்பாலோனோருக்கு சாதகமாக உள்ளது. தற்போது இணையதளங்களில் மட்டுமல்லாமல், ஐ பாட், மொபைல்போன், பத்திரிகைகள், "டிவி' "டிவிடி' உள்ளிட்ட வடிவங்களில் ஆபாசப்படங்களை மிக எளிதாக பார்க்கும் சூழல் தற்போது நிலவுகிறது. இதனால், பல்வேறு நாடுகளில் ஆபாசப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இளைய தலைமுறையினர் அதிகம் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
மாணவர்கள் ஆர்வம்
அல்பெர்டா பல்கலைக்கழகம் 439 மாணவர்களிடம் நடத்திய ஆய்வில் 74 சதவிகிதம் பேர் இன்டர்நெட் மூலம் ஆபாசபடங்களை பார்ப்பதாக ஒத்துக்கொண்டுள்ளனர். 41 சதவிகிதம் பேர் டிவிடி மூலம் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும், 57 சதவிகிதம் பேர் தொலைக்காட்சி சேனல்கள் மூலம் இத்தகைய படங்களை பார்க்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறியுள்ளனர்.

மாணவர்களின் இந்த ஆர்வம் அவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றது. எனவே பள்ளிகளில் பாலியல் கல்வியை அவசியம் ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
மன அழுத்தம் தரும்
இதேபோல் இங்கிலாந்து நாட்டில் ஆண்கள் அதிக அளவில் ஆபாச படங்களை பார்ப்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பணியிடங்கள், கணவன்-மனைவி உறவு உள்ளிட்டவற்றில் பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அண்மையில், பிரிட்டனில் ஆபாசப்படம் பார்ப்பவர்கள் குறித்து, ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஆயிரத்து 57 பேரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, 80 சதவீதம் பேர் "எக்ஸ்' தர சான்றிதழ் வழங்கப்பட்ட ஆபாசப்படங்களை விரும்பிப் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இதில், மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இத்தகைய படங்கள் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதில், 18 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிட்டன் இளைஞர்களில் நான்கில் ஒரு பங்கு இளைஞர்கள் ஆபாசப்படம் பார்க்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதனால் அதிக நேரம் தொடர்ந்து ஆபாசப்படம் பார்ப்பதால், மன அழுத்தம் ஏற்பட்டு வேலையில் கவனமின்மை, உறவுகள், தாம்பத்ய வாழ்க்கை போன்றவற்றில் பிரச்னை எழுவது கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவர்களை ஆலோசிக்கலாம் 
ஆபாசப்படம் பார்க்கும் இளைஞர்களில் மூன்றில் ஒரு பங்கினர், வாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக படங்களை பார்க்கின்றனர். நான்கு சதவீதம் பேர் வாரத்திற்கு 10 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆபாசப்படங்களை பார்க்கின்றனர். ஆண்கள் சராசரியாக வாரத்திற்கு 2 மணி நேரமும், பெண்கள் 15 நிமிடங்களும் ஆபாசப்படங்கள் பார்க்கின்றனர். இத்தகைய இளைஞர்கள் தான் அதிக அளவில் மன அழுத்தத்தால் பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்திப்பது நல்லது என்று அறிவுறுத்தியுள்ளனர் உளவியலாளர்கள்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets